Saturday, January 24, 2015

பாலகணேஷின் கவிதை எழுதுவது எப்படி?


எழுதத்தான் எண்ணிவிட்டால் எழுதிவிடலாம்
எதைத்தான் எழுதிவிட்டால் மகிழ்ச்சியடையலாம்
அதைத்தான் வலைப்பூக்களில் தேடிவிடலாம்
அப்படித்தான் தேடியதைத்தான் பகிர்ந்துவிடலாம்
அப்படித்தான் பகிர்ந்ததைத்தான் படித்துவிடலாம்

இப்படித்தான் பா/கவிதை புனையத்தான்
எப்படித்தான் எனக்குதவியதோ அதைத்தான்
கவிதை எழுதுவது எப்படி? என்று தான்
பாலகணேஷின் பதிவைத்தான் பகிர்ந்தேன்
நீங்களும் தான் படித்தால் தான்
பா/கவிதை புனையத்தான் வேண்டியதைத் தான்
பாலகணேஷும் சொல்லியதைத் தான்
கருத்தில் கொண்டால் தான்
பா/கவிதை புனையலாம் தான்
என்றெல்லோ சொல்ல வந்தேன்!

"எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
உன்னிடத்தில் சொன்னதெல்லாம் கொஞ்சம்" என
"மின்னல்போல கண்ணில் தோன்றி
   மினுக்கி நடந்திட்டாள் அப்பாவை
கன்னல் மொழியதனைப் பேசி
   என் மனதைத் திருடிவிட்டாள்!" என
மரபுக்கவிதை நடை கூறுகின்றாரே!

"கடவுள் ஒருவர் இருந்தால்
கஷ்டம் இத்தனை தருவானா
திருடன், அயோக்கியனெல்லாம்
மகிழ்வாய்த்தான் திரிவானா?" என
"நிலவு தெரிந்தது
தண்ணீரில் என்
காதலி முகம்!" என
புதுப்பா, துளிப்பா நடை கூறுகின்றாரே!

படித்துத்தான் பார்த்தால் தான்
பா/கவிதை புனையத்தான்
பா/கவிதை நடையத்தான்
கண்டுபிடித்தாலும் தான்
எதுகை, மோனையைத் தான்
சுட்டிச் சொன்னாலும் தான்
சுவை சொட்டத்தான்
இசை முட்டத்தான்
பா/கவிதை இருக்கத் தான்
சற்று இலக்கணந் தான்
தெரிந்தால் போதும் தான்
என்றெல்லாம் எண்ணிக் கொள்ளத்தான்
பதிந்திருக்கிறார் நல்ல பதிவைத் தான்!

அதைத் தான்
நீங்களும் தான் படிக்கத் தான்
கீழுள்ள இணைப்பைத் தான்
உங்களுக்குத் தான் தந்தேனே!
http://minnalvarigal.blogspot.com/2014/01/blog-post_21.html

7 comments:

  1. Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. ஆஹா... ரசித்ததை அறிமுகப்படுத்தறதுல கூட வித்தியாசமா பா புனைந்து அசத்திட்டீங்க நண்பரே... அசத்தல். மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.