Friday, January 11, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-002

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது
புலவர் ஓளவை அம்மா கூற்று!
எழுத்து உறுப்பிலே வரும்
எழுத்துக்களை வைத்துத் தான்
அசை உறுப்பைப் பார்க்கலாம்!
பாவினம் உறுப்பு ஒன்றிலே
எழுத்தெண்ணிப் பாவடிகளை
அமைக்கும் நிலையும் உண்டு!
யாப்பறிந்து பாபுனைகையிலே
எண்ணும் எழுத்தும்
கண்ணெனக் கருதுக...
பேச்சுக்கு முதல் வரும் ஒலியே
எழுத்து!
ஒலிக்கும் எழுத்தின்
ஒலியளவை வைத்தே
குறிலும் நெடிலும் வந்தாயிற்று!
எழுத்தொலியை அளக்க
"மாத்திரை" என்ற அலகுண்டு!
கண்ணிமைப் பொழுதோ
கைநொடிப் பொழுதோ
ஒரு மாத்திரையாம்!
குறுகிய ஒலியினை உடைய
, , , , ஒ என்பனவாம்
குறில் எழுத்துக்கள்!
நீண்ட ஒலியினை உடைய
, , , , , , ஔ என்பனவாம்
நெடில் எழுத்துக்கள்!
குறிலும் நெடிலும் இணைந்து முறையே
, , , , , , , , , , , ஔ ஆகிய
பன்னிரண்டும் உயிரெழுத்தாம்!
உயிரெழுத்துடனும்
மெய்யெழுத்துடனும்
இணையும் தனியெழுத்தே
உயிருக்கு அடுத்து வரும்
"" தான் ஆயுத (கருவி) எழுத்து!
"அய்யோ" என்பது சரியா
"ஐயோ" என்பது சரியா
"அவ்வை" என்பது சரியா
"ஓளவை" என்பது சரியா
தலையைப் பிய்க்கிற கேள்வி தான்!
தலையை உடைச்சுப் போடாதையும்...
இன உயிர் எழுத்துக்களை
- இனம் -
- இனம் -
- இனம் -
- இனம் -
- இனம் -
என்றவாறே
ஒரு நெட்டுக்கு ஒரு குறில்
இனமெனப் பார்த்தாலும்
'' இற்கும் '' இற்கும் இனமாக்க
குறில் ஒன்றுமில்லையே!
எப்படியோ
- இனம் -
- இனம் -
என்றும் ஏற்கப்பட்டாலும்
, உ ஆகிய குறில்கள்
இரண்டு நெட்டுக்கு இனமாவது எப்படி?
குறில் இன்றி
நெட்டெழுத்துத் தோன்ற
வாய்ப்பில்லையே!
கணப்பொழுது சிந்திக்கையில்
சுணக்கமின்றி
மூளை வேலை செய்தது...
+=அய் எனலாம்
+=அவ் எனலாம்
அடேங்கப்பா
இந்த 'அய்' தான் அந்த ''
இந்த 'அவ்' தான் அந்த ''
இப்ப ஒன்று மட்டும் புரியுது
'அய்' - கூட்டெழுத்து - ''
'அவ்' - கூட்டெழுத்து - ''
என்று தான் அமைந்திருக்கும்!
எழுத்துக்கு "ஐயோ"
யாப்பிற்கு "அய்யோ"
எழுத்துக்கு "ஓளவை"
யாப்பிற்கு "அவ்வை"
என்று தான்
யாப்பிலக்கணத்தில் பார்க்கமுடிகிறது!
நெட்டெழுத்தாக ஐ, ஔ ஆகிய
இரண்டையும் பாவிக்கலாம்...
இல்லாட்டிப் பாரும்
'அய்', 'அவ்' ஆகிய இரண்டையும்
கூட்டெழுத்தாகவும் பாவிக்கலாம்!
மனிதரின்
ஒலியுணர்வே
உயிரெழுத்தாயின்
உயிரின்றி இயங்காத
மனித உடலைப் போன்றதே
மெய் எழுத்துக்கள்!
மெய்யை உச்சரிக்கக்கூட
உயிரை இணைக்க வேண்டியிருக்கே...
'இக்', 'இங்', 'இச்', 'இஞ்',... என
உயிரைச் சேர்த்தே
மெய்யை வாயால் சொல்ல முடிகிறதே!
வல்லின ஒலியன்களான
க், ச், ட், த், ப், ற் என்பன
வல்லின மெய் எழுத்தாம்...
மெல்லின ஒலியன்களான
ங், ஞ், ண், ந், ம், ன் என்பன
மெல்லின மெய் எழுத்தாம்...
வல்லின ஒலிக்கும்
மெல்லின ஒலிக்கும்
இடைப்பட்ட ஒலியன்களான
ய், ர், ல், வ், ழ், ள் என்பன
இடையின மெய் எழுத்தாம்...
எழுத்தொழுங்கில்
எடுத்துச் சொல்லும் போது
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்,
ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்பன
மெய்யெழுத்து ஒழுங்காம்!
இன்னும் கொஞ்சம் போனால்
மெய்யோடு உயிரைச் செர்க்கையிலே
க் + = ; க் + = கா; க் + = கி; க் + = கீ;
க் + = கு; க் + = கூ; க் + = கெ ; க் + = கே;
க் + = கை; க் + = கொ; க் + = கோ; க் + = கௌ என
உயர், மெய் எழுத்துக்கள் ஆகலாம்!
கொஞ்சம் நில்லுங்கோ - இங்கு
மெய்யோடு;
உயர்க் குறில் இணையும் வேளை
உயர் மெய் குறிலும்
உயர் நெடில் இணையும் வேளை
உயர் மெய் நெடிலும்
தோன்றுவதைக் காண்பீரே!
அட! இங்கேயும் தான்...
"கய்யோ" என்பது சரியா
"கையோ" என்பது சரியா
"கவ்வை" என்பது சரியா
"கௌவை" என்பது சரியா
உயிரெழுத்தைப் படித்ததும்
இந்த 'கய்' தான் அந்த 'கை'
இந்த 'கவ்' தான் அந்த 'கௌ'
என்றவாறே
கூட்டெழுத்து, தனியெழுத்து
சிக்கல் தீர்ந்தததே!
மெய்  எழுத்துக்களில்
வல்லின மெய்களுக்கு முறையே
மெல்லின மெய்கள் இனமாயினும்
இடையின மெய்களுக்கு
இன எழுத்துக்கள் இல்லையே!
பேச்சுக்கு முதல் வரும்
ஒலியன்களான
உயர், ஆயுதம், மெய், உயர் மெய்,
குறில், நெடில், இன எழுத்து, கூட்டெழுத்து
என்றெல்லாம் அடுக்கி வர
சுட்டெழுத்து, வினா எழுத்து,
மொழி முதல் எழுத்து, மொழியீற்று எழுத்து
என்றெல்லாம் நீளுகிறதே!
(தொடரும்)

