Thursday, August 27, 2015

புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03

http://www.ypvnpubs.com/

எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.
தூய தமிழ் பேணும் பணி
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்
உளநலப் பேணுகைப் பணி
யாழ்பாவாணனின் எழுத்துகள்
யாழ்பாவாணன் வெளியீட்டகம்
நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
இவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.

http://www.ypvnpubs.com/

இப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.
இப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.
எனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.

http://www.ypvnpubs.com/

Saturday, July 18, 2015

பாப்புனைய முன் இதைப் படியும் காணும்!


பாப் புனையும் வேளை - அதாவது
கவிதை எழுதும் வேளை - நாம்
எழுதுவது எல்லாம் பா/கவிதை என
எந்த அளவுகோலை வைத்து - நாம்
எடை போடுகிறோம் என்றறியாத
பா/கவிதை புனையும் உள்ளங்களே
"கவிதை என்பது உணர்வு கடத்தி..." என்ற
பதிவைக் கொஞ்சம் படித்தால்
தெளிவாகப் பா/கவிதை புனையலாமே!

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும்" என்கிறான்

இதனைப் படித்ததும் - தாங்கள்
எழுதிய/ புனைந்த பா/கவிதை இல்
எதுகை, மோனை, படிமம் - அத்தோடு
அழகான செய்தியும் இருப்பதை
உறுதிப்படுத்தினால் மட்டும் போதாதே!
மேலும்,
என்ன தான் இருக்க வேண்டுமென
அடுத்துவரும் அடிகளைப் படியுங்க...

கவிதை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை செய்தித் தாளும் இல்லை
கவிதை விளம்பரச் சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை
பிறர் உணரச் செய்பவை
கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில்
கவிதை ஒரு உணர்வு கடத்தி!
இவ்வாறு
அடுத்துவரும் அடிகளில் - அறிஞர்
உணர்த்த வருவது என்ன?

இலக்கண அறிவிற்குள் இறுக்காமல்
சொல்களை அடுக்கி அழகாக்காமல்
செய்தி மணம் வீசாமல்
விளம்பர முகம் வெளிப்படாமல்
நாம் உள்வாங்கிய உணர்வை
பிறர் உணரும் வண்ணம்
வெளிப்படுத்தும் ஊடகமே கவிதையென
அறிஞர் உணர்த்துவதைக் காணும்!

கவிதை வழியே நல்ல கோட்பாடுகளை (தத்துவங்களை)
எளிமையாகப் புகுத்தும் வல்லமை கொண்ட
அறிஞர் ரமணி அவர்களின் கவிதையை
ஒன்றுக்கு நான்கு தடவை படிக்க
பா/கவிதை புனையும் ஆற்றலும் திறனும்
தங்களுக்கு வந்து சேருமென்ற நம்பிக்கை
என் உள்ளத்தில் நிறைந்தமையால் பகிருகிறேன்!
பா/கவிதை புனைய விரும்பும் ஒவ்வொருவரும்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படித்து
பயனீட்ட முன்வாருங்களென அழைக்கின்றேன்!
http://yaathoramani.blogspot.com/2015/07/blog-post_16.html

Wednesday, July 1, 2015

உங்களுக்கு மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) தெரியுமா?

துளிப்பா (ஹைக்கூ) பற்றியும் அறிந்திருப்பியள்
சென்ரியு என்றொன்றும் இருக்கிறாதாம்
இன்னும் எத்தனையோ இருக்கலாம்
என்றாலும்
குறள்வெண்பா என்பதும் யாவருமறிந்ததே
இணைக்குறள் ஆசிரியப்பா என்பதும்
நீங்கள் அறியாமல் இருக்கமுடியாதே
என்றாலும்
குறும்பா (லிமரிக்) பற்றியும் அறிந்திருப்பியள்
ஆனாலும்
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றியும்
உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்
எப்படியாயினும் - எனக்கு
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றித் தெரியாமையால்
நான் படித்ததைப் பகிருகிறேன் இங்கே!

குறும்பைச் சொல்லிச் சிரிக்க வைக்கும்
ஐந்தடிக் குறும்பாவை விட
நையாண்டி பண்ணிச் சிரிக்க வைக்கும்
நான்கடி மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு)
எப்படி என்று எண்ணிப் பாருங்களேன்!

