Friday, October 31, 2014

சுவையான பாக்களை படித்தால்...


"பசுபதிவுகள்" என்ற
வலைப்பூ (Blog) ஆசிரியரும்
"கவிதை இயற்றிக் கலக்கு!" என்ற
நூலின் ஆசிரியரும்
"கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்ற
தலைப்பில் ஓர் இனிய பா தந்து
எப்படிப் பா புனைகிறார் என
எமக்கு விரித்து உரைக்கிறார்
படித்துப் பாருங்களேன்!

"வண்ணப் புனைவும் உணர்ச்சியையும்
 மண்டை முழுதும் தேடிடுவேன்;" என்றும்
"புனைவும் உணர்வும் இசைபாடும்;
 புதிய மயக்கம் ஆழ்த்திடுமக்
கனவின் விளிம்பில் உதிக்குமொரு
கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்றும்
பாவலர் பசுபதி கூறும் வழிகாட்டலை
பாப்புனைய விரும்புவோர் என்றும்
பாப்புனைகையிலே எண்ணிக்கொள்ளும்!

பாப்புனைய விரும்புவோர் - பலரது
சுவையான பாக்களை படித்தால்
பாப்புனைந்தவரின் கைவண்ணம் - அவர்
கையாளும் பாவண்ணம் எல்லாம்
உள்ளத்தில் இருத்திக் கொள்ளலாமே!
"கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்ற
பாவலர் பசுபதியின் கவிதையை
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியே
படித்துச் சுவைக்கலாம் வாருங்கள்!
http://s-pasupathy.blogspot.com/2014/10/blog-post.html