Friday, June 21, 2013

பா புனைய எது வேண்டும்?

பா புனையலாமென இருக்கையில் குந்தினேன்...
பா புனையும் வண்ணம்
எந்த எண்ணமும் தோன்றவில்லை...
"
பாட்டு வரும் கேட்டு வராது" என
நினைத்தேன் - அதுவே
என் பாவிற்கு முதலடியாயிற்று!
இரண்டாம் அடியைத் தேடினேன்...
நாட்டார் பாடல்கள்
கேட்டுக் கேட்டே செவிவழி வந்ததை
நினைவிற்கொள்ள
அடுத்த வரிகளும் வந்தமைந்தன!
பாட்டை ஏட்டில் எழுத
முட்டி மோதும் இலக்கண இடையூறுகள்
குறுக்கே வந்து நிற்குமென அஞ்ச
நான்காம் அடியும் வந்து சேர்ந்தது!
"
கொட்டிக் குவியும் எண்ணங்களால்
கட்டி எழுப்பலாம் பா" என்று
முடிவுக்கு வந்தாலும்
தலைப்பு தலையைப் பிய்த்தது!
ஒரு வழியாகப் 'பா புனைய...' என
தலைப்பிட்ட என் 'பா'வை
தொடர்ந்து படித்துப் பாருங்களேன்!
பாட்டு வரும் கேட்டு வராதென
நினைத்த வேளை
நாட்டார் பாடல்கள்
கேட்டுக் கேட்டே செவிவழி வந்ததென
நினைவில் உறுத்தியது!
பாட்டை ஏட்டில் எழுத
முட்டி மோதும் இலக்கண இடையூறுகள்
குறுக்கே வந்து நிற்க
கொட்டிக் குவியும் எண்ணங்களால்
கட்டி எழுப்பலாம் பா!

2 comments:

  1. பரவசப்படுத்தும் பா...

    வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தையும் வாழ்த்தையும் ஏற்றுக்கொள்கிறேன்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.