Thursday, August 27, 2015

புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03

http://www.ypvnpubs.com/

எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.
தூய தமிழ் பேணும் பணி
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்
உளநலப் பேணுகைப் பணி
யாழ்பாவாணனின் எழுத்துகள்
யாழ்பாவாணன் வெளியீட்டகம்
நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
இவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.

http://www.ypvnpubs.com/

இப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.
இப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.
எனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.

http://www.ypvnpubs.com/

Saturday, July 18, 2015

பாப்புனைய முன் இதைப் படியும் காணும்!


பாப் புனையும் வேளை - அதாவது
கவிதை எழுதும் வேளை - நாம்
எழுதுவது எல்லாம் பா/கவிதை என
எந்த அளவுகோலை வைத்து - நாம்
எடை போடுகிறோம் என்றறியாத
பா/கவிதை புனையும் உள்ளங்களே
"கவிதை என்பது உணர்வு கடத்தி..." என்ற
பதிவைக் கொஞ்சம் படித்தால்
தெளிவாகப் பா/கவிதை புனையலாமே!

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும்" என்கிறான்

இதனைப் படித்ததும் - தாங்கள்
எழுதிய/ புனைந்த பா/கவிதை இல்
எதுகை, மோனை, படிமம் - அத்தோடு
அழகான செய்தியும் இருப்பதை
உறுதிப்படுத்தினால் மட்டும் போதாதே!
மேலும்,
என்ன தான் இருக்க வேண்டுமென
அடுத்துவரும் அடிகளைப் படியுங்க...

கவிதை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை செய்தித் தாளும் இல்லை
கவிதை விளம்பரச் சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை
பிறர் உணரச் செய்பவை
கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில்
கவிதை ஒரு உணர்வு கடத்தி!
இவ்வாறு
அடுத்துவரும் அடிகளில் - அறிஞர்
உணர்த்த வருவது என்ன?

இலக்கண அறிவிற்குள் இறுக்காமல்
சொல்களை அடுக்கி அழகாக்காமல்
செய்தி மணம் வீசாமல்
விளம்பர முகம் வெளிப்படாமல்
நாம் உள்வாங்கிய உணர்வை
பிறர் உணரும் வண்ணம்
வெளிப்படுத்தும் ஊடகமே கவிதையென
அறிஞர் உணர்த்துவதைக் காணும்!

கவிதை வழியே நல்ல கோட்பாடுகளை (தத்துவங்களை)
எளிமையாகப் புகுத்தும் வல்லமை கொண்ட
அறிஞர் ரமணி அவர்களின் கவிதையை
ஒன்றுக்கு நான்கு தடவை படிக்க
பா/கவிதை புனையும் ஆற்றலும் திறனும்
தங்களுக்கு வந்து சேருமென்ற நம்பிக்கை
என் உள்ளத்தில் நிறைந்தமையால் பகிருகிறேன்!
பா/கவிதை புனைய விரும்பும் ஒவ்வொருவரும்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படித்து
பயனீட்ட முன்வாருங்களென அழைக்கின்றேன்!
http://yaathoramani.blogspot.com/2015/07/blog-post_16.html

Wednesday, July 1, 2015

உங்களுக்கு மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) தெரியுமா?

துளிப்பா (ஹைக்கூ) பற்றியும் அறிந்திருப்பியள்
சென்ரியு என்றொன்றும் இருக்கிறாதாம்
இன்னும் எத்தனையோ இருக்கலாம்
என்றாலும்
குறள்வெண்பா என்பதும் யாவருமறிந்ததே
இணைக்குறள் ஆசிரியப்பா என்பதும்
நீங்கள் அறியாமல் இருக்கமுடியாதே
என்றாலும்
குறும்பா (லிமரிக்) பற்றியும் அறிந்திருப்பியள்
ஆனாலும்
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றியும்
உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்
எப்படியாயினும் - எனக்கு
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றித் தெரியாமையால்
நான் படித்ததைப் பகிருகிறேன் இங்கே!

குறும்பைச் சொல்லிச் சிரிக்க வைக்கும்
ஐந்தடிக் குறும்பாவை விட
நையாண்டி பண்ணிச் சிரிக்க வைக்கும்
நான்கடி மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு)
எப்படி என்று எண்ணிப் பாருங்களேன்!

"1, 2 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும்,
3,4 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும்
முடிய வேண்டும்." என்று கீழுள்ள
பதிவை ஆக்கியோர் சொல்லுகிறார் பாரும்!
இணைப்பு:
http://kaalapayani.blogspot.com/2009/05/blog-post_11.html

"மிக எளிதான வடிவம்.
மொத்தம் நான்கே வரிகள்.
aa bb என்ற rhyming pattern.
பொதுவாக க்ளெரிஹ்யு கவிதைகள்
ஹாஸ்ய ரசம் ததும்புவனவாக இருந்தாலும்
சீரியஸ் விஷயங்களைக் கூட
நச் எனச் சொல்லலாம்." என்று கீழுள்ள
பதிவை ஆக்கியோர் சொல்லுகிறார் பாரும்!
இணைப்பு:
http://wp.me/pTWRs-69v

"திரையில் அழகாய் மின்னிய பெண்ணவள்
விரைவாய் வீட்டிற்குப் போனதும் அழகற்றவள்
அழகுப்படுத்தினால் எவளும் அழகாய் மின்னலாம்
அழகாய் மின்னயவளை நம்பியவன் ஏமாளி!

தேடல் உள்ளவரை அறிவு பெருகுமே
தேடிப் பொறுக்கிப் படித்தவர் அறிவாளி
பாராமுகமாய் படிப்பைக் கசக்குது என்றவர்
மக்கள்முன் பாராமுகமாய் ஒதுங்கிடும் அறிவிலி!

வாக்குப் போட்டவர் நாட்டில் அலைகின்றார்
வாக்குப் பெற்றவர் நாட்டைக் கவனிக்காராம்
தேர்தல் வந்தால் வேட்பாளர்கள் வருவார்கள்
வென்றதும் நாடாளுமன்ற நாற்காலி துடைப்பாராம்"
என்றவாறு
நான் எழுதிக் கிறுக்கிய கிறுக்கலை
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) என்றெண்ணாமல் - கொஞ்சம்
மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கிப் பார்த்தே
நன்றே படித்துத் தேறி வந்தே - என்
மகிழ்வூட்பாவில் (க்ளெரிஹ்யு) பிழை கண்டுபிடியுங்களேன்!

