Thursday, March 7, 2013

உங்களால் முடிந்தால்...


பாட முடிந்தால் பாடுங்கள்
ஆட முடிந்தால் ஆடுங்கள்
எழுத முடிந்தால் எழுதுங்கள்
நடிக்க முடிந்தால் நடியுங்கள்
பேச முடிந்தால் பேசுங்கள்
எண்ண முடிந்தால் எண்ணுங்கள்
பண்ண முடிந்தால் பண்ணுங்கள்
எல்லாம்
நல்ல தமிழாக இருக்க
உங்கள் கலைத்திறமையை
வெளிப்படுத்துங்கள் - அதுவே
உங்கள் உடல் அழிந்தாலும்
உங்களை உலகில்
பாரதியைப் போல...
கண்ணதாசனைப் போல...
வாழ வைக்கும் என்பதை அறிவீரா?
உண்மையைச் சொல்லப் போனால்
எந்தக் கலைஞனும்
இவ்வுலகிலே
சாவடைந்ததாக வரலாறு இல்லையே!

2 comments:

  1. yanna paa solaa vara atayavatu puriyaramaree solupaa

    ReplyDelete
    Replies
    1. ஒரே கருத்துப் பதிவிலே
      yanna solaratu nu puriyara marre solu paa
      yavaramm panalamaa...?
      இவற்றையும் சேர்த்திருக்கலாம்.

      அன்புடையீர்!
      எனது நோக்கு பாபுனைதலை ஊட்டி தமிழைப் பேணவைத்தல். அதற்குப் பாவல(கவிஞ)ராக வருமாறு அழைப்பு விட்டிருக்கிறேன். அதனை அழகுபடுத்தியிருக்கிறேன். மீள மீளப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.