Wednesday, March 13, 2013

பா புனையப் படிக்க வேண்டுமா? - 01

காதல் வந்தால்
பா (கவிதை) புனையச் சுகம்
என்போரிருக்க
பா புனையப் படிக்க வேண்டுமா?
என்றும்
சிலர் கேட்காமலில்லை!
உண்ணான நல்ல கேள்வி தான்!
பா புனையப் படிக்க வேண்டாமப்பா...
பா புனைய முயன்று பாருங்களேன்!
முயன்ற வேளை
இலக்கணம் குறுக்க வந்து நிற்குதோ!
இலக்கணம் வருமுன்
இலக்கியம் தோன்றியதென்றால்
பா புனைய
இலக்கணம் குறுக்க வரலாமோ?
எடுத்துக்காட்டாக
"வயிறுப்பசி கிள்ள
மெள்ள அம்மாவின் நினைவு
மெல்ல உணவு தருவாளென்றே!" என்று
தொடுத்துப் பாருங்கள்...
உள்ளத்தில் உள்ளதை
இயல்பாக எடுத்துச் செல்லுங்களேன்...
அது கூட நல்ல பா தான்!

குறிப்பு: இலக்கணப் பாக்களில் (மரபுக் கவிதையில்) யாப்பிலக்கண வரம்பை மீறியும் பாக்கள் அமைவதாகக் குறிப்பிடப்படுகிறது. அதனைச் செந்தொடை என்பர்.
மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது.
சான்று: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.