"1, 2 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும்,
3,4 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும்
முடிய வேண்டும்." என்று கீழுள்ள
பதிவை ஆக்கியோர் சொல்லுகிறார் பாரும்!
இணைப்பு:
http://kaalapayani.blogspot.com/2009/05/blog-post_11.html

"மிக எளிதான வடிவம்.
மொத்தம் நான்கே வரிகள்.
aa bb என்ற rhyming pattern.
பொதுவாக க்ளெரிஹ்யு கவிதைகள்
ஹாஸ்ய ரசம் ததும்புவனவாக இருந்தாலும்
சீரியஸ் விஷயங்களைக் கூட
நச் எனச் சொல்லலாம்." என்று கீழுள்ள
பதிவை ஆக்கியோர் சொல்லுகிறார் பாரும்!
இணைப்பு:
http://wp.me/pTWRs-69v

"திரையில் அழகாய் மின்னிய பெண்ணவள்
விரைவாய் வீட்டிற்குப் போனதும் அழகற்றவள்
அழகுப்படுத்தினால் எவளும் அழகாய் மின்னலாம்
அழகாய் மின்னயவளை நம்பியவன் ஏமாளி!

தேடல் உள்ளவரை அறிவு பெருகுமே
தேடிப் பொறுக்கிப் படித்தவர் அறிவாளி
பாராமுகமாய் படிப்பைக் கசக்குது என்றவர்
மக்கள்முன் பாராமுகமாய் ஒதுங்கிடும் அறிவிலி!

வாக்குப் போட்டவர் நாட்டில் அலைகின்றார்
வாக்குப் பெற்றவர் நாட்டைக் கவனிக்காராம்
தேர்தல் வந்தால் வேட்பாளர்கள் வருவார்கள்
வென்றதும் நாடாளுமன்ற நாற்காலி துடைப்பாராம்"
என்றவாறு
நான் எழுதிக் கிறுக்கிய கிறுக்கலை
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) என்றெண்ணாமல் - கொஞ்சம்
மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கிப் பார்த்தே
நன்றே படித்துத் தேறி வந்தே - என்
மகிழ்வூட்பாவில் (க்ளெரிஹ்யு) பிழை கண்டுபிடியுங்களேன்!

கீழுள்ள பாவில் என்னை நறுக்கியே
எழுதிப் பார்த்தேன் படித்துப் பாரும்

"யாழ்பாவாணன் பாப்புனையக் கற்றுத்தர வந்தாராம்
வாழ்க்கையில் தொல்லையாம் அடிக்கடி தொடராராம்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களோ தளராராம்
பாப்புனைய உதவும் பதிவுகளைப் பகிருவாராம்" என

முதலிரு அடிகளில் யாழ்பாவாணனின் இழுபறியும்
ஈற்றிரு அடிகளில் பிறர் பதிவுகளின் பகிர்வும்
நன்றே நடைபெறுவதைப் பாரும் -என்றே
இருவேறு வெளிப்பாட்டைப் பகிர்ந்தேன் - இது தான்
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) எழுதவுதவும் தகவலா?
எதற்கும் மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கி
தெரிந்து கொண்டால் எழுதுவீர் மகிழ்வூட்பா!
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - இப்படித் தான்
புதிய புதிய தகவலைத் தேடித் தேடியே
புதிய புதிய பாவண்ணங்களில் இறங்கியே
புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்தியே - நீங்கள்
உங்களைப் பாவலராக அடையாளப்படுத்த முயலுங்கள்!

இதென்னங்க மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) - அன்று
சங்க இலக்கியத்தில் இடம்பெற்று இருந்த
நையாண்டிப் பாடல் (வசைப்பாடல்) ஒன்றைப் பாரும்...
"ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ" என்று
கேலியும் கிண்டலுமாய் கம்பர் விட்ட
விடுகதை ஔவையார் காதில் பட்டதும்
தன்னை நையாண்டி செய்த கம்பரை
ஔவையார் வசைபாடித் தீர்க்கிறார் பாரும்!

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி - இந்த
சங்க இலக்கியப் பாடல் விளக்கமறியலாம்...
http://thamizharukkaaga.blogspot.com/2012/05/blog-post_20.html

Friday, June 12, 2015

உங்களுக்கும் துளிப்பா (ஹைக்கூ) எழுத வருமே!