கீழுள்ள பாவில் என்னை நறுக்கியே
எழுதிப் பார்த்தேன் படித்துப் பாரும்

"யாழ்பாவாணன் பாப்புனையக் கற்றுத்தர வந்தாராம்
வாழ்க்கையில் தொல்லையாம் அடிக்கடி தொடராராம்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களோ தளராராம்
பாப்புனைய உதவும் பதிவுகளைப் பகிருவாராம்" என

முதலிரு அடிகளில் யாழ்பாவாணனின் இழுபறியும்
ஈற்றிரு அடிகளில் பிறர் பதிவுகளின் பகிர்வும்
நன்றே நடைபெறுவதைப் பாரும் -என்றே
இருவேறு வெளிப்பாட்டைப் பகிர்ந்தேன் - இது தான்
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) எழுதவுதவும் தகவலா?
எதற்கும் மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கி
தெரிந்து கொண்டால் எழுதுவீர் மகிழ்வூட்பா!
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - இப்படித் தான்
புதிய புதிய தகவலைத் தேடித் தேடியே
புதிய புதிய பாவண்ணங்களில் இறங்கியே
புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்தியே - நீங்கள்
உங்களைப் பாவலராக அடையாளப்படுத்த முயலுங்கள்!

இதென்னங்க மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) - அன்று
சங்க இலக்கியத்தில் இடம்பெற்று இருந்த
நையாண்டிப் பாடல் (வசைப்பாடல்) ஒன்றைப் பாரும்...
"ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ" என்று
கேலியும் கிண்டலுமாய் கம்பர் விட்ட
விடுகதை ஔவையார் காதில் பட்டதும்
தன்னை நையாண்டி செய்த கம்பரை
ஔவையார் வசைபாடித் தீர்க்கிறார் பாரும்!

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி - இந்த
சங்க இலக்கியப் பாடல் விளக்கமறியலாம்...
http://thamizharukkaaga.blogspot.com/2012/05/blog-post_20.html

Friday, June 12, 2015

உங்களுக்கும் துளிப்பா (ஹைக்கூ) எழுத வருமே!


ஓலைக் குடிலை நாடி
ஓட்டம் பிடிப்போரைப் பாரென்று
நாற்சந்தியில்
நாலாள் பேசிக்கொள்ள
காதுக்கெட்டிய பக்கமாய்
கண்ணாலே மேய்ந்தேன்...

உண்ணான
கண்ணாளன் வீட்டை
ஆளைஆள் விலத்திக்கொண்டு
"என்னண்ணே!
சுகமாய் இருக்கிறியளே?" என்று
கேள்வி மேல் கேள்வி கேட்டு
சுகமறியும் ஆள்களைக் கண்டேன்...

கணக்கர் சித்திரபுத்திரன் கடையில
காசாளராகப் பணியாற்றும்
ஏழைக் கண்ணாளனுக்கு
வாழைக்குட்டி நல்வாய்ப்புத் தாளில்
கோடி உரூபா பரிசு
விழுந்திருப்பதைக் கேள்விப்பட்டதும்
சுகமறியக் குழுமிய ஆள்களாம்...

காசில்லாதவர் என்று
எல்லோருமே கழித்து விட்டமையால்
ஏழைக் கண்ணாளனுக்கு
எப்பனும் எவரையும் தெரியாது தான்...
இப்ப என்னவென்றால்
வாழைக்குட்டி நல்வாய்ப்புத் தந்த
கோடி உரூபாவைக் கேள்வியுற்று
உறவு பேண வந்திட்டங்களாம்...

என்னமோ ஏதோவென்று
கண்ணாளனைக் கண்டறிய
"காசில்லையென்றதும் கழிச்சுவிட்டவங்க...
காசைக்கண்டதும் கைகுலுக்கலாமோ?
காசே தான் கடவுளடா!" என்றும்
"நேற்றோ என்னை ஒதுக்கி வைத்தவர்
இன்றோ என்னை அணைக்க வருகிறார்
கை நிறையக் காசு!" என்றும்
"நேற்றுவரை வீட்டுக்கு நாய் காவல்
இன்றிலிருந்து நம்மாளுகள் காவல்
கோடி உரூபா நல்வாய்ப்பு!" என்றும்
"நேற்றுவரை கடனிருக்கக் கனவிலே காசு
இன்றிலிருந்துக் கனவின்றித் தூக்கம் ஆச்சு
நல்வாய்ப்பாய் கோடி உரூபா!"  என்றும்
துளிப்பா (கைக்கூ) வாசித்தாரே!

"காதலி! காதலித்துத் தோற்றுப் போ!
பா/கவிதை புனைய வருமாம்" என்று
நானும் பல ஊடகங்களில் படித்தேன்...
பட்ட புண்ணையும் தொட்ட துயரையும்
உள்ளத்து மாற்றங்களையும்
உணர்வோடு வெளிக்கொணர்ந்தால்
கண்ணாளனைப் போலவே
துளிப்பா (கைக்கூ) எழுத வருமே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே!
மேலும், தகவலறிய
உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?
http://paapunaya.blogspot.com/2014/06/blog-post_20.html

Sunday, May 24, 2015

வாங்க, யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க!


கண்டேன் அறிஞர் ஒருவரின் பதிவை
(அந்நியன் கணக்கு - ஆக்கம் அறிஞர் கீதா
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/05/ANNIYAN-KANAKKU.html)
கண்டதும் படித்ததும் - என்
எண்ணத்தில் மீள மீள
எண்ணிப் பார்க்க வைத்த
அடிகளை அப்படியே தருகின்றேன்!

அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பில்லைங்க’’
“அஞ்சு கோடி பேர்
அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பு மாதிரிதாங்க தெரியுது...’’
“அஞ்சு கோடி பேர்,
அஞ்சு கோடி தடவை
அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘அய்யோ... பெரிய தப்புங்க...’’  



