Sunday, April 28, 2013

பா(கவிதை) புனையும் போது...


புதுக்கவிதையாயினும் சரி
வரி(வசன) கவிதையாயினும் சரி
அடிகளை(வரிகளை) விரும்பியவாறு
நீட்டிமுடக்க முடியாதே!
ஒவ்வொரு அடிக்கும்
ஒவ்வொரு மூச்சிருக்கும்
அதன்படிக்கு
அடிகள்(வரிகள்) அமைத்து எழுதினாலே
கவிதை!
எடுத்துக்காட்டாகப் பாரும்
"பச்சடியும் பழஞ்சோறும் மனைவி குழைத்துத்தரத் தின்றேன்." என்றால் 
கட்டுரை வரி என்க...
"மனைவி குழைத்துத் தந்த 
பச்சடியும் பழஞ்சோறும் 
என் பசியைப் போக்கியதே!" என்றால் 
கவிதை என்பேன்!
"கட்டுரை வரியாக இருந்ததை
மனைவியின் செயல்
உண்ணும் உணவு
என்னில் நிகழ்ந்த மாற்றம்" என
ஒவ்வொரு அடியிலும் மூச்சிருக்க
அடிகளை(வரிகளை) 
நீட்டிமுடக்கியதாலே தான்
கவிதை ஆயிற்றே!
"மனைவி குழைத்துத் தந்த 
பச்சடியும் பழஞ்சோறும் 
என் பசியைப் போக்கியதே!" என்றால் 
புதுக்கவிதை!
"பச்சடியும் பழஞ்சோறும் மனைவி குழைத்துத் தந்ததும் என் பசியும் அடங்கியது." என்றால் 
வரி(வசன)க் கவிதை!
நண்பர்களே!
எழுதும் போது 
கட்டுரை வரிகளாகத் தலை நீட்டாத
உணர்வுள்ள, மூச்சுள்ள வரிகளாக
பா(கவிதை) புனையுங்களேன்!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.