Monday, July 21, 2014

உன் முதலிரவுப் படுக்கையறையில் நாடகமா? கவிதையா?


வாழ்க்கையில்
முதன் முதலாகச் சந்திக்கும்
காதலர் இருவரும்
மணமுடித்து முதலிரவில் சந்திக்கும்
புதுமண இணையரும்
நடிக்கின்ற நாடகமிருக்கே - அதை
கொஞ்சம் படியுங்க இங்கே!
புதிதாய் முளைத்த புதுக் காதல்
ஆளை ஆள் சந்திக்க வைத்த - அன்று
எதை எதைப் பேசுவதெனப் புரியாமல்
ஒருவருக்கு ஒருவர் வாய் திறந்தால்
என்னங்க...
என்னங்க...
எதையாவது சொல்லுங்க...
எதையங்க சொல்லுவனங்க...
இப்படித்தானங்க நாடகம் ஆடுவாங்கோ!
முதற் காதல் முதற் சந்திப்பை
பாப்புனைந்து காட்டு என்றால்
"உன்னைப் பார்த்த கண்ணும்
என்னைப் பார்த்த கண்ணும்
இரண்டும் இரண்டும் நான்கே
நாங்க சந்தித்த நாளன்றே
உன் உள்ளம் எண்ணியதும்
என் உள்ளம் எண்ணியதும்
முன் அறியாத உண்மையை!" என
எழுதி எழுதித் தாள்களை நிரப்புவாங்கோ!
"உன் முதலிரவுப் படுக்கையறையில்
நாடகமா? கவிதையா?" என்று
தலைப்பைப் போட்டு விட்டு
புதுக் காதல் முதற் காதல்
என்றெழுதிச் சொல்ல வந்தது - அந்த
ஆணுக்கும் பெண்ணுக்கும் புதிதாக
ஒரேயொரு படுக்கை அறையில்
ஒரேயொரு படுக்கையில் படுக்கவே
ஒரேயொரு முதலிரவு என்றுரைக்கவே!
விடிகாலை மூன்றுக்கு எழுந்தே
படிப்படியாப் பலதும் முடிந்திட
அடிச்சாப் போலவைந்து மணிக்கு
பொண்ணு கழுத்தை நீட்டவே
ஆணுதான் கொம்புத்தாலி கட்டவே
கற்கண்டு கொடுத்து மகிழ்ந்தே
மணமக்களை வாழ்த்தி முடியவே
மணநாள் சாப்பாடு விழுங்கினரே!
பகற்பொழுது முழுவதும் எப்படியோ
அப்படி அப்படிக் கரைந்திட
முன்னிரவு பதினொன்று நெருங்கிட
முதலிரவுப் படுக்கையும் அழகாக்கியே
முதலிரவுக்கு நேரமாச்செனச் சூழவுள்ளோர்
மணமக்களை நுள்ளியும் கிள்ளியும்
ஆகா... முதலிரவா... அம்மம்மா...
என்றெல்லாம் சொல்லி அனுப்பினரே!
முதலிரவுப் படுக்கைக்கு வந்தவங்க
விடிகாலை உடுத்திய உடுப்பை
விடுவிடெனக் கழட்டி வீசியே
ஆளுக்காள் தளர்வான உடையுடுத்தி
படுக்கையில் சரிந்துவிழ முன்னரே
பகற்பொழுதுக் களைப்பை விரட்டிவிட
பால்பழம் பங்கிட்டுப் பருகினரே!
இணையர்கள் படுக்கையில் சரிந்துவிழ
என்னங்க... இந்த இரவில...
அதுங்க... இந்த இரவை...
முதலிரவு என்று சொன்னாங்க...
நான் பிறந்து வளர்ந்துங்க...
நானும் அப்படித் தானங்கோ...
எந்த ஆணுக்கும் பக்கத்தில
நானும் படுக்கவில்லையே...
எந்த பெண்ணுக்கும் பக்கத்தில
நானும் தான் படுக்கவில்லையே...
இன்றைக்குத் தானங்கோ...
உங்களுக்குப் பக்கத்தில கிடக்கிறன்...
நானும் அப்படித் தானங்கோ...
இப்படியே இணையரும் நாடகமாட
இந்த இரவு எனக்கு முதலிரவு
எனக்கும் இது தானங்கோ...
விடிகாலை மூன்றாச்சு என்றாலும்
ஒளிநீக்கி உறங்கலாம் என்றனரே!
என்னங்க என்னை உரசுறீங்க...
இருட்டிலே ஏதேதோ பண்ணுறீங்க...
எப்பன் கொஞ்சம் தள்ளிக் கிடவுங்கோ...
உனக்கும் எனக்கும் - இதுவே
முதலிரவு என்றால் பாருங்கோ
இதெல்லாம் இயல்பு தானங்கோ...
என்றெல்லாம் ஐயம் தீர்த்த பின்னே
இருவர் இடையே இருந்த
இடைவெளி நீங்கிக் கொள்ள
உள்ளம் திறந்து பேசிக்கொண்ட
இருவரும் ஈருடல் ஓருயிராயினரே!
மணமக்கள் இருவரும் தானங்கோ
ஒட்டி உரசிப்பேசத் தொடங்கவும்
வெட்டி எறித்தான் பகலவன்
வீட்டார் தாழ்ப்பாளைத் தட்டி
விடிஞ்சாச்சு மணியேழு ஆச்சென்று
பால்த்தண்ணி பலகாரம் நீட்டியே
விடியவிடியத் தூங்கா மூஞ்சிகளான
இணையர்களின் நாடகத்தைக் கொஞ்சம்
முடித்து வைக்க முயன்றனரே!
பாப்புனைய விரும்பும் உறவுகளே...
நானுரைத்ததோ
முதலிரவு நாடகமென்று அறிவீரா?
பாப்புனையப் புறப்பட்டால் பாருங்கோ...
கருப்பொருளை வைத்துக்கொண்டு
கதைச்சூழல் எதுவெனச் சொல்லுவதாக
இருந்துவிடக் கூடாது பாருங்கோ...
கதைச்சூழலை வைத்துக்கொண்டே
கருப்பொருளைப் பா/கவிதை ஆக்குங்களேன்!
"இணையர் இணையும் முதலிரவு
கொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...
ஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து
ஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து
ஈருடல் ஓருயிராக இணைய முயலவே
முதலிரவு நாளன்று காலம் கரையவே
முழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே!" என
பாப்புனைய முயன்று பாருங்களேன்!
"முதலிரவு அன்று முட்டி முட்டியே
கொட்டிக் கொட்டியே ஐயம் தீர்க்க
ஆளாள் களையாது காலம் கரைய
விடிந்த பின்னரே தெரிய வந்தது
எதுவும் நிகழாத முதலிரவு!" என்றாவது
பாப்புனைய முயன்று பாருங்களேன்!





