Tuesday, May 5, 2015

இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்

இசைக்குப் பாடல் புனைவது பற்றிய அடிப்படைக்குறிப்புகளை கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.
http://paapunaya.blogspot.com/2014/01/blog-post_11.html
மேலும், இசைக்குப் பாடல் புனையும் வேளை எதுகை, மோனை போன்ற இலக்கணத் தெளிவு வேண்டும். அவ்வாறு எல்லாம் சரிபார்த்தீர்களா என்று கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.
http://paapunaya.blogspot.com/2014/09/blog-post_27.html

ஆனால், இன்று கவியரசர் கண்ணதாசன் வரிகள் எப்படிப் பாடலாயிற்று என்று பாருங்கள். ஈற்றுச் சீர் 'தான்' என்று முடியத் தக்கதாக கண்ணதாசன் ஆக்கிய கவிதையைப் பாருங்கள். இப்படி இசை சொட்டப் பாப்புனைந்தால், இசைக்குப் பாடல் புனைய வருமே

அத்தான்...என்னத்தான்...
அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி

அவர் கையைத்தான்
கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி

ஏனத்தான் என்னைப் பாரத்தான்
கேளத்தான் என்று சொல்லித்தான்
சென்ற பெண்ணைத்தான்
கண்டு துடித்தான் அழைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான் வளைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

ஈற்றுச் சீர் 'தான்' என்று முடியத் தக்கதாக கவியரசர் கண்ணதாசன் ஆக்கிய வரிகளில் இசை துள்ளி விளையாடுவதைப் பார்த்தீர்களா? திரை இசைப் பாடல்கள் எல்லாமே இசை துள்ளி விளையாடும் பா/கவிதை ஆக இருந்தே வந்திருக்கிறது. மேலும், பிறமொழிச் சொல்கள் உட்புகுத்தாத/ திணிக்காத பா/கவிதை வரிகளாக இவ்வெடுத்துக்காட்டு அமைந்திருக்கிறது. நீங்களும் இப்படித் தூயதமிழில் துள்ளி விளையாடும் இசையுள்ள பாக்கள்/கவிதைகள் புனைந்து பாருங்கள். பின் திரை இசைப் பாடல் போல அமைய இசைச்சுப் பாருங்கள்; அதற்கேற்ப உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்துங்கள். அவ்வாறு கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கீழே பாருங்கள்.

பாடல்: அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
குரல்: P.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
படம் : பாவமன்னிப்பு
இசை: விஸ்வநாதன் - இராமமூர்த்தி

அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி
அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

ஏனத்தான் என்னைப் பாரத்தான் கேளத்தான் என்று சொல்லித்தான் (2)
சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான் அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் முத்துத்தான் உடல் பட்டுத்தான் (2)
என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

நீங்களும் ஆக்கிய உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்தியதும் இசைச்சுப் பார்க்கையில் திரை இசைப் பாடல் போல அமைந்திருந்ததா? இதோ கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் ஒழுங்குபடுத்தப்பட்டதும் திரை இசைப் பாடலாக ஒரு காலத்தில் மின்னிய பாடலைக் கேட்டுப் பாருங்கள்.


மேலுள்ள பாடல் வரிகளைப் படித்த பின் பாடலையும் கேட்டுப் பார்த்து என்னதான் புரிந்து கொண்டீர்கள்? 'தான்' என்றவாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைவைதைக் கண்டிருப்பீரே! அந்த இசையே பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பதை அறிவீர்களா? இசையுள்ள பா/கவிதை எழுத முடிந்தால்; அதற்கும் இசை அமைக்கலாம். இசை மெட்டுக்கும் பாடல் எழுதலாம். எல்லாம் உங்கள் பயிற்சியிலேயே தங்கியிருக்கிறது.

மேலும், பாடல் எழுதப் பயிற்சியாகக் கீழொரு பாடலைத் தருகிறேன். அதில், முதல் பகுதியில் 'ன்று' என முடியுமாறும் இரண்டாம் பகுதியில் 'ஓ' என முடியுமாறும் அடுத்தடுத்து இவ்வாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைகின்றது. பாடல் வரிகள் திரையில் தோன்றுவதால் அதனைப் பார்த்துப் பார்த்து எழுதலாம். பார்த்து எழுதிய வரிகளை இசைத்துப் பாருங்கள்; அப்போது இசைக்குப் பாடல் புனையலாம் என எண்ணத் தோன்றும்.

பாடல்: நினைவிலே மனைவி என்று
படம்: ச ரி க ம ப
பாடியவர்: S.P.பாலசுப்பிரமணியம்
எழுதியவர்: உதயனன்.
இசை: ஸ்ரீகுமார்


இந்தப் பாடலையும் கேட்ட பின் இசைக்குப் பாடல் புனைய நம்பிக்கை வந்து விட்டதா? இல்லையெனில் பல பாடல்களைக் கேட்டுப் பயிற்சி செய்து பாருங்கள். பயிற்சி செய்திருப்பின் கீழ்வரும் இணைப்பில் இசைக்குப் பாடல் புனைவதற்கான போட்டி இடம்பெறுகிறது. அதில் பங்கெடுத்துத் திரைப்படங்களில் இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்.

இதோ வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” என்ற தலைப்பில் "மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015" இற்கான அறிவிப்பின் இணைப்பு.
http://valvaiyooraan.blogspot.com/2015/04/blog-post.html

9 comments:

  1. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  3. வணக்கம்
    கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. போட்டியில் கலந்து கொள்வோர் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  5. வாழ்த்துகள் அண்ணா

    ReplyDelete
  6. V tomto herním kasinu po dobu asi 3 let všem doporučuji vše v pořádku, žádné stížnosti nejsou všem radím - advcash

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.