ஓலைக் குடிலை நாடி
ஓட்டம் பிடிப்போரைப் பாரென்று
நாற்சந்தியில்
நாலாள் பேசிக்கொள்ள
காதுக்கெட்டிய பக்கமாய்
கண்ணாலே மேய்ந்தேன்...

உண்ணான
கண்ணாளன் வீட்டை
ஆளைஆள் விலத்திக்கொண்டு
"என்னண்ணே!
சுகமாய் இருக்கிறியளே?" என்று
கேள்வி மேல் கேள்வி கேட்டு
சுகமறியும் ஆள்களைக் கண்டேன்...

கணக்கர் சித்திரபுத்திரன் கடையில
காசாளராகப் பணியாற்றும்
ஏழைக் கண்ணாளனுக்கு
வாழைக்குட்டி நல்வாய்ப்புத் தாளில்
கோடி உரூபா பரிசு
விழுந்திருப்பதைக் கேள்விப்பட்டதும்
சுகமறியக் குழுமிய ஆள்களாம்...

காசில்லாதவர் என்று
எல்லோருமே கழித்து விட்டமையால்
ஏழைக் கண்ணாளனுக்கு
எப்பனும் எவரையும் தெரியாது தான்...
இப்ப என்னவென்றால்
வாழைக்குட்டி நல்வாய்ப்புத் தந்த
கோடி உரூபாவைக் கேள்வியுற்று
உறவு பேண வந்திட்டங்களாம்...

என்னமோ ஏதோவென்று
கண்ணாளனைக் கண்டறிய
"காசில்லையென்றதும் கழிச்சுவிட்டவங்க...
காசைக்கண்டதும் கைகுலுக்கலாமோ?
காசே தான் கடவுளடா!" என்றும்
"நேற்றோ என்னை ஒதுக்கி வைத்தவர்
இன்றோ என்னை அணைக்க வருகிறார்
கை நிறையக் காசு!" என்றும்
"நேற்றுவரை வீட்டுக்கு நாய் காவல்
இன்றிலிருந்து நம்மாளுகள் காவல்
கோடி உரூபா நல்வாய்ப்பு!" என்றும்
"நேற்றுவரை கடனிருக்கக் கனவிலே காசு
இன்றிலிருந்துக் கனவின்றித் தூக்கம் ஆச்சு
நல்வாய்ப்பாய் கோடி உரூபா!"  என்றும்
துளிப்பா (கைக்கூ) வாசித்தாரே!

"காதலி! காதலித்துத் தோற்றுப் போ!
பா/கவிதை புனைய வருமாம்" என்று
நானும் பல ஊடகங்களில் படித்தேன்...
பட்ட புண்ணையும் தொட்ட துயரையும்
உள்ளத்து மாற்றங்களையும்
உணர்வோடு வெளிக்கொணர்ந்தால்
கண்ணாளனைப் போலவே
துளிப்பா (கைக்கூ) எழுத வருமே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே!
மேலும், தகவலறிய
உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?
http://paapunaya.blogspot.com/2014/06/blog-post_20.html

Sunday, May 24, 2015

வாங்க, யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க!


கண்டேன் அறிஞர் ஒருவரின் பதிவை
(அந்நியன் கணக்கு - ஆக்கம் அறிஞர் கீதா
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/05/ANNIYAN-KANAKKU.html)
கண்டதும் படித்ததும் - என்
எண்ணத்தில் மீள மீள
எண்ணிப் பார்க்க வைத்த
அடிகளை அப்படியே தருகின்றேன்!

அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பில்லைங்க’’
“அஞ்சு கோடி பேர்
அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பு மாதிரிதாங்க தெரியுது...’’
“அஞ்சு கோடி பேர்,
அஞ்சு கோடி தடவை
அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘அய்யோ... பெரிய தப்புங்க...’’  