பதிவைப் படித்த பின்னர் - அந்த
பதிவிற்கான கருத்தாக - நான்
பா/கவிதை போல எழுதிய வரிகளில்
மாற்றம் செய்து பலருக்குக் காண்பித்து
உங்களாலும் பா/கவிதை புனைய முடியுமென
உங்கள் ஆற்றலை வெளிக்கொணர
கடுகளவு முயற்சி எடுக்கிறேன்!
"வாங்க,
யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க!" என்று
எல்லோரையும் அழைத்திங்கே - அந்த
அறிஞரின் பதிவைப் படித்த பின்
நான் கிறுக்கும்
பா/கவிதை போன்ற வரிகளாயினும் சரி
துளிப்பா, குறும்பா, புதுப்பாவாயினும் சரி
யாப்பறிந்த (மரபுப்) பாக்களில் எதுவாயினும் சரி
உங்கள் கைவண்ணங்களில் ஆக்கி
பின்னூட்டங்களில் இட்டு உதவுங்கள்!

இஞ்சாருங்கோ - எங்களால
பா/கவிதை புனைய முடியாதென
ஒரு போதும்
மறுப்புக் கூற வேண்டாமுங்கோ...
"மிச்சக்காசு கிட்டாமையால் வயிறு கடிக்குதே!" என்றோ
"மிச்சக்காசைச் சுருட்டி வீடு வாசல் கட்டுவாங்களோ!" என்றோ
"மிச்சக்காசுக்கு இனிப்பை இடிக்கிறவங்களால
நம்மாளுங்க நீரிழிவால துன்பப்படுறாங்களே!" என்றோ
"மிச்சக்காசாக
ஒரு உரூபாவாயினும் நடத்துனர் தந்திருந்தால்
ஒரு முடர் தேத்தண்ணி குடித்திருப்பேனே!" என்றோ
உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களையாவது
வெளிக்கொணர்ந்தால் பா/கவிதை ஆகுமே - அதில்
பா/கவிதை இயல்பு வெளிப்பட்டு விட
யாப்பில் கூட இயல்புத் தொடை என்பாங்க - இனி
உங்களால பா/கவிதை புனைய முடியும் தானே!

இஞ்சாருங்கோ - உங்கள்
யாழ்பாவாணனின் பா/கவிதை போன்ற கிறுக்கலை
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...

மிச்சக் காசு கொடுக்க முடியாமைக்கு
மாற்று வழியாக
வேண்டாம் வேண்டாமென
இனிப்பை இடிக்கிறாங்க...
இதெல்லாம்
எப்ப இருந்து என்றால்
அந்தக் காலத்து
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்து
என்கிறாங்க,,,
ஈழத்தில இப்படி
இனிப்பை இடிக்கிற வழக்கம்
தொடங்கின காலத்தில
கருணாநிதி ஆட்சிக் காலச் செய்தி என
நாளேடு ஒன்றில் படித்த நினைவு!
இப்ப என்னவென்றால்
இனிப்பை இடிக்கிற வழக்கம் போய்
எங்கள் வயிற்றிலடிக்கிற கதை
தொடங்கிற்று...
சில்லறை இல்லை - அடுத்த
வருகையின் போது தரலாமென
சிலர் சுருட்டுறாங்க...
சில்லறை இல்லை என்றால்
மலடியைப் பிள்ளை பெற வைக்க ஏலுமே என்று
என் பெண்டாட்டியையும் அழவைச்சு
(எமக்குக் குழந்தைகள் இல்லை)
எங்கட வயிற்றிலடிப்பவங்க
பெருகிக் கிட்டே இருக்காங்க!
வணிக நிலையங்களில்
இனிப்பை இடிப்பாங்க என்றால்
தெருக்கோடியிலும் (தெருவெளி வணிகர்கள்) சரி
ஊர்திப்பயணங்களிலும் (நடத்துனர்கள்) சரி
சில்லறை இல்லை என்றெல்லோ
பகற் கொள்ளை அடிக்கிறாங்க!
ஈழத்தில... இந்தியாவில... உலகத்தில...
இது உலாவுவதாகத் தகவல்!

என்னங்கோ - உங்கள்
யாழ்பாவாணனின் கிறுக்கலைப் படித்தாச்சோ
இனி என்னங்க இழுபறி - யாழ்பாவாணனின்
பாவண்ணத்தைத் தோற்கடிக்கவாவது - உங்கள்
கைவண்ணங்களாலே பாப்புனைந்து வெளியிட்டு
எல்லோரையும் யாப்பறிந்து பாப்புனைய
விரும்ப (ஆசை) வைக்க முன்வாருங்களேன்!

