Sunday, May 24, 2015

வாங்க, யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க!


கண்டேன் அறிஞர் ஒருவரின் பதிவை
(அந்நியன் கணக்கு - ஆக்கம் அறிஞர் கீதா
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/05/ANNIYAN-KANAKKU.html)
கண்டதும் படித்ததும் - என்
எண்ணத்தில் மீள மீள
எண்ணிப் பார்க்க வைத்த
அடிகளை அப்படியே தருகின்றேன்!

அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பில்லைங்க’’
“அஞ்சு கோடி பேர்
அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பு மாதிரிதாங்க தெரியுது...’’
“அஞ்சு கோடி பேர்,
அஞ்சு கோடி தடவை
அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘அய்யோ... பெரிய தப்புங்க...’’  



பதிவைப் படித்த பின்னர் - அந்த
பதிவிற்கான கருத்தாக - நான்
பா/கவிதை போல எழுதிய வரிகளில்
மாற்றம் செய்து பலருக்குக் காண்பித்து
உங்களாலும் பா/கவிதை புனைய முடியுமென
உங்கள் ஆற்றலை வெளிக்கொணர
கடுகளவு முயற்சி எடுக்கிறேன்!
"வாங்க,
யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க!" என்று
எல்லோரையும் அழைத்திங்கே - அந்த
அறிஞரின் பதிவைப் படித்த பின்
நான் கிறுக்கும்
பா/கவிதை போன்ற வரிகளாயினும் சரி
துளிப்பா, குறும்பா, புதுப்பாவாயினும் சரி
யாப்பறிந்த (மரபுப்) பாக்களில் எதுவாயினும் சரி
உங்கள் கைவண்ணங்களில் ஆக்கி
பின்னூட்டங்களில் இட்டு உதவுங்கள்!

இஞ்சாருங்கோ - எங்களால
பா/கவிதை புனைய முடியாதென
ஒரு போதும்
மறுப்புக் கூற வேண்டாமுங்கோ...
"மிச்சக்காசு கிட்டாமையால் வயிறு கடிக்குதே!" என்றோ
"மிச்சக்காசைச் சுருட்டி வீடு வாசல் கட்டுவாங்களோ!" என்றோ
"மிச்சக்காசுக்கு இனிப்பை இடிக்கிறவங்களால
நம்மாளுங்க நீரிழிவால துன்பப்படுறாங்களே!" என்றோ
"மிச்சக்காசாக
ஒரு உரூபாவாயினும் நடத்துனர் தந்திருந்தால்
ஒரு முடர் தேத்தண்ணி குடித்திருப்பேனே!" என்றோ
உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களையாவது
வெளிக்கொணர்ந்தால் பா/கவிதை ஆகுமே - அதில்
பா/கவிதை இயல்பு வெளிப்பட்டு விட
யாப்பில் கூட இயல்புத் தொடை என்பாங்க - இனி
உங்களால பா/கவிதை புனைய முடியும் தானே!

இஞ்சாருங்கோ - உங்கள்
யாழ்பாவாணனின் பா/கவிதை போன்ற கிறுக்கலை
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...

மிச்சக் காசு கொடுக்க முடியாமைக்கு
மாற்று வழியாக
வேண்டாம் வேண்டாமென
இனிப்பை இடிக்கிறாங்க...
இதெல்லாம்
எப்ப இருந்து என்றால்
அந்தக் காலத்து
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்து
என்கிறாங்க,,,
ஈழத்தில இப்படி
இனிப்பை இடிக்கிற வழக்கம்
தொடங்கின காலத்தில
கருணாநிதி ஆட்சிக் காலச் செய்தி என
நாளேடு ஒன்றில் படித்த நினைவு!
இப்ப என்னவென்றால்
இனிப்பை இடிக்கிற வழக்கம் போய்
எங்கள் வயிற்றிலடிக்கிற கதை
தொடங்கிற்று...
சில்லறை இல்லை - அடுத்த
வருகையின் போது தரலாமென
சிலர் சுருட்டுறாங்க...
சில்லறை இல்லை என்றால்
மலடியைப் பிள்ளை பெற வைக்க ஏலுமே என்று
என் பெண்டாட்டியையும் அழவைச்சு
(எமக்குக் குழந்தைகள் இல்லை)
எங்கட வயிற்றிலடிப்பவங்க
பெருகிக் கிட்டே இருக்காங்க!
வணிக நிலையங்களில்
இனிப்பை இடிப்பாங்க என்றால்
தெருக்கோடியிலும் (தெருவெளி வணிகர்கள்) சரி
ஊர்திப்பயணங்களிலும் (நடத்துனர்கள்) சரி
சில்லறை இல்லை என்றெல்லோ
பகற் கொள்ளை அடிக்கிறாங்க!
ஈழத்தில... இந்தியாவில... உலகத்தில...
இது உலாவுவதாகத் தகவல்!

