Saturday, July 18, 2015

பாப்புனைய முன் இதைப் படியும் காணும்!


பாப் புனையும் வேளை - அதாவது
கவிதை எழுதும் வேளை - நாம்
எழுதுவது எல்லாம் பா/கவிதை என
எந்த அளவுகோலை வைத்து - நாம்
எடை போடுகிறோம் என்றறியாத
பா/கவிதை புனையும் உள்ளங்களே
"கவிதை என்பது உணர்வு கடத்தி..." என்ற
பதிவைக் கொஞ்சம் படித்தால்
தெளிவாகப் பா/கவிதை புனையலாமே!

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும்" என்கிறான்

இதனைப் படித்ததும் - தாங்கள்
எழுதிய/ புனைந்த பா/கவிதை இல்
எதுகை, மோனை, படிமம் - அத்தோடு
அழகான செய்தியும் இருப்பதை
உறுதிப்படுத்தினால் மட்டும் போதாதே!
மேலும்,
என்ன தான் இருக்க வேண்டுமென
அடுத்துவரும் அடிகளைப் படியுங்க...

கவிதை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை செய்தித் தாளும் இல்லை
கவிதை விளம்பரச் சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை
பிறர் உணரச் செய்பவை
கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில்
கவிதை ஒரு உணர்வு கடத்தி!
இவ்வாறு
அடுத்துவரும் அடிகளில் - அறிஞர்
உணர்த்த வருவது என்ன?

இலக்கண அறிவிற்குள் இறுக்காமல்
சொல்களை அடுக்கி அழகாக்காமல்
செய்தி மணம் வீசாமல்
விளம்பர முகம் வெளிப்படாமல்
நாம் உள்வாங்கிய உணர்வை
பிறர் உணரும் வண்ணம்
வெளிப்படுத்தும் ஊடகமே கவிதையென
அறிஞர் உணர்த்துவதைக் காணும்!

கவிதை வழியே நல்ல கோட்பாடுகளை (தத்துவங்களை)
எளிமையாகப் புகுத்தும் வல்லமை கொண்ட
அறிஞர் ரமணி அவர்களின் கவிதையை
ஒன்றுக்கு நான்கு தடவை படிக்க
பா/கவிதை புனையும் ஆற்றலும் திறனும்
தங்களுக்கு வந்து சேருமென்ற நம்பிக்கை
என் உள்ளத்தில் நிறைந்தமையால் பகிருகிறேன்!
பா/கவிதை புனைய விரும்பும் ஒவ்வொருவரும்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படித்து
பயனீட்ட முன்வாருங்களென அழைக்கின்றேன்!
http://yaathoramani.blogspot.com/2015/07/blog-post_16.html

Wednesday, July 1, 2015

உங்களுக்கு மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) தெரியுமா?

துளிப்பா (ஹைக்கூ) பற்றியும் அறிந்திருப்பியள்
சென்ரியு என்றொன்றும் இருக்கிறாதாம்
இன்னும் எத்தனையோ இருக்கலாம்
என்றாலும்
குறள்வெண்பா என்பதும் யாவருமறிந்ததே
இணைக்குறள் ஆசிரியப்பா என்பதும்
நீங்கள் அறியாமல் இருக்கமுடியாதே
என்றாலும்
குறும்பா (லிமரிக்) பற்றியும் அறிந்திருப்பியள்
ஆனாலும்
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றியும்
உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்
எப்படியாயினும் - எனக்கு
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றித் தெரியாமையால்
நான் படித்ததைப் பகிருகிறேன் இங்கே!

குறும்பைச் சொல்லிச் சிரிக்க வைக்கும்
ஐந்தடிக் குறும்பாவை விட
நையாண்டி பண்ணிச் சிரிக்க வைக்கும்
நான்கடி மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு)
எப்படி என்று எண்ணிப் பாருங்களேன்!