Thursday, July 17, 2014

மரபுக் கவிதையில் இனிப்பும் உண்டு

யாப்பறிந்து பாப்புனைந்தால் தான்
மரபுக் கவிதையில் இனிப்பும் உண்டென
அறிய வாய்ப்பு இருக்கு என்பேன்!
அப்படியொரு இனிப்பை தான்
பாவலர் கி.பாரதிதாசன் அவர்கள்
"சொற்பொருள் பின் வருநிலையணி!" என
சுவைக்கத் தந்திருக்கிறார் பாரும்!
"ஒரு சொல் பலமுறை
ஒரே பொருளில் பயின்று வருவதும்,
முன் வந்த பொருள்
பின்னர்ப் பல இடங்களில் பயின்று வருவதும்
சொற்பொருள் பின் வருநிலையணி" என
பாவலர் கி.பாரதிதாசன் அவர்கள்
விளக்கம் தந்து எடுத்துக்காட்டும் தந்து
சுவைக்க ஐந்து குறள்வெண்பா தந்து
படித்துச் சுவைத்தால் இனிக்கும் என்பதை
கீ்ழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்!
http://bharathidasanfrance.blogspot.com/2014/07/blog-post_17.html

Tuesday, July 15, 2014

பா புனையத் தோன்றிச்சே!

