Saturday, August 10, 2013

தொல்காப்பியம் கூறும் ஆறு அறிவு

திருக்குறள் எழில் சோம.பொன்னுசாமி (திண்ணூர்தி தொழிற்சாலை, ஆவடி) அவர்கள் எழுதிய "திருவள்ளுவர் காட்டும் ஏழாம் அறிவு" (http://tamilkavinjarsangam.yolasite.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.php) என்ற பதிவொன்றை இணையப் பக்கமொன்றில் படித்தேன். இதனைப் படித்ததும் குப்புசாமி என்ற மலேசிய அறிஞர் எனக்குப் படிப்பித்தது நினைவுக்கு வந்தது. எனவே, பாபுனைய விரும்புவோருக்கு உதவுமென இப்பதிவை ஆக்கினேன்.

வள்ளுவரின் பாவடிகளிலும் தொல்காப்பியனாரின் பாவடிகளிலும் படிக்கப் பொருளறியச் சிக்கல் என்போருக்கு யாப்பறிந்து பாபுனைய முயலுங்கள் என்பார்கள். யாப்பறிந்து பாபுனைய முயலுமுன் அவர்களது பாவடிகளில் உள்ள பொருளறிந்தால், பாபுனைய முயல்வோருக்கு உதவுமென இப்பதிவை முன்வைக்கிறேன்.

"ஆறாம் அறிவுக்கும் மேலானதாக ஏழாம் அறிவு என்று ஒன்றுள்ளதாகப் பல அறிஞர்களும், சான்றோர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருவள்ளுவர் கூட எடுத்துக் காட்டியுள்ளார். அந்த ஏழாம் அறிவு என்பது எது...?

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல் (702 திருக்குறள்)

சிறிதும் ஐயமே இல்லாத வகையில் எதிரில் உள்ளவரின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை முழுமையாக உணர்ந்தும், தன் எண்ணத்தை அவர்க்கு உணர்த்தி இயங்க வைக்கும் வலிமைக் கொண்டவரைத் தெய்வத்தோடு இணையாக வைத்துப் போற்ற வேண்டும். திருவள்ளுவர் இதையே ஏழாம் அறிவாகக் குறிப்பிட்டுள்ளார்." என்று பொன்னுசாமி அவர்கள் ஏழாம் அறிவைப் விளக்குகிறார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது; வள்ளுவர் வெளிப்படுத்திய ஏழாம் அறிவும் அவர் கையாண்ட சொல் பாவனையும் தான். குறைந்த சொல்கள், குறைந்த அடிகள் மூலமாக மாபெரும் கருத்தை வள்ளுவர் வெளிப்படுத்த முடிந்தால்; நம்மால் ஏன் அப்படி எண்ணமிட்டு எழுத முடியாமற் போகிறது? எண்ணிப் பாருங்கள், எழுத முடியும்!

ஏழாம் அறிவுக்கு முன் ஆறு அறிவு எவை எவை என்று தெரியுமா?
கண் - பார்த்தல்
காது - கேட்டல்
மூக்கு - மணத்தல்
நாக்கு - சுவைத்தல்
தோல் - உணர்தல்
மேற்படி ஐம்புலன்களால் அறியப்படும் அறிவே ஐந்தறிவே. அப்படி என்றால் ஆறாம் அறிவு எந்தப் புலன் உறுப்பால் அறிய முடியும்? உள்ளம் (மனம்) என்ற உறுப்பால் புரிந்துகொள்ளலே ஆறாம் அறிவு எனலாம். மூளை இயங்கும் செயலே உள்ளம் (மனம்) என்றும் நல்லது, கெட்டது எதுவெனப் பகுத்தறிந்து புரிந்துகொள்ளலே ஆறாம் அறிவு என்றும் குப்புசாமி அவர்கள் விளக்கினார்.

இதற்குச் சான்றாகத் தொல்காப்பியம் கூறும் ஆறு அறிவுகளை கீழ்வரும் பாடல் விவரிக்கிறது.

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
(தொல்காப்பியம் மரபியல்)

இலக்கணப் பாக்களாலான (மரபுக் கவிதைகளாலான) தொல்காப்பியப் பாடலில் இவ்வாறு எளிமையாக ஆறு அறிவுகளை   விரித்து விளக்கப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம் கூறும் ஆறாம் அறிவா, ஆறு அறிவுகளா அத்தனையும் அழகே! இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது; இலக்கணப் பாவானாலும் (மரபுக் கவிதையானாலும்) எளிமையாக இருப்பின் எல்லோராலும் விரும்பப்படும் என்பதே!

பாபுனைய முயல்வோர் குறைந்த சொல்கள், குறைந்த அடிகள், எளிமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு பாபுனைய முன்வாருங்கள்.

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)

7 comments:

  1. பயன் மிக்க தகவல்கள், பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி.
      மீண்டும் வருக.

      Delete
  2. Hi,

    I disagree with the explanation given for the kural

    //ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
    தெய்வத்தோ டொப்பக் கொளல் (702 திருக்குறள்)//

    In my point of view Valluvar referring to something different.


    I would give the following meaning to that kural..

    without fear..who listen to agam or sees his aanmaa(spirit) or understand (agam) his spirit or realizes who is he..... .he should be considered at par with the god.

    I think this should be the real meaning of that kural.

    I can prove (trying to :) ) this by quoting another kural of valluvar.

    puath thooimai neeraal amaiyum
    agath thooimai vaaimaiyaal kaanappadum....

    in this he clearly says that puram (body) can be cleaned or pured by water.
    agam or aanmaa or spirit can be cleaned or pured by the truth (vaaimai)

    But what author says is also possible to do by the real siththar.

    Thanks for posting this.
    Sorry for typing in english..due to slow internet connection not able to type in Tamil.

    Regards,
    R.Puratchimani

    ReplyDelete
    Replies
    1. I referred a book that given English translation and meaning mentioned this Thirukkurel.
      ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
      தெய்வத்தோ டொப்பக் கொளல் (702 திருக்குறள்)

      Translation:
      Undoubting, who the minds of men can scan,
      As deity regard that gifted man.

      Explanation:
      He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).

      Do you have Tamil typing problem when use the following site.
      http://devkjeevan.webs.com/tamilfont.html

      Thanks your opinion

      Delete
    2. //He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within//
      This is fine. But I would exclude mind here.

      this Kural is not about mind..it is about spirit or self

      In simple meaning...self realized people can be compared
      at par with the god.

      Thanks for sharing the explanation and giving web page to type in English.
      I usually use Google transliteration for typing in Tamil http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/

      But due to slow internet connection it is not working.
      If possible, will write a Tamil Post about this shorty.
      Thanks

      Delete
  3. அருமைங்க :)
    ஆறாவது அறிவுக்கு ஆயிரம் விளக்கம் கொடுக்கின்றனர் நவீன மனிதர். அது மனமே என்பதை ஏனோ அறிவதும் உணர்வதும் இல்லை அவர்கள்!

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.