Saturday, May 23, 2015

இலக்கணம் அறிந்து எழுதுகோல் ஏந்து


"நான் என்ன
என்னைக் காதலி என்று தானே கேட்டேன்!
அதற்கு - நீ
என் கன்னம் சிவந்து வீங்க
காலணியால் அடிப்பாயா?" என்று ஆணெழுத
"நானாவது
கன்னம் சிவந்து வீங்க
காலணியால் அடித்தேன்! - என்
கணவன் அருகில் இருந்திருந்தால்
என்னைக் காதலி என்று கேட்டதுமே
என் மனைவியிடமா கேட்கின்றாய் என்று - உன்
கழுத்தையே அறுத்திருப்பாரே!" என்று பெண் பதிலிறுக்க
அழகான பா/கவிதை என்று படித்தவர் புகழ
மிச்சம் சொல்லவும் வேண்டுமா? - தன்னை
பாவலரென்றே முழங்கித் திரிவர் சிறியர்!
இலக்கியம் தோன்றிய பின்னரே
இலக்கணம் தோன்றியது என்பதை
கணக்கில் வைத்துக்கொண்டு - எவரும்
கதை, கட்டுரை, நாடகம் எழுதினாலும்
பா/கவிதை, இசைப்பாட்டு, திரைப்பாடல் எழுத
இயலாதென்பதை எள்ளளவேனும் அறிந்தீரா?
எழுத்து, அசை, சீர், தளை,
பிணை, அடி, தொடை,
பா, பாவினம் என ஒன்பது
உறுப்புகள் கொண்ட தொகுப்பே
பாவிலக்கணம் என்றுரைக்கிறார்
"யாப்பரங்கம்" நூலாசிரியர்
புலவர் வெற்றியழகன்! - இங்கே
தமிழில் 30 + 1 எழுத்துகளா
தமிழில் 247 எழுத்துகளா
என்றெல்லோ மோதுகினம்!
"உன்கண்ணில் நீர்வழிந்தால் -- என்னெஞ்சில்
   உதிரங் கொட்டு தடீ;" என்பது
காதல் கவிதையா? குழந்தைக் கவிதையா?
என்றெல்லோ மோதுகினம்!
பாரதி பாடலும் நன்னூல் அறிவும்
எள்ளளவேனும் அறிந்திருந்தால் கூட
பா/கவிதை புனையலாம் காண் - நீ
பாப்புனைய விரும்பும் ஒருவரா - அப்ப
பா/கவிதை ஒன்றைக் கண்டால்
படித்துப் பாடுபொருள் கண்டுபிடி - மேலும்
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில்
தமிழில் 369 எழுத்துகள் உண்டாம் - நான்
கண்டேன் ஊமைக்கனவுகள் தளத்தில் - பாரும்
பாப்புனைய விரும்பும் எல்லோருக்கும் ஏற்ற
இலக்கண ஆய்வுப்பாடம் ஆங்கே இருக்கே!
இழுத்தடிப்பு வேண்டாம் இப்பவே செல்லங்கே
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கியே படித்தங்கே
http://oomaikkanavugal.blogspot.com/2015/04/blog-post_24.html
இலக்கணம் அறிந்து தெளிந்த பின்
எழுதுகோல் ஏந்து இலகுவாய்ப் பாப்புனையலாம்!


Tuesday, May 5, 2015

இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்

இசைக்குப் பாடல் புனைவது பற்றிய அடிப்படைக்குறிப்புகளை கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.
http://paapunaya.blogspot.com/2014/01/blog-post_11.html
மேலும், இசைக்குப் பாடல் புனையும் வேளை எதுகை, மோனை போன்ற இலக்கணத் தெளிவு வேண்டும். அவ்வாறு எல்லாம் சரிபார்த்தீர்களா என்று கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.
http://paapunaya.blogspot.com/2014/09/blog-post_27.html

ஆனால், இன்று கவியரசர் கண்ணதாசன் வரிகள் எப்படிப் பாடலாயிற்று என்று பாருங்கள். ஈற்றுச் சீர் 'தான்' என்று முடியத் தக்கதாக கண்ணதாசன் ஆக்கிய கவிதையைப் பாருங்கள். இப்படி இசை சொட்டப் பாப்புனைந்தால், இசைக்குப் பாடல் புனைய வருமே

அத்தான்...என்னத்தான்...
அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி

அவர் கையைத்தான்
கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி

ஏனத்தான் என்னைப் பாரத்தான்
கேளத்தான் என்று சொல்லித்தான்
சென்ற பெண்ணைத்தான்
கண்டு துடித்தான் அழைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான் வளைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

ஈற்றுச் சீர் 'தான்' என்று முடியத் தக்கதாக கவியரசர் கண்ணதாசன் ஆக்கிய வரிகளில் இசை துள்ளி விளையாடுவதைப் பார்த்தீர்களா? திரை இசைப் பாடல்கள் எல்லாமே இசை துள்ளி விளையாடும் பா/கவிதை ஆக இருந்தே வந்திருக்கிறது. மேலும், பிறமொழிச் சொல்கள் உட்புகுத்தாத/ திணிக்காத பா/கவிதை வரிகளாக இவ்வெடுத்துக்காட்டு அமைந்திருக்கிறது. நீங்களும் இப்படித் தூயதமிழில் துள்ளி விளையாடும் இசையுள்ள பாக்கள்/கவிதைகள் புனைந்து பாருங்கள். பின் திரை இசைப் பாடல் போல அமைய இசைச்சுப் பாருங்கள்; அதற்கேற்ப உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்துங்கள். அவ்வாறு கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கீழே பாருங்கள்.

பாடல்: அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
குரல்: P.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
படம் : பாவமன்னிப்பு
இசை: விஸ்வநாதன் - இராமமூர்த்தி

அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி
அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

ஏனத்தான் என்னைப் பாரத்தான் கேளத்தான் என்று சொல்லித்தான் (2)
சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான் அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் முத்துத்தான் உடல் பட்டுத்தான் (2)
என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

நீங்களும் ஆக்கிய உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்தியதும் இசைச்சுப் பார்க்கையில் திரை இசைப் பாடல் போல அமைந்திருந்ததா? இதோ கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் ஒழுங்குபடுத்தப்பட்டதும் திரை இசைப் பாடலாக ஒரு காலத்தில் மின்னிய பாடலைக் கேட்டுப் பாருங்கள்.


மேலுள்ள பாடல் வரிகளைப் படித்த பின் பாடலையும் கேட்டுப் பார்த்து என்னதான் புரிந்து கொண்டீர்கள்? 'தான்' என்றவாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைவைதைக் கண்டிருப்பீரே! அந்த இசையே பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பதை அறிவீர்களா? இசையுள்ள பா/கவிதை எழுத முடிந்தால்; அதற்கும் இசை அமைக்கலாம். இசை மெட்டுக்கும் பாடல் எழுதலாம். எல்லாம் உங்கள் பயிற்சியிலேயே தங்கியிருக்கிறது.

மேலும், பாடல் எழுதப் பயிற்சியாகக் கீழொரு பாடலைத் தருகிறேன். அதில், முதல் பகுதியில் 'ன்று' என முடியுமாறும் இரண்டாம் பகுதியில் 'ஓ' என முடியுமாறும் அடுத்தடுத்து இவ்வாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைகின்றது. பாடல் வரிகள் திரையில் தோன்றுவதால் அதனைப் பார்த்துப் பார்த்து எழுதலாம். பார்த்து எழுதிய வரிகளை இசைத்துப் பாருங்கள்; அப்போது இசைக்குப் பாடல் புனையலாம் என எண்ணத் தோன்றும்.

