Tuesday, March 3, 2015

படியெடுத்துப் பாப்புனைவதில் யார் பெரியவர்?


படியெடுத்துப் பதிவெழுத அஞ்சுவோருமிருக்க
படியெடுத்துப் பதிவெழுதும் பெரியோருமிருக்க
படியெடுத்துப் பதிவெழுதத் தெரியாதோருமிருக்க
படியெடுத்துப் பாப்புனைவது எப்படி என்றால்
படியெடுத்தாலும் பிடிபடாமல் இருக்கவும் வேண்டுமே!

படியெடுத்தாலும் பிடிபடாமல் இருக்கத் தானே
சின்னப்பொடியன் யாழ்பாவாணனா பாவரசர் கண்ணதாசனா
படியெடுத்துப் பாப்புனைவதில் யார் பெரியவர்?
என்றாவது எப்பன் அறிந்திருந்தால் தானே
எப்பவும் படியெடுத்துப் பாப்புனையவாவது விரும்புவீர்?

மூ.மேத்தாவின் புதுக்கவிதை அடிகளா
வைரமுத்துவின் மரபுக்கவிதை அடிகளா
கண்ணதாசனின் பட்டுக்கோட்டையாரின் அடிகளா
சின்னப்பொடியன் யாழ்பாவாணன் பாப்புனைந்தால்
படியெடுத்தது எவரது அடிகளென அறீவீரே!

உள்ள எல்லா இலக்கியங்களிலும் சுழியோடி
மெள்ள நல்ல எண்ணங்களைப் பொறுக்கி
வெள்ளமெனத் தான் வடித்த பாக்களிலே
துள்ளியெழ நுழைத்து இருந்தும் கூட
கண்ணதாசன் படியெடுத்துப் பாப்புனைந்ததை எவரறிவார்?

கம்பனின் அழகுத் தமிழ் அடிகளா
காளமேகத்தின் புலமைத் தமிழ் அடிகளா
திருக்குறளின் குறளடியா திருப்புகழின் இசையடியா
அடிக்கு அடி படியெடுத்துப் பாப்புனைந்த
கண்ணதாசன் சொல்லியும் நம்ம மறுக்கிறீரே!

பிறரடி படியெடுத்துப் பிறர் கண்பட
யாழ்பாவாணன் பாப்புனைவதில் சிறியவரே...
பிறர் கண்ணில் விழுந்து விடாதபடி
பிறர் பாவடியின்றி நற்பொருள் படியெடுக்கும்
கண்ணதாசன் பாப்புனைவதில் பெரியவரே!

படியெடுத்துப் பாப்புனைவதில் சிறியவர் யாழ்பாவாணன்
படியெடுத்துத் தானும் சொல்லெறி வேண்டிக்கட்டுவார்
படியெடுத்துப் பாப்புனைவதில் பெரியவர் கண்ணதாசன்
படியெடுத்தாலும் படிப்பவர் உள்ளங்களைக் கட்டிப் போடுவார்
படியெடுக்கும் நுட்பமறிந்து பாப்புனைய வாருங்களேன்!

யாப்பறிந்த பின்னரே பாப்புனையலாம் என்பது
பாப்புனைய விரும்பும் உறவுகள் எல்லோருமே
அறிந்தாலும் தெரிந்தாலும் பாப்புனைய விரும்பினால்
கண்ணதாசன் பாக்களைப் பார்த்தேனும் பாப்புனையலாமே...
பாக்களைப் பார்த்தேனும் பாப்புனைந்தாலும் பாவலரே!

"தாலிக் கயிற்றை மாட்டப்போய் - பெண்ணே
தூக்குக் கயிற்றில் மாட்டிவிடாதே!" என்று
நானோர் ஏட்டில் படித்தேன் - அதனை
அப்படியே படியெடுத்துக் கொஞ்சம் அழகாக்கி - என்
கைவண்ணத்தில் புனைந்த பாவைப் படிப்பீரே!

"அடிநுனி முன்பின் ஏதுமறியா ஆணை
நம்பித் தலையை நீட்டும் பெண்ணே - உன்
கழுத்தில் விழுவது தாலிக்கயிறா தூக்குக்கயிறா - பின்
விளைவைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்தாயா?" என்ற
யாழ்பாவாணன் கைவண்ணம் எப்படி என்பீர்!

"மனைவியைத் தெரிவு செய்வதில் தோற்பவன்
மரணத்தைத் தெரிவு செய்வதில் வெல்கிறான்." என்று
கண்ணதாசன் எழுதிய வரிகளைப் படித்தேன் - அன்று
எண்ணிப் பார்த்தேன் படியெடுத்துப் பாப்புனைய - என்
கைவண்ணத்தில் புனைந்த பாவைப் படிப்பீரே!

"பெண்ணுள்ளம் என்னவென்று அறியாதவனே - நீ
நல்லதோர் இல்லாளைத் தெரிந்தெடுக்கத் தவறினால் - நீ
மெல்லச் சாவைத் தெரிந்தெடுத்து இருப்பாயே!" என்ற
யாழ்பாவாணன் கைவண்ணம் இப்படி என்றால் - உங்கள்
கைவண்ணம் எப்படியென வெளிக்கொணர முன்வருவீரே!

பாப்புனைய விரும்பும் இனிய உள்ளங்களே!
யாழ்பாவாணனைப் போலப் பிறரடிகளை அல்ல
கண்ணதாசனைப் போல நற்பொருளைத் தானே
படியெடுத்துப் பாப்புனைவதற்கும் பழகுங்கள் என்றே
நானழைப்பது பாப்புனைய விரும்புங்கள் என்பதற்கே!

10 comments:

  1. அருமையாக கோர்த்து இருக்கின்றீர்கள் நண்பரே... வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. குறள்... குறள்... என்றும் திருக்குறளே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. படியெடுத்துப் பாப்புனைவதற்கு பழகுவோம்--வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. படியெடுத்து பாவலர் பொருள் எடுத்து
    பாடிடுவோம் பாக்கள் பல புலவரே.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. அருமையான வரிகள் அய்யா... முயல்வோம் பா புனைய.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.