வயிற்றில் பிள்ளையைச் சுமக்கும்
நிறை மாதப் பெண்
சுமைதாங்கி படும் நோக்களை யாரறிவார்?
குழந்தை நெஞ்சாங்கூட்டை
தலையாள் இடிக்குது என்பாள்...
எப்பன் சரிந்து கிடந்தால்
இடம், வலம் பார்த்து
குழந்தை
காலால் உதைக்குது என்பாள்...
"மேல் வயிற்றில் இடி என்றால்
ஆண் குழந்தையடி
கீழ் வயிற்றில் இடி என்றால்
பெண் குழந்தையடி" என்று
பழம் கிழம் ஒன்று
முணுமுணுத்து ஓயவில்லை
"அம்மோய்..... அம்மோய்.....
அடி வயிறு குத்துது..." என்றாள்
பிள்ளையைச் சுமந்தவள்...
சட்டுப் புட்டென்று
அண்டை அயலுக்குச் சொல்ல
அடுத்த வீட்டு மருத்துவிச்சியும் வந்தாள்...
"தலைப் பிள்ளையை
வீட்டில வைச்சுப் பெற ஏலாது
மருத்துவமனைக்குக் கொண்டு போ!" என்றாள்
வந்த மருத்துவிச்சியும்...
அடுத்த கணப்பொழுதில்
வயிற்றுப் பிள்ளைக்காரியை
மருத்துவமனைக்கு ஏற்றிப் பறித்தார்கள்...
அங்கே அவளும்
என்ன பிள்ளையை இறக்கி வைத்தாளோ
எவருக்குத் தான் தெரியும்!

இங்கே பாருங்கோ
பயணிகள் பேரூந்துக்கு வாயிருந்தால்
எப்படியோ
எத்தனையோ சொல்லியழுமே!
சின்னஞ் சிறு ஊர்திக்குள்ளே
பென்னம் பெரு
மலை போன்ற ஆள்களை
உள்ளே தள்ளி அடையிறாங்க...
ஊதிப் பெருத்த பூசணி போல
ஊர்தியின் நிலைமை...
பக்கக் கண்ணாடிகளை ஒதுக்கியே
ஆள்களின் மூஞ்சிகள்
வெளித்தள்ளும் நிலைமை...
வியர்வையால் குளிப்போரும்
இருக்கக்கூடும்...
"கால் கால் உளக்காதையும்..."
கீச்சுக் குரலில் பெண்ணொருத்தி...
கனவூர்தியில் பொருள் ஏற்றியது போல
இருக்கையில் இருப்போர்
நிற்போரின் பொருள்களைச் சுமப்பரே...
நிற்க இடமில்லாத போதும்
இயந்திரப் பகுதியின் மேலே கூட
கைக் குழந்தைக்காரரையும்
ஏற்றி உள்ளே அடுக்குவாங்கள்
ஓட்டுநரும் நடத்துனரும்...
ஊரிலிருந்து கிளம்பிய பேரூந்து
ஒருவாறு
நகருக்கு வந்து சேர்ந்தது...
பேரூந்து நிறுத்த முயன்ற வேளை
இயந்திரப் பகுதியின் மேலே
நின்றவளின் குழந்தை கைநழுவி
ஓட்டுனரின் கைப்பிடிக்குள் விழ
"ஐயோ என்ர குழந்தை..." என்று
குழந்தைக்காரி ஒருத்தி அழுதாள்...
"என்ர புண் காலில
பல கால்கள் உளக்கி
செந்நீர் ஓடுவதைப் பாரடா..."
என் தோளைத் தாவூம்
என் துணைவி...
யாரோ ஒருத்தி
மயங்கி விழுகிறாளெனக் கையேந்தினேன்...
"இன்றைக்குத் தான்
கடைசிச் சிகிச்சை என
மருத்துவமனைக்கு வருவதற்கிடையில
பேரூந்து நெரிசலில அண்ணே
அடி வயிறு நோகுது அண்ணே
என்னைக் கொஞ்சம் பிடியுங்கோ..." என
எவளோ பெத்த பிள்ளை
என் கைக்குள் வீழ்ந்தாளே...
தரையைத் தொட்டவாறு வந்த
பேரூந்து
ஆள்களை இறக்கிய பின்
குதிக் காலணி போட்ட பெண் போல
தரையை விட்டு மூன்றடி உயர
ஓடி மறைந்தது தெரியவில்லை...
ஆனால்
பிள்ளையைச் சுமந்தவள் படும் நோவைப் போல
பேரூந்துக்கும் நோ பட்டிருக்கும் தான்
அதைவிட
பயணிகள் நாம் அடையும் நோ
அளவிட முடியாதே!