பாடல்: நினைவிலே மனைவி என்று
படம்: ச ரி க ம ப
பாடியவர்: S.P.பாலசுப்பிரமணியம்
எழுதியவர்: உதயனன்.
இசை: ஸ்ரீகுமார்


இந்தப் பாடலையும் கேட்ட பின் இசைக்குப் பாடல் புனைய நம்பிக்கை வந்து விட்டதா? இல்லையெனில் பல பாடல்களைக் கேட்டுப் பயிற்சி செய்து பாருங்கள். பயிற்சி செய்திருப்பின் கீழ்வரும் இணைப்பில் இசைக்குப் பாடல் புனைவதற்கான போட்டி இடம்பெறுகிறது. அதில் பங்கெடுத்துத் திரைப்படங்களில் இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்.

இதோ வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” என்ற தலைப்பில் "மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015" இற்கான அறிவிப்பின் இணைப்பு.
http://valvaiyooraan.blogspot.com/2015/04/blog-post.html

Thursday, April 30, 2015

உங்கள் பாத்/கவிதைத் திறன் பற்றி எண்ணியதுண்டா?

இலக்கியங்களிலே கதையும் பாட்டும்
இரு கண்களாகத் தானிருக்கும் - அவ்
இரு கண்களாலே தான் - எந்த
மொழியிலுள்ள இலக்கியங்களையும்
பார்க்கக் கூடியதாக இருக்கிறதே!
கதையும் பாட்டும் புனைவதென்பது
கரும்பைப் பிழிந்து
சாறெடுப்பது போலத் தானிருக்கும்!
கதை என்றால் கதைச் சூழல்
கதைச் சூழலில் பங்கெடுக்கும் ஆள்கள்
(கதாபாத்திரங்கள்)
எல்லாம் கட்டியமைத்து
பக்கங்கள் நீண்டாலும் பக்குவமாக
இயல்பு வாழ்வைக் கண்டது போல
விருப்போடு வாசிக்கக் கூடியதாக
எளிமையான நடையில் எழுதவேண்டுமே!
பா/கவிதை, பாட்டு என்றால்
கதையை, உண்மையை, கருத்தை என
குறுக்கி, நறுக்கி நல்லிசை வரிகளில்
என்றும் அசைபோடத் தக்கதாக
சொல்களால் அடுக்கி ஆக்க வேண்டுமே!
கதையைப் படித்தால் எளிமை - ஆனால்
கதை என்றால் எளிதுமல்ல
பா/கவிதை, பாட்டு படித்தால் இனிமை - ஆனால்
பா/கவிதை, பாட்டு என்றால் இறுக்கமுமல்ல
அவரவர் ஆற்றலும் கைவண்ணமுமே!

"பதாகை" என்னும் வலைப்பூவில் "கம்பன் காதலன்" என்ற பதிவை அறிஞர் நாஞ்சில் நாடன் அவர்களின் "கம்பனின் அம்பறாத்தூணி" என்ற நூலிற்கான அறிமுகக் கட்டுரையாக அறிஞர் செந்தில்நாதன் அவர்கள் ஆக்கியிருந்தார். அவரது பதிவில் எடுத்துக்காட்டிற்காக கீழ்வரும் பா/கவிதை விளக்கம் இருந்தது.

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ

(கம்பனின் அம்பறாத்தூணி புத்தகத்தில் நாஞ்சில் நாடன் கொடுத்துள்ள தனிப்பாடல்)

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
(சீதையை மணப்பதற்காக இராமன் முறித்த சிவதனுசு மிதிலையில் இருந்தது)

கல் கிடந்தது கானகம் தன்னிலே
(இராமன் பாதம் பட்டு சாப விமோசனம் அடைவதற்காக அகலிகை கல்லாய் கானகத்தில் கிடந்தாள்)

நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
(கம்பனின் புரவலரான வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பனின் வீட்டில் வேண்டிய அளவு நெல் (செல்வம்) இருந்தது)

சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
(இராம காதை எழுதும் அளவுக்குச் சொல் கிடந்தது கம்பனின் மனத்திலே)

"பதாகை" என்னும் வலைப்பூவில் அறிஞர் செந்தில்நாதன் அவர்கள் ஆக்கிய "கம்பன் காதலன்" என்ற பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://padhaakai.com/2015/04/27/kamban-kadhalan/

பாபுனைய விரும்பும் உறவுகளே!
நாஞ்சில் நாடன் அவர்களின்
பாத்/கவிதைத் திறன் எப்படி என
அறிஞர் செந்தில்நாதன் அவர்கள்
வெளிப்படுத்தியிருப்பதைப் படித்ததும்
உங்கள் உள்ளத்தில் என்ன தோன்றியது?
ஐந்தடியில் ஒரு தனிப்பாடல் - அதில்
வில், கல், நெல், சொல் என வரும்
குறிலடுத்து வரும் எதுகை உடன்
அடிக்கொரு கதை அளக்கும் அழகு - அதை
வெளிக்கொணர எடுத்த சொல் குறைப்பு
கம்பனின் பாத்திறம் பகிர வந்த
நாஞ்சில் நாடன் பாவிலே பாரும்
பாபுனைய விரும்புவோர் பின்பற்ற வேண்டிய
பாத்/கவிதைத் திறன் பற்றியே - நீ
எண்ணிப்பார் நல்ல பாவலராகலாம்!
பாவலன்/கவிஞன் என்றால்
கரும்பைப் பிழிந்து சாறெடுப்பது போல
கம்பரின் இராமாயணத்தைப் பிழிந்து சாறாக்கி
நாஞ்சில் நாடன் தந்த பாப்போல
பாப்புனைவோர் என்று என்றும் மறவாதீர்!
"கம்பராமாயணத்தில் கம்பன் பயன்படுத்தியது
கிட்டத்தட்ட மூன்று இலட்சம் சொல்களாம்
10368 பாடல்கள், ஒவ்வொன்றும் நான்கடிகள்,
அதிகமும் அறுசீர் விருத்தம் என்பதால்
ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள்,
சில ஓரசைச் சீர்கள்,
சில ஈரசைச் சீர்கள் - அவற்றில்
திரும்பத் திரும்பப் பயன்படுத்திய
சொல்களைக் கழித்துப் பார்த்தால்
ஒன்றரை இலட்சம் சொல்கள்
இருக்கலாம் என்பது நாஞ்சிலின் துணிபு" என
அறிஞர் செந்தில்நாதன் சுட்டிக் காட்டியதை
கணக்கில் எடுத்து எண்ணிப் பார்த்தால்
நெடுங்கதையும் பெருங்கதையும் வந்தாலும்
பாவிலே சொல் எண்ணிக்கை குறைந்தாலும்
குறுகிய சொல்கள் எடுத்துச் சொல்லும்
பொருள் விரிப்பும் இசைக்கும் பாவழகும்
பாப்புனைவோர் காட்டும் பாத்திறம் என்பேன்!

