Saturday, August 23, 2014

பாரும் பாப்புனைதலுக்கான போர்க்களம்

தீபாவளி(2014) நாளன்று
வலைப்பதிவர் ரூபன் குழுவினர்
உலகளாவிய பதிவர்களிடையே
முதலாவதாக - தாங்கள்
சுட்டும் ஒளிப்படத்தை வைத்தும்
இரண்டாவதாக - உங்கள்
உள்ளத்திலெழும் எண்ணங்களை வைத்தும்
பாப்புனையப் போர்க்களம் அமைத்துள்ளனரே!
(விரிப்பறிய : http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html)
பாப்புனைதலுக்கான போரக்களத்தில்
குதிக்கப் பின்வாங்கும் பதிவர்களே...
பந்திக்கு பின்வாங்காத நீங்கள்
பாப்புனைய முன்னேற வேண்டாமா?
எண்ணிய எல்லாம் எழுதலாம்...
பண்ணிய கூத்துக்களையும் எழுதலாம்...
பாப்புனைதலுக்கான போர்க்களத்தில்
குதிக்கலாம் வாருங்கள் பதிவர்களே!
ஒழுங்கான பா/கவிதை என்றமைந்தால்
பாட்டு (யாப்பு) இலக்கணம் ஒத்துழைக்குமே...
ஒழுங்கான பா/கவிதை அமைந்திட
எண்ணிய எண்ணங்களை எல்லாம்
விரும்பிய வண்ணங்களாய் எழுதியே
மழுங்கிய வாசகர் உள்ளங்களில்
கூர்மையான எண்ணங்கள் தோன்ற
நறுக்காக நொறுக்கிய சொற்களால்
மிடுக்கான கருத்துக்கூறி எழுதினால்
எழுதியதை வாசித்தால்
வாசிப்பவர் உள்ளம் இனிப்படைத்தாலும்
சட்டென்று சொல்ல வந்த செய்தி
உள்ளத்தைத் தைத்தால் தானே
நீங்களும் பாவலர்/கவிஞர் என்பேன்!
உள்ளத்திலெழும் எண்ணங்களை வைத்து
பாப்புனையத் தானே தெரிந்தாலும் கூட
சுட்டும் ஒளிப்படத்தை வைத்தும் கூட
பாப்புனைய வேண்டுமாமே என்றால்
பாப்புனைதலுக்குப் பின்வாங்க எண்ணலாமோ?
ஒளிப்படத்தைப் பார்த்ததும் தோன்றிய
எண்ணங்களை எழுதிக் குவித்தாலும் கூட
ஒளிப்படம் சுட்டிய செய்தியைத் தானே
பாவாக/கவிதையாக புனைந்தால் தானே வெற்றி!
"கண்டேன் தெருப்பெண்ணின் ஆடையை
ஆடையை வைத்தே எண்ணினேன்
எண்ணிய எண்ணம் சொல்கிறதே
சொல்லாத அவளது ஏழ்மையை!" என்றும்
"ஒளிப்படத்தில் மின்னும் மங்கை தானே
கங்கைக் கரையிலே பூப்பறித்து
பறித்த பூவைக் கைத்தட்டில் வைத்தே
வைத்த கண் வாங்காமலே - ஆங்கே
எங்கேயோ எவரையோ மேய்கிறாளே!" என்றும்
எடுத்துக்காட்டாகச் சில வரிகள் சிந்தித்தேன்!
எண்ணங்களின் தொகுப்போ
ஒளிப்படத்தின் செய்தியோ
பாவாக/கவிதையாக அமையலாம்
எண்ணிப் பாருங்கள்... எழுதிப் பாருங்கள்...
பாப்புனைதலுக்கான போர்க்களத்தில்
பாப்புனைவோருடன் மோதிக்கொள்ள
உலகெங்கும் இருந்தே படையெடுத்தே
போட்டியில் குதிக்கலாம் வாருங்களேன்!

உங்கள் நண்பர்கள் எல்லோரையும் இப்போட்டியில் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.

4 comments:

  1. போட்டிக்கு அழைக்கும் பொதுப்பார்வை அழகு ஐயா ஆனால் பா இயற்றும் நேரச்சிக்கல் போல பயம் இன்னும் பார்க்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. எழுத எழுதுகோலும்
      பதிய எழுதுதாளும்
      ஏந்திய பின் அச்சம் (பயம்) எதற்கு?
      தன்னம்பிக்கை தான்
      அச்சம் (பயம்) போக்க நல்மருந்து!

      Delete
  2. இந்த பதிவை கண்டவுடன் உடனேயே பதிவு போட்டு விட்டேன் சகோ ! அழைத்த விதம் அருமை விரும்பத் தக்கது. வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துகள். மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.