Monday, December 31, 2012

எழுதுகோல் பிடிக்கலாம் வாங்க...


உள்ளம் நிறைய
வெள்ளம் போல ஓடும்
எண்ணங்களை - விரும்பிய
வண்ணங்களில் எழுத
எழுதுகோல் பிடிக்கலாம் வாங்க!
எழுத்துக்கு வாசகர்
பேச்சுக்கு, பாட்டுக்கு கேட்போன்
அரங்கக் காட்சிகளுக்கு பார்ப்போன்
மொத்தத்தில் எல்லாவற்றுக்கும்
பயனாளர் - அவர்கள்
எதிர்பார்ப்பது களிப்பும் நிறைவுமே!
நாம் விரும்பியவாறு
எமது எண்ணங்களை
எழுதுவது எழுத்தல்ல...
பயனாளர்
களிப்பும் நிறைவுமடைய
எழுதுவதே எழுத்து!
எழுதுவதால் எமக்கு நிறைவும்
வாசிப்பதால் வாசகனுக்குக் களிப்பும்
கிடைக்கும் வண்ணம்
எழுதுகோல் பிடிக்கலாம் வாங்க!

Saturday, February 4, 2012

உங்கள் யாழ்பாவாணன்


பா புனைதல் என்பது இலகுவானதல்ல. அதற்கும் இலக்கணம் உண்டு. பா புனைதலுக்கு வேண்டிய இலக்கணங்களை எடுத்துச் சொல்லவே இவ்வலைப் பூவை வடிவமைத்தேன்.
உங்கள் யாழ்பாவாணன்.