Thursday, September 18, 2014

தேடல் முயற்சியும் தேறல் உணர்வும்


பாபுனையும் போது
இசை (ஓசைநயம்) கருதி
சொல் எடுத்தாள முனைவோம்...
என்னமோ
வாசிக்கையிலே
"பட்டி தொட்டி எங்கும் பார்
கொட்டி முட்டி நாறுது பார்
நம்மவர் வீட்டுக் குப்பை!" என்று
அமைந்திருந்தால்
அழகான பா/கவிதை என்பீர்!
இசை (ஓசைநயம்) அமைய
பாபுனையும் போது - நம்
முயற்சி எப்படியோ
அப்படித்தானே
பா/கவிதை அமையும் என்பதை
நாமறிவோம் - அதை
பாவலர் ரமணி அவர்கள் - தங்கள்
பாவண்ணத்தில் அளந்து விட்டதை
பாபுனைய விரும்பும்
உங்கள் எண்ணத்தில் வெளிப்படுத்த
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
கொஞ்சம் படித்துத் தேறுங்களேன்!

" சந்தம் ஒன்னு நெஞ்சில் நின்னு
http://yaathoramani.blogspot.com/2014/09/blog-post_16.html "

பாபுனைய விரும்பும் வேளை
நாம் தேடித் தேறிய
சொல்களின் கூட்டழகு
அடிகளின் நடையழகு
படிக்கையில் உணரும் இசையழகு
எல்லாம் தானே துணைக்கு வருவதால்
தேடல் முயற்சியும் தேறல் உணர்வும்
நல்ல பாவலனாக்கப் பணி செய்யுமே!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.