பதிவைப் படித்த பின்னர் - அந்த
பதிவிற்கான கருத்தாக - நான்
பா/கவிதை போல எழுதிய வரிகளில்
மாற்றம் செய்து பலருக்குக் காண்பித்து
உங்களாலும் பா/கவிதை புனைய முடியுமென
உங்கள் ஆற்றலை வெளிக்கொணர
கடுகளவு முயற்சி எடுக்கிறேன்!
"வாங்க,
யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க!" என்று
எல்லோரையும் அழைத்திங்கே - அந்த
அறிஞரின் பதிவைப் படித்த பின்
நான் கிறுக்கும்
பா/கவிதை போன்ற வரிகளாயினும் சரி
துளிப்பா, குறும்பா, புதுப்பாவாயினும் சரி
யாப்பறிந்த (மரபுப்) பாக்களில் எதுவாயினும் சரி
உங்கள் கைவண்ணங்களில் ஆக்கி
பின்னூட்டங்களில் இட்டு உதவுங்கள்!

இஞ்சாருங்கோ - எங்களால
பா/கவிதை புனைய முடியாதென
ஒரு போதும்
மறுப்புக் கூற வேண்டாமுங்கோ...
"மிச்சக்காசு கிட்டாமையால் வயிறு கடிக்குதே!" என்றோ
"மிச்சக்காசைச் சுருட்டி வீடு வாசல் கட்டுவாங்களோ!" என்றோ
"மிச்சக்காசுக்கு இனிப்பை இடிக்கிறவங்களால
நம்மாளுங்க நீரிழிவால துன்பப்படுறாங்களே!" என்றோ
"மிச்சக்காசாக
ஒரு உரூபாவாயினும் நடத்துனர் தந்திருந்தால்
ஒரு முடர் தேத்தண்ணி குடித்திருப்பேனே!" என்றோ
உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களையாவது
வெளிக்கொணர்ந்தால் பா/கவிதை ஆகுமே - அதில்
பா/கவிதை இயல்பு வெளிப்பட்டு விட
யாப்பில் கூட இயல்புத் தொடை என்பாங்க - இனி
உங்களால பா/கவிதை புனைய முடியும் தானே!

இஞ்சாருங்கோ - உங்கள்
யாழ்பாவாணனின் பா/கவிதை போன்ற கிறுக்கலை
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...

மிச்சக் காசு கொடுக்க முடியாமைக்கு
மாற்று வழியாக
வேண்டாம் வேண்டாமென
இனிப்பை இடிக்கிறாங்க...
இதெல்லாம்
எப்ப இருந்து என்றால்
அந்தக் காலத்து
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்து
என்கிறாங்க,,,
ஈழத்தில இப்படி
இனிப்பை இடிக்கிற வழக்கம்
தொடங்கின காலத்தில
கருணாநிதி ஆட்சிக் காலச் செய்தி என
நாளேடு ஒன்றில் படித்த நினைவு!
இப்ப என்னவென்றால்
இனிப்பை இடிக்கிற வழக்கம் போய்
எங்கள் வயிற்றிலடிக்கிற கதை
தொடங்கிற்று...
சில்லறை இல்லை - அடுத்த
வருகையின் போது தரலாமென
சிலர் சுருட்டுறாங்க...
சில்லறை இல்லை என்றால்
மலடியைப் பிள்ளை பெற வைக்க ஏலுமே என்று
என் பெண்டாட்டியையும் அழவைச்சு
(எமக்குக் குழந்தைகள் இல்லை)
எங்கட வயிற்றிலடிப்பவங்க
பெருகிக் கிட்டே இருக்காங்க!
வணிக நிலையங்களில்
இனிப்பை இடிப்பாங்க என்றால்
தெருக்கோடியிலும் (தெருவெளி வணிகர்கள்) சரி
ஊர்திப்பயணங்களிலும் (நடத்துனர்கள்) சரி
சில்லறை இல்லை என்றெல்லோ
பகற் கொள்ளை அடிக்கிறாங்க!
ஈழத்தில... இந்தியாவில... உலகத்தில...
இது உலாவுவதாகத் தகவல்!

என்னங்கோ - உங்கள்
யாழ்பாவாணனின் கிறுக்கலைப் படித்தாச்சோ
இனி என்னங்க இழுபறி - யாழ்பாவாணனின்
பாவண்ணத்தைத் தோற்கடிக்கவாவது - உங்கள்
கைவண்ணங்களாலே பாப்புனைந்து வெளியிட்டு
எல்லோரையும் யாப்பறிந்து பாப்புனைய
விரும்ப (ஆசை) வைக்க முன்வாருங்களேன்!