Friday, June 12, 2015

உங்களுக்கும் துளிப்பா (ஹைக்கூ) எழுத வருமே!


ஓலைக் குடிலை நாடி
ஓட்டம் பிடிப்போரைப் பாரென்று
நாற்சந்தியில்
நாலாள் பேசிக்கொள்ள
காதுக்கெட்டிய பக்கமாய்
கண்ணாலே மேய்ந்தேன்...

உண்ணான
கண்ணாளன் வீட்டை
ஆளைஆள் விலத்திக்கொண்டு
"என்னண்ணே!
சுகமாய் இருக்கிறியளே?" என்று
கேள்வி மேல் கேள்வி கேட்டு
சுகமறியும் ஆள்களைக் கண்டேன்...

கணக்கர் சித்திரபுத்திரன் கடையில
காசாளராகப் பணியாற்றும்
ஏழைக் கண்ணாளனுக்கு
வாழைக்குட்டி நல்வாய்ப்புத் தாளில்
கோடி உரூபா பரிசு
விழுந்திருப்பதைக் கேள்விப்பட்டதும்
சுகமறியக் குழுமிய ஆள்களாம்...

காசில்லாதவர் என்று
எல்லோருமே கழித்து விட்டமையால்
ஏழைக் கண்ணாளனுக்கு
எப்பனும் எவரையும் தெரியாது தான்...
இப்ப என்னவென்றால்
வாழைக்குட்டி நல்வாய்ப்புத் தந்த
கோடி உரூபாவைக் கேள்வியுற்று
உறவு பேண வந்திட்டங்களாம்...

என்னமோ ஏதோவென்று
கண்ணாளனைக் கண்டறிய
"காசில்லையென்றதும் கழிச்சுவிட்டவங்க...
காசைக்கண்டதும் கைகுலுக்கலாமோ?
காசே தான் கடவுளடா!" என்றும்
"நேற்றோ என்னை ஒதுக்கி வைத்தவர்
இன்றோ என்னை அணைக்க வருகிறார்
கை நிறையக் காசு!" என்றும்
"நேற்றுவரை வீட்டுக்கு நாய் காவல்
இன்றிலிருந்து நம்மாளுகள் காவல்
கோடி உரூபா நல்வாய்ப்பு!" என்றும்
"நேற்றுவரை கடனிருக்கக் கனவிலே காசு
இன்றிலிருந்துக் கனவின்றித் தூக்கம் ஆச்சு
நல்வாய்ப்பாய் கோடி உரூபா!"  என்றும்
துளிப்பா (கைக்கூ) வாசித்தாரே!

"காதலி! காதலித்துத் தோற்றுப் போ!
பா/கவிதை புனைய வருமாம்" என்று
நானும் பல ஊடகங்களில் படித்தேன்...
பட்ட புண்ணையும் தொட்ட துயரையும்
உள்ளத்து மாற்றங்களையும்
உணர்வோடு வெளிக்கொணர்ந்தால்
கண்ணாளனைப் போலவே
துளிப்பா (கைக்கூ) எழுத வருமே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே!
மேலும், தகவலறிய
உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?
http://paapunaya.blogspot.com/2014/06/blog-post_20.html