 முன்னையதைப் பார்க்க

5 comments:


  1. வணக்கம்!

    இன்யாழ்ப் பாவாணா் இங்கே இசைகின்றார்!
    நன்யாப்பு தீட்டும் நறுந்தமிழை! - என்வணக்கம்!
    சொந்தக் கவிமணக்கச் சூடும் மனமினிக்கச்
    சந்தக் கவிமணக்கச் சாற்று!

    ReplyDelete
    Replies
    1. போற்றும் பாவலர் கி.பாரதிதாசன் ஐயா!
      ஈற்றில் உலகெங்கும் நற்றமிழ் பரவ
      ஏற்று நான் தொடர்வேன்
      யாப்பறிந்து பா புனைதலை...

      Delete

  2. ஐயா வணக்கம்!

    தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அறிய தரவும்

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!
      நானொரு சின்னப் பொடியன்;
      என்னைத் தம்பி என்றே அழையுங்கள்!
      எனது மின்னஞ்சல் முகவரி:
      yarlpavavnan@hotmail.com

      Delete

    2. வணக்கம்

      தேனெனச் செந்தமிழைத் தீட்டித் திளைப்பவா்!
      ஊனென உற்ற உயிரென வாழ்பவா்!
      தானொரு சின்னப் பொடியென்றார்! சாற்றுகிறேன்
      வானென உள்ளார் மனத்து!

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.