என்னங்கோ - உங்கள்
யாழ்பாவாணனின் கிறுக்கலைப் படித்தாச்சோ
இனி என்னங்க இழுபறி - யாழ்பாவாணனின்
பாவண்ணத்தைத் தோற்கடிக்கவாவது - உங்கள்
கைவண்ணங்களாலே பாப்புனைந்து வெளியிட்டு
எல்லோரையும் யாப்பறிந்து பாப்புனைய
விரும்ப (ஆசை) வைக்க முன்வாருங்களேன்!

Saturday, May 23, 2015

இலக்கணம் அறிந்து எழுதுகோல் ஏந்து


"நான் என்ன
என்னைக் காதலி என்று தானே கேட்டேன்!
அதற்கு - நீ
என் கன்னம் சிவந்து வீங்க
காலணியால் அடிப்பாயா?" என்று ஆணெழுத
"நானாவது
கன்னம் சிவந்து வீங்க
காலணியால் அடித்தேன்! - என்
கணவன் அருகில் இருந்திருந்தால்
என்னைக் காதலி என்று கேட்டதுமே
என் மனைவியிடமா கேட்கின்றாய் என்று - உன்
கழுத்தையே அறுத்திருப்பாரே!" என்று பெண் பதிலிறுக்க
அழகான பா/கவிதை என்று படித்தவர் புகழ
மிச்சம் சொல்லவும் வேண்டுமா? - தன்னை
பாவலரென்றே முழங்கித் திரிவர் சிறியர்!
இலக்கியம் தோன்றிய பின்னரே
இலக்கணம் தோன்றியது என்பதை
கணக்கில் வைத்துக்கொண்டு - எவரும்
கதை, கட்டுரை, நாடகம் எழுதினாலும்
பா/கவிதை, இசைப்பாட்டு, திரைப்பாடல் எழுத
இயலாதென்பதை எள்ளளவேனும் அறிந்தீரா?
எழுத்து, அசை, சீர், தளை,
பிணை, அடி, தொடை,
பா, பாவினம் என ஒன்பது
உறுப்புகள் கொண்ட தொகுப்பே
பாவிலக்கணம் என்றுரைக்கிறார்
"யாப்பரங்கம்" நூலாசிரியர்
புலவர் வெற்றியழகன்! - இங்கே
தமிழில் 30 + 1 எழுத்துகளா
தமிழில் 247 எழுத்துகளா
என்றெல்லோ மோதுகினம்!
"உன்கண்ணில் நீர்வழிந்தால் -- என்னெஞ்சில்
   உதிரங் கொட்டு தடீ;" என்பது
காதல் கவிதையா? குழந்தைக் கவிதையா?
என்றெல்லோ மோதுகினம்!
பாரதி பாடலும் நன்னூல் அறிவும்
எள்ளளவேனும் அறிந்திருந்தால் கூட
பா/கவிதை புனையலாம் காண் - நீ
பாப்புனைய விரும்பும் ஒருவரா - அப்ப
பா/கவிதை ஒன்றைக் கண்டால்
படித்துப் பாடுபொருள் கண்டுபிடி - மேலும்
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில்
தமிழில் 369 எழுத்துகள் உண்டாம் - நான்
கண்டேன் ஊமைக்கனவுகள் தளத்தில் - பாரும்
பாப்புனைய விரும்பும் எல்லோருக்கும் ஏற்ற
இலக்கண ஆய்வுப்பாடம் ஆங்கே இருக்கே!
இழுத்தடிப்பு வேண்டாம் இப்பவே செல்லங்கே
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கியே படித்தங்கே
http://oomaikkanavugal.blogspot.com/2015/04/blog-post_24.html
இலக்கணம் அறிந்து தெளிந்த பின்
எழுதுகோல் ஏந்து இலகுவாய்ப் பாப்புனையலாம்!


Tuesday, May 5, 2015

இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்

இசைக்குப் பாடல் புனைவது பற்றிய அடிப்படைக்குறிப்புகளை கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.
http://paapunaya.blogspot.com/2014/01/blog-post_11.html
மேலும், இசைக்குப் பாடல் புனையும் வேளை எதுகை, மோனை போன்ற இலக்கணத் தெளிவு வேண்டும். அவ்வாறு எல்லாம் சரிபார்த்தீர்களா என்று கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.
http://paapunaya.blogspot.com/2014/09/blog-post_27.html

