Wednesday, March 20, 2013

கரித்துண்டு


நாட்டில
அரசு கவிழும் என்றால்
மக்களிடையே
வேலையில்லாச் சிக்கல் தான்!
வீட்டில
உறவுகளிடையே முறிவு என்றால்
தலைவர்மாருக்கு
வேலையில்லாச் சிக்கல் தான்!
தெருவெளியில
காதல், மோதல் என்றால்
காளைக்கும் வாலைக்கும்
வேலையில்லாச் சிக்கல் தான்!
நடுவழியில
பிணவாடை வீசும் என்றால்
ஆளுக்காள்
வேலையில்லாச் சிக்கல் தான்!
செய்தி ஏட்டில
எத்தனையோ
இழவுச் செய்தி வந்தாலும்
அரசின் காதுக்கு எட்டல...
என் பாட்டில
எழுதக்கூட
எழுதுகோல் வேண்டக் காசில்லை...
நானும்
பாரதியைப் போல
கரிதுண்டு பிடித்து
தெருவெளியில எழுதப் போறேனுங்க...!

செய்தி:-
இந்தியாவில்
வெள்ளையனுக்கு எதிராக
பாரதி எழுப்பிய போர் முரசெல்லாம்
கரிதுண்டால் எழுதி
தெருச்சுவரெல்லாம்
நிரம்பி வழியக் கிடந்ததாமே!
சான்றுக்கு
பாவலர் வைரமுத்துவின்
"கவிராஜன் கதை" என்னும்
புதுக்கவிதைக் காவியத்தை
படித்துப் பாருங்களேன்!


2 comments:

  1. ஒருவேளை அரசிற்கு காதே இல்லையோ...?

    ReplyDelete
  2. அடுத்த தேர்தல் வரும் வரை
    அரசுக்குக் காது கேளாதாம்
    இப்படிக்கு
    நாடாளுமன்ற நாற்காலி!

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.