Monday, December 31, 2012

எழுதுகோல் பிடிக்கலாம் வாங்க...


உள்ளம் நிறைய
வெள்ளம் போல ஓடும்
எண்ணங்களை - விரும்பிய
வண்ணங்களில் எழுத
எழுதுகோல் பிடிக்கலாம் வாங்க!
எழுத்துக்கு வாசகர்
பேச்சுக்கு, பாட்டுக்கு கேட்போன்
அரங்கக் காட்சிகளுக்கு பார்ப்போன்
மொத்தத்தில் எல்லாவற்றுக்கும்
பயனாளர் - அவர்கள்
எதிர்பார்ப்பது களிப்பும் நிறைவுமே!
நாம் விரும்பியவாறு
எமது எண்ணங்களை
எழுதுவது எழுத்தல்ல...
பயனாளர்
களிப்பும் நிறைவுமடைய
எழுதுவதே எழுத்து!
எழுதுவதால் எமக்கு நிறைவும்
வாசிப்பதால் வாசகனுக்குக் களிப்பும்
கிடைக்கும் வண்ணம்
எழுதுகோல் பிடிக்கலாம் வாங்க!