Monday, August 19, 2013

பாபுனையத் தெரிந்து கொள்வோமா?

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என யாப்பிலக்கணத் தொடரை எழுதி வருகிறேன். அதேவேளை பிற அறிஞர்களின் குறிப்புகளையும் இணைத்து வருகிறேன்.

ஆயினும் பிற அறிஞர்களின் சில யாப்பிலக்கண அடிப்படைக் குறிப்புகளை noolaham.org, projectmadurai.org ஆகிய தளங்களில் இருந்து பதிவிறக்கி "பாபுனையத் தெரிந்து கொள்வோம்" என்ற நூலைத் தொகுத்துள்ளேன். அதேவேளை எல்லாப் புகழும் நூலாசிரியர்களுக்கே சேரும்.

பல அறிஞர்களின் சிறு பதிவுகளைத் தந்த / தரும் யாழ்பாவாணன் ஆகிய நான், இந்நூற் தொகுப்பை எனது வலைப்பூப் பக்கத்தில் விரித்துப் பார்க்கவும் எனது மின்னூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கவும் இடமளித்திருத்திருக்கிறேன்.

யாப்பறிந்து பாபுனைய விரும்பும் எல்லோரும் இந்நூலைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://paapunaya.blogspot.com/p/blog-page_18.html
அல்லது பட்டியில் (Menu இல்) "பாபுனையப் படிப்போம்" என்ற பக்கத்தைச் சொடுக்குக.

முதலில் இந்நூற் தொகுப்பைப் படியுங்கள். இரண்டாவதாக இதன் நன்மை, தீமைகளைக் கூறி உங்கள் நண்பர்களையும் பார்வையிடச் செய்யுங்கள்.

இவ்வண்ணம்
தொடர்ந்தும் தங்கள் ஆதரவை நாடும்
உங்கள் யாழ்பாவாணன்





4 comments:

  1. என்றும் ஆதரவு உண்டு... இணைப்பிற்கு நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

      Delete
  2. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மதியுரையை ஏற்றுக்கொள்கிறேன்.
      விரைவில் தொடர்புகளை மேற்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.