"1, 2 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும்,
3,4 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும்
முடிய வேண்டும்." என்று கீழுள்ள
பதிவை ஆக்கியோர் சொல்லுகிறார் பாரும்!
இணைப்பு:
http://kaalapayani.blogspot.com/2009/05/blog-post_11.html

"மிக எளிதான வடிவம்.
மொத்தம் நான்கே வரிகள்.
aa bb என்ற rhyming pattern.
பொதுவாக க்ளெரிஹ்யு கவிதைகள்
ஹாஸ்ய ரசம் ததும்புவனவாக இருந்தாலும்
சீரியஸ் விஷயங்களைக் கூட
நச் எனச் சொல்லலாம்." என்று கீழுள்ள
பதிவை ஆக்கியோர் சொல்லுகிறார் பாரும்!
இணைப்பு:
http://wp.me/pTWRs-69v

"திரையில் அழகாய் மின்னிய பெண்ணவள்
விரைவாய் வீட்டிற்குப் போனதும் அழகற்றவள்
அழகுப்படுத்தினால் எவளும் அழகாய் மின்னலாம்
அழகாய் மின்னயவளை நம்பியவன் ஏமாளி!

தேடல் உள்ளவரை அறிவு பெருகுமே
தேடிப் பொறுக்கிப் படித்தவர் அறிவாளி
பாராமுகமாய் படிப்பைக் கசக்குது என்றவர்
மக்கள்முன் பாராமுகமாய் ஒதுங்கிடும் அறிவிலி!

வாக்குப் போட்டவர் நாட்டில் அலைகின்றார்
வாக்குப் பெற்றவர் நாட்டைக் கவனிக்காராம்
தேர்தல் வந்தால் வேட்பாளர்கள் வருவார்கள்
வென்றதும் நாடாளுமன்ற நாற்காலி துடைப்பாராம்"
என்றவாறு
நான் எழுதிக் கிறுக்கிய கிறுக்கலை
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) என்றெண்ணாமல் - கொஞ்சம்
மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கிப் பார்த்தே
நன்றே படித்துத் தேறி வந்தே - என்
மகிழ்வூட்பாவில் (க்ளெரிஹ்யு) பிழை கண்டுபிடியுங்களேன்!

கீழுள்ள பாவில் என்னை நறுக்கியே
எழுதிப் பார்த்தேன் படித்துப் பாரும்

"யாழ்பாவாணன் பாப்புனையக் கற்றுத்தர வந்தாராம்
வாழ்க்கையில் தொல்லையாம் அடிக்கடி தொடராராம்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களோ தளராராம்
பாப்புனைய உதவும் பதிவுகளைப் பகிருவாராம்" என

முதலிரு அடிகளில் யாழ்பாவாணனின் இழுபறியும்
ஈற்றிரு அடிகளில் பிறர் பதிவுகளின் பகிர்வும்
நன்றே நடைபெறுவதைப் பாரும் -என்றே
இருவேறு வெளிப்பாட்டைப் பகிர்ந்தேன் - இது தான்
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) எழுதவுதவும் தகவலா?
எதற்கும் மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கி
தெரிந்து கொண்டால் எழுதுவீர் மகிழ்வூட்பா!
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - இப்படித் தான்
புதிய புதிய தகவலைத் தேடித் தேடியே
புதிய புதிய பாவண்ணங்களில் இறங்கியே
புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்தியே - நீங்கள்
உங்களைப் பாவலராக அடையாளப்படுத்த முயலுங்கள்!

இதென்னங்க மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) - அன்று
சங்க இலக்கியத்தில் இடம்பெற்று இருந்த
நையாண்டிப் பாடல் (வசைப்பாடல்) ஒன்றைப் பாரும்...
"ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ" என்று
கேலியும் கிண்டலுமாய் கம்பர் விட்ட
விடுகதை ஔவையார் காதில் பட்டதும்
தன்னை நையாண்டி செய்த கம்பரை
ஔவையார் வசைபாடித் தீர்க்கிறார் பாரும்!

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி - இந்த
சங்க இலக்கியப் பாடல் விளக்கமறியலாம்...
http://thamizharukkaaga.blogspot.com/2012/05/blog-post_20.html