Monday, July 21, 2014

உன் முதலிரவுப் படுக்கையறையில் நாடகமா? கவிதையா?


வாழ்க்கையில்
முதன் முதலாகச் சந்திக்கும்
காதலர் இருவரும்
மணமுடித்து முதலிரவில் சந்திக்கும்
புதுமண இணையரும்
நடிக்கின்ற நாடகமிருக்கே - அதை
கொஞ்சம் படியுங்க இங்கே!
புதிதாய் முளைத்த புதுக் காதல்
ஆளை ஆள் சந்திக்க வைத்த - அன்று
எதை எதைப் பேசுவதெனப் புரியாமல்
ஒருவருக்கு ஒருவர் வாய் திறந்தால்
என்னங்க...
என்னங்க...
எதையாவது சொல்லுங்க...
எதையங்க சொல்லுவனங்க...
இப்படித்தானங்க நாடகம் ஆடுவாங்கோ!
முதற் காதல் முதற் சந்திப்பை
பாப்புனைந்து காட்டு என்றால்
"உன்னைப் பார்த்த கண்ணும்
என்னைப் பார்த்த கண்ணும்
இரண்டும் இரண்டும் நான்கே
நாங்க சந்தித்த நாளன்றே
உன் உள்ளம் எண்ணியதும்
என் உள்ளம் எண்ணியதும்
முன் அறியாத உண்மையை!" என
எழுதி எழுதித் தாள்களை நிரப்புவாங்கோ!
"உன் முதலிரவுப் படுக்கையறையில்
நாடகமா? கவிதையா?" என்று
தலைப்பைப் போட்டு விட்டு
புதுக் காதல் முதற் காதல்
என்றெழுதிச் சொல்ல வந்தது - அந்த
ஆணுக்கும் பெண்ணுக்கும் புதிதாக
ஒரேயொரு படுக்கை அறையில்
ஒரேயொரு படுக்கையில் படுக்கவே
ஒரேயொரு முதலிரவு என்றுரைக்கவே!
விடிகாலை மூன்றுக்கு எழுந்தே
படிப்படியாப் பலதும் முடிந்திட
அடிச்சாப் போலவைந்து மணிக்கு
பொண்ணு கழுத்தை நீட்டவே
ஆணுதான் கொம்புத்தாலி கட்டவே
கற்கண்டு கொடுத்து மகிழ்ந்தே
மணமக்களை வாழ்த்தி முடியவே
மணநாள் சாப்பாடு விழுங்கினரே!
பகற்பொழுது முழுவதும் எப்படியோ
அப்படி அப்படிக் கரைந்திட
முன்னிரவு பதினொன்று நெருங்கிட
முதலிரவுப் படுக்கையும் அழகாக்கியே
முதலிரவுக்கு நேரமாச்செனச் சூழவுள்ளோர்
மணமக்களை நுள்ளியும் கிள்ளியும்
ஆகா... முதலிரவா... அம்மம்மா...
என்றெல்லாம் சொல்லி அனுப்பினரே!
முதலிரவுப் படுக்கைக்கு வந்தவங்க
விடிகாலை உடுத்திய உடுப்பை
விடுவிடெனக் கழட்டி வீசியே
ஆளுக்காள் தளர்வான உடையுடுத்தி
படுக்கையில் சரிந்துவிழ முன்னரே
பகற்பொழுதுக் களைப்பை விரட்டிவிட
பால்பழம் பங்கிட்டுப் பருகினரே!
இணையர்கள் படுக்கையில் சரிந்துவிழ
என்னங்க... இந்த இரவில...
அதுங்க... இந்த இரவை...
முதலிரவு என்று சொன்னாங்க...
நான் பிறந்து வளர்ந்துங்க...
நானும் அப்படித் தானங்கோ...
எந்த ஆணுக்கும் பக்கத்தில
நானும் படுக்கவில்லையே...
எந்த பெண்ணுக்கும் பக்கத்தில
நானும் தான் படுக்கவில்லையே...
இன்றைக்குத் தானங்கோ...
உங்களுக்குப் பக்கத்தில கிடக்கிறன்...
நானும் அப்படித் தானங்கோ...
இப்படியே இணையரும் நாடகமாட
இந்த இரவு எனக்கு முதலிரவு
எனக்கும் இது தானங்கோ...
விடிகாலை மூன்றாச்சு என்றாலும்
ஒளிநீக்கி உறங்கலாம் என்றனரே!
என்னங்க என்னை உரசுறீங்க...
இருட்டிலே ஏதேதோ பண்ணுறீங்க...
எப்பன் கொஞ்சம் தள்ளிக் கிடவுங்கோ...
உனக்கும் எனக்கும் - இதுவே
முதலிரவு என்றால் பாருங்கோ
இதெல்லாம் இயல்பு தானங்கோ...
என்றெல்லாம் ஐயம் தீர்த்த பின்னே
இருவர் இடையே இருந்த
இடைவெளி நீங்கிக் கொள்ள
உள்ளம் திறந்து பேசிக்கொண்ட
இருவரும் ஈருடல் ஓருயிராயினரே!
மணமக்கள் இருவரும் தானங்கோ
ஒட்டி உரசிப்பேசத் தொடங்கவும்
வெட்டி எறித்தான் பகலவன்
வீட்டார் தாழ்ப்பாளைத் தட்டி
விடிஞ்சாச்சு மணியேழு ஆச்சென்று
பால்த்தண்ணி பலகாரம் நீட்டியே
விடியவிடியத் தூங்கா மூஞ்சிகளான
இணையர்களின் நாடகத்தைக் கொஞ்சம்
முடித்து வைக்க முயன்றனரே!
பாப்புனைய விரும்பும் உறவுகளே...
நானுரைத்ததோ
முதலிரவு நாடகமென்று அறிவீரா?
பாப்புனையப் புறப்பட்டால் பாருங்கோ...
கருப்பொருளை வைத்துக்கொண்டு
கதைச்சூழல் எதுவெனச் சொல்லுவதாக
இருந்துவிடக் கூடாது பாருங்கோ...
கதைச்சூழலை வைத்துக்கொண்டே
கருப்பொருளைப் பா/கவிதை ஆக்குங்களேன்!
"இணையர் இணையும் முதலிரவு
கொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...
ஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து
ஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து
ஈருடல் ஓருயிராக இணைய முயலவே
முதலிரவு நாளன்று காலம் கரையவே
முழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே!" என
பாப்புனைய முயன்று பாருங்களேன்!
"முதலிரவு அன்று முட்டி முட்டியே
கொட்டிக் கொட்டியே ஐயம் தீர்க்க
ஆளாள் களையாது காலம் கரைய
விடிந்த பின்னரே தெரிய வந்தது
எதுவும் நிகழாத முதலிரவு!" என்றாவது
பாப்புனைய முயன்று பாருங்களேன்!





4 comments:

  1. Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. எதுவும் நிகழாத முதலிரவுக்குமா பா புனைய ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.