Tuesday, April 14, 2015

எல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

(படம்: கூகிள் தேடலில்...)
எனது ஏழு வலைத் தளங்களின்
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
வாசகர் எல்லோருக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
என் இனிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Tuesday, March 31, 2015

பாப்புனைய (கவிதையாக்க) எண்ணமிடல் (கற்பனை) வேண்டுமே!

யாழ்பாவாணன் எழுதுவதெல்லாம்
பா (கவிதை) அல்ல - வெறும்
பா (கவிதை) நடையே - அதை
படியெடுத்தால் பாவாக்க (கவிதையாக்க) முடியாதே!
புதிதாய்ப் பாப்புனைய (கவிதையாக்க) விரும்புவோர்
புதுப்பா (புதுக்கவிதை) புனைய (ஆக்க) விரும்புவோர்
பாவலர் மூ.மேத்தா அவர்களின்
கண்ணீர்ப் பூக்களைப் படிக்கலாம்...
பாவலர் வைரமுத்து அவர்களின்
கவிராஜன் கதை படிக்கலாம்...
படித்துச் சுவைத்ததைப் பகிராமலே
படித்துச் சுவைத்ததைப் போலவே
பாப்புனையத் (கவிதையாக்கத்) தான் முயன்றாலும்
பாப்புனைய (கவிதையாக்க) எண்ணமிடல் (கற்பனை) வேண்டுமே!

கால்களை மேயும் கண்களால் கண்டதை
மீளவும் உள்ளக் கண்ணால் பார்த்தே
எண்ணமிட்டுப் (கற்பனை செய்து) பாரும்...
"வாலை ஒருவள் வந்த வழியைப் பாரேன்
காலைத் தூக்கி வைத்து நடப்பதைப் பாரேன்
வைத்த கால்ப் பெருவிரலின் போக்கைப் பாரேன்
நேர்கோடு ஒன்றில் பயணிப்பதைப் பாரேன்
நடைபயிலும் வாலையின் சுடும்காலைப் பாரேன்
சித்திரை வெயிற்றரை வாட்டுவதைப் பாரேன்" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"கால்நடைகள் நடக்கும் வீச்சுநடை போல
வீசும்காற்றுக்குத் தள்ளாடும் கமுகு போல
கண்முன்னே மண்விழுவான் நெழிவார் போல
வழியெதிரே ஆடியாடி விழுவார் போல
விழிமங்கக் குடித்தவர் வழியிலே வீழவே
வந்தகாற்று உடைபிடுங்க ஆளோ அம்மணம்!" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!

முகம் பார்க்கும் கண்ணாடியிலே கொஞ்சம் - தங்கள்
மூஞ்சியைப் பார்த்தால் பாப்புனைய முடியாதாம்
தெருவால போறவங்க மூஞ்சியைப் பார்த்தே
எத்தனை எத்தனை பாப்புனையலாம் பாரும்...
"செக்கச் சிவந்த பொட்டு இட்டவளே
கழுத்திலே மின்னும் கொடி போட்டவளே
கிட்ட வந்தவேளை கண்டுகொண்டேன் - உன்னை
எட்ட விலத்தி நடக்கிறேன் என்னவளைத் தேடி" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"திறந்த சட்டைக்குள்ளே தெரிவது தங்கச்சங்கிலி
தலையை வாரிவிடும் கையிலே மின்னுவது மோதிரம்
எல்லாமே தங்கப்பூச்சோ வாடகையோ - உன்
நடிப்பைக் கண்டு நானும் விலகினேனே - என்
தங்கமான என்னவனைத் தேடியே" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!

"நெஞ்சிலே தெரிவது எலும்பும் தோலுமே" என்று
கண்ணுக்கு எட்டிய ஆணைப் பார்த்தும்
"நெஞ்சிலே தெரிவது நீர்வீழும் வீழ்ச்சியோ" என்று
கண்ணுக்கு எட்டிய பெண்ணைப் பார்த்தும்
வயிற்றுக்கு மேலேமேயும் விண்ணர்கள் எழுதலாம்!
"நெடுநாள் அடக்கம் எவளை முடக்குமோ" என்று
எட்டி நடைபோடும் ஆணைப் பார்த்தும்
"நெடுநாள் முடக்கம் என்றோ அம்மாவாக்கவே" என்று
எட்டி நடைபோடும் பெண்ணைப் பார்த்தும்
வயிற்றுக்குக் கீழேமேயும் விண்ணர்கள் எழுதலாம்!

வழியிலே கண்டவர் வயிற்றைப் பார்த்து
வழியிலே நின்றவர் பேச்சைக் கேட்டு
பாப்புனைதல் (கவிதையாக்கல்) என்ற மலையின்
அடியில் ஊரும் எறும்பாகிய நாமும்
துளிப்பா (கைக்கூ) ஆயினும் புனைய முடியாதோ?
"அக்காவின் நிறைமாத வயிற்றைப் போல
தப்பாமல் நீண்டு மின்னும் வயிறானவள்
நமக்கு ஆகாதவள் ஆச்சே!" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"அக்காவின் நிறைமாத வயிற்றைப் போல
நீண்டு மின்னும் குடிகாரன் வயிறாச்சே
நமக்கு ஆகாதவன் ஆனானே!" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!