"வயிறு வீங்கிய
பிள்ளையைச் சுமப்பவள் போல
வீங்கிய பேரூந்தில்
பயணிக்கும் நாங்களும்
சுமந்தவள் பெற்ற பின்
வெளிவந்த குழந்தை போல
பேரூந்தாலே இறங்கிய பின் தானே
மூச்சு விடுகிறோம்!" என்று
பா புனையத் தோன்றிச்சே!

Friday, July 11, 2014

எது கவிதை என்று படித்தாலென்ன?

"அவள் அடித்த அடி
இன்னமும் இப்பவும்
வலிக்கிறதே!" என்றும்
"அவனுக்கென்ன
அடுத்தவளோடு தொடருவான்
நானல்லவா அழுகிறேன்!" என்றும்
பாப்புனைந்தால்
பாவலனாகிவிடலாமா?
எழுத்து, அசை, சீர், அடி, தொடை, பா எனவும்
பாடுபொருள், உவமை, எதுகை, மோனை எனவும்
எடுத்துச் சொன்னால் - அவை
மரபுக் கவிதைக்காரருக்குத் தான்
புதுக் கவிதைக்காரருக்கு இல்லை என்பீர்...
தொல்லை எதற்கு என்று
அறிஞர் நா.முத்துநிலவன் அவர்களின்
"புதுக்கவிதை-வெற்றிபெற்ற
வரலாற்றுச் சுருக்கம்" என்ற பதிவை
தங்களுடன் பகிர விரும்புகிறேன்!
பாப்புனைய விரும்பும்
எல்லோரும்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி
பாவலர் பலரது எண்ணங்களில் தோன்றியதை
பாவலர் நா.முத்துநிலவன் தரும்
புதுக் கவிதை பற்றிய பாடம் என்று
கற்றுக்கொள்ள முன்வாருங்கள்!

http://valarumkavithai.blogspot.com/2014/07/blog-post_11.html

Monday, July 7, 2014

கவிதை என்று எதைச் சொல்வது? - படியுங்க...


கவிதை என்று எதைச் சொல்வது?
அறிஞர் கும்மாச்சி அவர்கள் கேட்க
நான் படித்துச் சுவைத்துப் பார்க்க
விளங்கச் சொல்வது கவிதையா?
விளங்காத புதிர் செய்வதையா?
புரியாத புதிர் செய்வதா?
எளிய வார்த்தைக் கோர்வைகளா?
புரியும் மண்வாசக் கவிதைகளா?
புதுக் கவிதைகளா? இல்லை
கவிதை என்று எதை சொல்வது?
மென்மேலும் கேள்விகள் தொடர
ஆங்கோர் இடத்தில்
வாசகனின் எண்ண ஓட்டத்தில்
நிலைத்து நிற்கின்றவை தான்
கவிதை என்று அறிய முடிந்ததே!
பாபுனைய விரும்புவோர் அறிய - அவர்
பதிவுக்குக் கருத்துக் கூறிய
அறிஞர் கருத்தையும் படிக்க
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக!

http://www.kummacchionline.com/2010/02/blog-post_11.html