ஆனால், இன்று கவியரசர் கண்ணதாசன் வரிகள் எப்படிப் பாடலாயிற்று என்று பாருங்கள். ஈற்றுச் சீர் 'தான்' என்று முடியத் தக்கதாக கண்ணதாசன் ஆக்கிய கவிதையைப் பாருங்கள். இப்படி இசை சொட்டப் பாப்புனைந்தால், இசைக்குப் பாடல் புனைய வருமே

அத்தான்...என்னத்தான்...
அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி

அவர் கையைத்தான்
கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி

ஏனத்தான் என்னைப் பாரத்தான்
கேளத்தான் என்று சொல்லித்தான்
சென்ற பெண்ணைத்தான்
கண்டு துடித்தான் அழைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான் வளைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

ஈற்றுச் சீர் 'தான்' என்று முடியத் தக்கதாக கவியரசர் கண்ணதாசன் ஆக்கிய வரிகளில் இசை துள்ளி விளையாடுவதைப் பார்த்தீர்களா? திரை இசைப் பாடல்கள் எல்லாமே இசை துள்ளி விளையாடும் பா/கவிதை ஆக இருந்தே வந்திருக்கிறது. மேலும், பிறமொழிச் சொல்கள் உட்புகுத்தாத/ திணிக்காத பா/கவிதை வரிகளாக இவ்வெடுத்துக்காட்டு அமைந்திருக்கிறது. நீங்களும் இப்படித் தூயதமிழில் துள்ளி விளையாடும் இசையுள்ள பாக்கள்/கவிதைகள் புனைந்து பாருங்கள். பின் திரை இசைப் பாடல் போல அமைய இசைச்சுப் பாருங்கள்; அதற்கேற்ப உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்துங்கள். அவ்வாறு கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கீழே பாருங்கள்.

பாடல்: அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
குரல்: P.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
படம் : பாவமன்னிப்பு
இசை: விஸ்வநாதன் - இராமமூர்த்தி

அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி
அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

ஏனத்தான் என்னைப் பாரத்தான் கேளத்தான் என்று சொல்லித்தான் (2)
சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான் அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் முத்துத்தான் உடல் பட்டுத்தான் (2)
என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

நீங்களும் ஆக்கிய உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்தியதும் இசைச்சுப் பார்க்கையில் திரை இசைப் பாடல் போல அமைந்திருந்ததா? இதோ கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் ஒழுங்குபடுத்தப்பட்டதும் திரை இசைப் பாடலாக ஒரு காலத்தில் மின்னிய பாடலைக் கேட்டுப் பாருங்கள்.


மேலுள்ள பாடல் வரிகளைப் படித்த பின் பாடலையும் கேட்டுப் பார்த்து என்னதான் புரிந்து கொண்டீர்கள்? 'தான்' என்றவாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைவைதைக் கண்டிருப்பீரே! அந்த இசையே பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பதை அறிவீர்களா? இசையுள்ள பா/கவிதை எழுத முடிந்தால்; அதற்கும் இசை அமைக்கலாம். இசை மெட்டுக்கும் பாடல் எழுதலாம். எல்லாம் உங்கள் பயிற்சியிலேயே தங்கியிருக்கிறது.

மேலும், பாடல் எழுதப் பயிற்சியாகக் கீழொரு பாடலைத் தருகிறேன். அதில், முதல் பகுதியில் 'ன்று' என முடியுமாறும் இரண்டாம் பகுதியில் 'ஓ' என முடியுமாறும் அடுத்தடுத்து இவ்வாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைகின்றது. பாடல் வரிகள் திரையில் தோன்றுவதால் அதனைப் பார்த்துப் பார்த்து எழுதலாம். பார்த்து எழுதிய வரிகளை இசைத்துப் பாருங்கள்; அப்போது இசைக்குப் பாடல் புனையலாம் என எண்ணத் தோன்றும்.

பாடல்: நினைவிலே மனைவி என்று
படம்: ச ரி க ம ப
பாடியவர்: S.P.பாலசுப்பிரமணியம்
எழுதியவர்: உதயனன்.
இசை: ஸ்ரீகுமார்


இந்தப் பாடலையும் கேட்ட பின் இசைக்குப் பாடல் புனைய நம்பிக்கை வந்து விட்டதா? இல்லையெனில் பல பாடல்களைக் கேட்டுப் பயிற்சி செய்து பாருங்கள். பயிற்சி செய்திருப்பின் கீழ்வரும் இணைப்பில் இசைக்குப் பாடல் புனைவதற்கான போட்டி இடம்பெறுகிறது. அதில் பங்கெடுத்துத் திரைப்படங்களில் இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்.

இதோ வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” என்ற தலைப்பில் "மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015" இற்கான அறிவிப்பின் இணைப்பு.
http://valvaiyooraan.blogspot.com/2015/04/blog-post.html