கல்லெறியோ சொல்லடியோ விழுந்தாலும் - நீ
மேலேமேய்வதையோ கீழேமேய்வதையோ விட்டிட்டு
நாட்டுக்கு நல்ல செய்தி சொல்ல - உன்
பாட்டுக்குச் சொல்லெடுத்து அடியமைத்து
பாப்புனைய (கவிதையாக்க) விரும்புங்கள் உறவுகளே!
பேச்சளவில் பாவலர் என்றெவர் சொன்னாலும்
எழுத்தளவில் எண்ணமிடலை (கற்பனையை) வைத்தே உணரலாம்
பாப்புனைய விரும்பும் உறவுகளே! - கொஞ்சம்
எண்ணமிடலை (கற்பனையை) வளப்படுத்தினால் பாரும்
பாவலராக வேறென்ன தகுதிவேண்டும் உமக்கு!

Tuesday, March 3, 2015

படியெடுத்துப் பாப்புனைவதில் யார் பெரியவர்?


படியெடுத்துப் பதிவெழுத அஞ்சுவோருமிருக்க
படியெடுத்துப் பதிவெழுதும் பெரியோருமிருக்க
படியெடுத்துப் பதிவெழுதத் தெரியாதோருமிருக்க
படியெடுத்துப் பாப்புனைவது எப்படி என்றால்
படியெடுத்தாலும் பிடிபடாமல் இருக்கவும் வேண்டுமே!

படியெடுத்தாலும் பிடிபடாமல் இருக்கத் தானே
சின்னப்பொடியன் யாழ்பாவாணனா பாவரசர் கண்ணதாசனா
படியெடுத்துப் பாப்புனைவதில் யார் பெரியவர்?
என்றாவது எப்பன் அறிந்திருந்தால் தானே
எப்பவும் படியெடுத்துப் பாப்புனையவாவது விரும்புவீர்?

மூ.மேத்தாவின் புதுக்கவிதை அடிகளா
வைரமுத்துவின் மரபுக்கவிதை அடிகளா
கண்ணதாசனின் பட்டுக்கோட்டையாரின் அடிகளா
சின்னப்பொடியன் யாழ்பாவாணன் பாப்புனைந்தால்
படியெடுத்தது எவரது அடிகளென அறீவீரே!

உள்ள எல்லா இலக்கியங்களிலும் சுழியோடி
மெள்ள நல்ல எண்ணங்களைப் பொறுக்கி
வெள்ளமெனத் தான் வடித்த பாக்களிலே
துள்ளியெழ நுழைத்து இருந்தும் கூட
கண்ணதாசன் படியெடுத்துப் பாப்புனைந்ததை எவரறிவார்?

கம்பனின் அழகுத் தமிழ் அடிகளா
காளமேகத்தின் புலமைத் தமிழ் அடிகளா
திருக்குறளின் குறளடியா திருப்புகழின் இசையடியா
அடிக்கு அடி படியெடுத்துப் பாப்புனைந்த
கண்ணதாசன் சொல்லியும் நம்ம மறுக்கிறீரே!

பிறரடி படியெடுத்துப் பிறர் கண்பட
யாழ்பாவாணன் பாப்புனைவதில் சிறியவரே...
பிறர் கண்ணில் விழுந்து விடாதபடி
பிறர் பாவடியின்றி நற்பொருள் படியெடுக்கும்
கண்ணதாசன் பாப்புனைவதில் பெரியவரே!

படியெடுத்துப் பாப்புனைவதில் சிறியவர் யாழ்பாவாணன்
படியெடுத்துத் தானும் சொல்லெறி வேண்டிக்கட்டுவார்
படியெடுத்துப் பாப்புனைவதில் பெரியவர் கண்ணதாசன்
படியெடுத்தாலும் படிப்பவர் உள்ளங்களைக் கட்டிப் போடுவார்
படியெடுக்கும் நுட்பமறிந்து பாப்புனைய வாருங்களேன்!

யாப்பறிந்த பின்னரே பாப்புனையலாம் என்பது
பாப்புனைய விரும்பும் உறவுகள் எல்லோருமே
அறிந்தாலும் தெரிந்தாலும் பாப்புனைய விரும்பினால்
கண்ணதாசன் பாக்களைப் பார்த்தேனும் பாப்புனையலாமே...
பாக்களைப் பார்த்தேனும் பாப்புனைந்தாலும் பாவலரே!

"தாலிக் கயிற்றை மாட்டப்போய் - பெண்ணே
தூக்குக் கயிற்றில் மாட்டிவிடாதே!" என்று
நானோர் ஏட்டில் படித்தேன் - அதனை
அப்படியே படியெடுத்துக் கொஞ்சம் அழகாக்கி - என்
கைவண்ணத்தில் புனைந்த பாவைப் படிப்பீரே!

"அடிநுனி முன்பின் ஏதுமறியா ஆணை
நம்பித் தலையை நீட்டும் பெண்ணே - உன்
கழுத்தில் விழுவது தாலிக்கயிறா தூக்குக்கயிறா - பின்
விளைவைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்தாயா?" என்ற
யாழ்பாவாணன் கைவண்ணம் எப்படி என்பீர்!

"மனைவியைத் தெரிவு செய்வதில் தோற்பவன்
மரணத்தைத் தெரிவு செய்வதில் வெல்கிறான்." என்று
கண்ணதாசன் எழுதிய வரிகளைப் படித்தேன் - அன்று
எண்ணிப் பார்த்தேன் படியெடுத்துப் பாப்புனைய - என்
கைவண்ணத்தில் புனைந்த பாவைப் படிப்பீரே!

"பெண்ணுள்ளம் என்னவென்று அறியாதவனே - நீ
நல்லதோர் இல்லாளைத் தெரிந்தெடுக்கத் தவறினால் - நீ
மெல்லச் சாவைத் தெரிந்தெடுத்து இருப்பாயே!" என்ற
யாழ்பாவாணன் கைவண்ணம் இப்படி என்றால் - உங்கள்
கைவண்ணம் எப்படியென வெளிக்கொணர முன்வருவீரே!

பாப்புனைய விரும்பும் இனிய உள்ளங்களே!
யாழ்பாவாணனைப் போலப் பிறரடிகளை அல்ல
கண்ணதாசனைப் போல நற்பொருளைத் தானே
படியெடுத்துப் பாப்புனைவதற்கும் பழகுங்கள் என்றே
நானழைப்பது பாப்புனைய விரும்புங்கள் என்பதற்கே!

Friday, February 13, 2015

உரைநடைக்கல்ல பாப்புனையவும் உதவுமே!

