Tuesday, January 1, 2013

உணர்வுகளோ வலிகளோ கவிதையின் உயிர்



கவிதை எழுதுகிறார்கள்
நீண்ட வரிகளில் - அதனை
வரிக்(வசன) கவிதை எனலாம்...
கவிதை எழுதுகிறார்கள்
ஓரெழுத்தையோ
ஒரு சொல்லையோ
ஒரு வரியையோ(வசனத்தையோ)
அடிகளாகத் தொடுத்து - அதனை
புதுக் கவிதை எனலாம்...
இப்படியே படித்து விட்டு
நல்ல கவிதை என்றேன்...
"அதற்காகவா
நான் எழுதினேன்...
என் கவிதையில்
என் வலிகளைத் தானே
கொட்டி எழுதியுள்ளேன் - அது
உமக்குத் தெரியவில்லையா?" என்று
எனக்குப் பதிலும் கிட்டியதே...
உண்மையைத் தான் சொல்கிறேன்
இலக்கணக் கவிதையாயினும் சரி
இலக்கணம் குறைந்த கவிதையாயினும் சரி
படிக்கும் போது
உணர்வுகளோ வலிகளோ
படிப்பவர் உள்ளத்தில்
மாற்றத்தை உண்டுபண்ணினாலே
கவிதை
இல்லையேல் - அவை
கிறுக்கல்களே!
சிலரது
கிறுக்கல்கள் கூட
கவிதை ஆகிறது என்றால்
நறுக்கென - தங்கள்
உணர்வுகளையோ வலிகளையோ
கொட்டி எழுதியதால் தானே!

3 comments:


  1. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
      புத்தாண்டில் தளத்திற்கு வருகை தந்து
      கருத்துக்கூறி வாழ்த்துப் பகிர்ந்தமைக்கு
      மிக்க நன்றி.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.