இனிய இலக்கணத் துளிகள்
இனி நம்மவர்
தவறின்றித் தமிழ் எழுத
தவறாமல் கற்க உதவுமே!
"சந்திப்பிழையின்றி எழுதுவோம்" என
அறிஞர் மணவை ஜேம்ஸ் அவர்கள்
ஆக்கிய ஆக்கம் கண்டு
பாப்புனைய விரும்புவோர்
சந்திப்பிழை நீக்கிப் பாப்புனைய
உதவுமென என எண்ணியே பகிருகிறேன்
பாப்புனைய விரும்புங்களேன்!
http://manavaijamestamilpandit.blogspot.com/2015/02/blog-post.html
http://manavaijamestamilpandit.blogspot.com/2015/02/2.html
அடுத்து வருவது
வல்லினம் மிகா இடங்களாம்...
எவர் தடுத்தாலும் - அதை
தவறாமல் படியுங்களேன்!
http://manavaijamestamilpandit.blogspot.com/2015/03/3.html

Saturday, January 24, 2015

பாலகணேஷின் கவிதை எழுதுவது எப்படி?


எழுதத்தான் எண்ணிவிட்டால் எழுதிவிடலாம்
எதைத்தான் எழுதிவிட்டால் மகிழ்ச்சியடையலாம்
அதைத்தான் வலைப்பூக்களில் தேடிவிடலாம்
அப்படித்தான் தேடியதைத்தான் பகிர்ந்துவிடலாம்
அப்படித்தான் பகிர்ந்ததைத்தான் படித்துவிடலாம்

இப்படித்தான் பா/கவிதை புனையத்தான்
எப்படித்தான் எனக்குதவியதோ அதைத்தான்
கவிதை எழுதுவது எப்படி? என்று தான்
பாலகணேஷின் பதிவைத்தான் பகிர்ந்தேன்
நீங்களும் தான் படித்தால் தான்
பா/கவிதை புனையத்தான் வேண்டியதைத் தான்
பாலகணேஷும் சொல்லியதைத் தான்
கருத்தில் கொண்டால் தான்
பா/கவிதை புனையலாம் தான்
என்றெல்லோ சொல்ல வந்தேன்!

"எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
உன்னிடத்தில் சொன்னதெல்லாம் கொஞ்சம்" என
"மின்னல்போல கண்ணில் தோன்றி
   மினுக்கி நடந்திட்டாள் அப்பாவை
கன்னல் மொழியதனைப் பேசி
   என் மனதைத் திருடிவிட்டாள்!" என
மரபுக்கவிதை நடை கூறுகின்றாரே!

"கடவுள் ஒருவர் இருந்தால்
கஷ்டம் இத்தனை தருவானா
திருடன், அயோக்கியனெல்லாம்
மகிழ்வாய்த்தான் திரிவானா?" என
"நிலவு தெரிந்தது
தண்ணீரில் என்
காதலி முகம்!" என
புதுப்பா, துளிப்பா நடை கூறுகின்றாரே!

படித்துத்தான் பார்த்தால் தான்
பா/கவிதை புனையத்தான்
பா/கவிதை நடையத்தான்
கண்டுபிடித்தாலும் தான்
எதுகை, மோனையைத் தான்
சுட்டிச் சொன்னாலும் தான்
சுவை சொட்டத்தான்
இசை முட்டத்தான்
பா/கவிதை இருக்கத் தான்
சற்று இலக்கணந் தான்
தெரிந்தால் போதும் தான்
என்றெல்லாம் எண்ணிக் கொள்ளத்தான்
பதிந்திருக்கிறார் நல்ல பதிவைத் தான்!

அதைத் தான்
நீங்களும் தான் படிக்கத் தான்
கீழுள்ள இணைப்பைத் தான்
உங்களுக்குத் தான் தந்தேனே!
http://minnalvarigal.blogspot.com/2014/01/blog-post_21.html

Thursday, January 15, 2015

தைப்பொங்கல் குறித்துப் பாப்புனைக

பாப்புனைதலும் சரி
கவிதை ஆக்குதலும் சரி
எம் கற்பனைக்கேற்ப எழுதிவிட்டால்
பா/ கவிதை ஆகாதே!
நூலைப் போல சேலை
தாயைப் போல மோளை
பாலைப் போல வெள்ளை
கடுகைப் போல காரம்
என்றடுக்கினால் போல
பா/ கவிதை ஆகாதே!
"பாலைப் போல
வெள்ளைச் சேலை உடுத்த அம்மா
குந்தியிருக்கக் கற கறவென
கிழிஞ்சு போகத் தானே தெரிந்தது
நூலைப் போல தானே
சேலை இருக்குமென்றே!" என்றால்
பா/ கவிதை போலத் தெரிகிறதே!
"தாயைப் போல
மோளைப் பார்த்தால் அழகி - அவளோ
சின்னப் பிள்ளை என்றாலும்
கடுகைப் போல காரமாய் - தன்
அறிவை வெளிப்படுத்தினாளே! என்றால்
பா/ கவிதை போலத் தெரிகிறதே!
தைப்பொங்கல்
குறித்துப் பாப்புனைக என்றதும்
"வளமுள்ளவர் வீடுகள் தோறும்
பொங்கல், படையல் என்றிருக்க
வீடு வீடாகச் சென்று
வளமற்றவர் கையேந்தி நிற்பதையும்
பகலவன் பார்ப்பாரே!" என்றால்
பா/ கவிதை போலத் தெரிந்தாலும்
"பொங்கின புக்கையை (பொங்கல்) விட
தண்டின புக்கையே (பொங்கல்) மேல்..." என்ற
தமிழ் முதுமொழியே நினைவிற்கு வருகிறதே!
பாப்புனைய விரும்பும் உறவுகளே
தைப்பொங்கல் குறித்துப் பாப்புனைய
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை,
உவமை, எதுகை, மோனை என
எல்லாம் தெரிந்தாலும் கூட
பா/ கவிதை புனையும் திறன் வேண்டுமே!
அதற்குத் தானே
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்களே
அது போலத் தானே
ஏற்றதொரு பா/ கவிதை புனைய
தேடலும் பயிற்சியும் வேண்டுமே!