Showing posts with label யாப்பறிந்து பா புனையுங்கள். Show all posts
Showing posts with label யாப்பறிந்து பா புனையுங்கள். Show all posts

Wednesday, July 31, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-012


பேச்சின் மூலம் ஒலியாம்
ஒலியின் வடிவம் எழுத்தாம்
எழுத்தால் ஆனது அசையாம்
அசையால் ஆனது சீராம்
சீரைக் கொஞ்சம்
விரித்துப் பார்த்தால் தவறில்லையே!
இரண்டு அசைகள்
இணைந்து வருதலே சீர் என்றாலும்
ஓர் அசையால் ஆனது
ஓரசைச் சீர் என்றும்
இரண்டு அசையால் ஆனது
ஈரசைச் சீர் என்றும்
மூன்று அசையால் ஆனது
மூவசைச் சீர் என்றும்
நான்கு அசையால் ஆனது
நாலசைச் சீர் என்றும்
நால் வகைச் சீர்களைக் காண்பீரே!
யாப்பிலக்ணப் பாக்களில்
வெண்பாவில் மட்டுமே
ஈற்றடி ஈற்றுச் சீராக
ஓரசைச் சீர் கையாளப்படுகிறதே!
அசை பற்றி அலசுகையில் கற்ற
நேர், நிரை, நேர்பு, நிரைபு என்றும்
நினைவூட்டலுக்கு எளிதாக
நாள், மலர், காசு, பிறப்பு என்றும்
ஓரசைகளையும் - அதற்கு
ஒத்த வாய்ப்பாடுகளையும்
தனியசைச் சீர் / ஓரசைச் சீர் என்க!
எடுத்துக்காட்டாக
"சான்றோன் எனக் கேட்ட தாய்" என
69 ஆவது திருக்குறளில் வரும்
"தாய்" என்ற ஓரசைச் சீர்
'நேர்' அசையாகவும் 'நாள்' வாய்ப்பாடாகவும்
"மழலைச்சொல் கேளா தவர்" என
66 ஆவது திருக்குறளில் வரும்
"தவர்" என்ற ஓரசைச் சீர்
'நிரை' அசையாகவும் 'மலர்' வாய்ப்பாடாகவும்
"நன்கலம் நன்மக்கட் பேறு" என
60 ஆவது திருக்குறளில் வரும்
"பேறு" என்ற ஓரசைச் சீர்
'நேர்பு' அசையாகவும் 'காசு' வாய்ப்பாடாகவும்
"மன்னுயிர்க் கெல்லாம் இனிது" என
68 ஆவது திருக்குறளில் வரும்
"இனிது" என்ற ஓரசைச் சீர்
'நிரைபு' அசையாகவும் 'பிறப்பு' வாய்ப்பாடாகவும்
அமைந்திருப்பதை அறிவீரே!
நேர்பசை(நேர்பு அசை), நிரைபசை(நிரைபு அசை),
நேரசை, நிரையசை ஆகிய
நான்குமிணைந்து உருவானது
அசைச்சீர் என்றும்
தனியசைச் சீர் / ஓரசைச் சீர் என்றாயிற்று!
நேரசை, நிரையசை இரண்டுமிணைந்தால்
"ஆசிரியச்சீர்" என்றாகி
ஈரசைச் சீர்களாய்ப் பிணையுமாம்!
ஈரசைச் சீர்களால் ஆனது
ஆசிரியப்பா என்பதால் பாரும்
ஆசிரியச்சீர் என்றும் அழைத்தனர் போலும்!
ஆசிரியப் பாவுக்கே உரிய சீர் என்பதால்
ஆசிரிய உரிச்சீர் என்றும்
அகவலும் ஆசிரியப் பாவிலொரு வகையாம்
ஆகையால் பாரும்
அகவற் சீர் என்றும் அழைக்கமுடிகிறதே!
நேர், நிரை அசைகளை
நேர் + நேர் என்றமைய இணைத்தால்
தே + மா = தேமா எனவும்
நிரை + நேர் என்றமைய இணைத்தால்
புளி + மா = புளிமா எனவும்
நிரை + நிரை என்றமைய இணைத்தால்
கரு + விளம் = கருவிளம் எனவும்
நேர் + நிரை என்றமைய இணைத்தால்
கூ + விளம் = கூவிளம் எனவும்
ஈரசைச் சீர் வாய்ப்பாடு அமைய
இணைவதைப் பாருங்களேன்!
'மா' என முடியும் சீர்களை
மாச்சீர் என்றும்
'விளம்' என முடியும் சீர்களை
விளச்சீர் என்றும்
யாப்பில் அழைக்கப்படுகிறதே!
பாபுனையும் வேளை
வேண்டிய ஒழுங்கில் சீரமைக்க
அசை பிரித்தல் தேவையே!
"வந்தான் படித்தான் உழைக்கவே என்றவன்" என்ற
அடியில் வரும் சீர்களை
வந் + தான் = வந்தான்
(நேர்) + (நேர்) = (தேமா) என்றும்
படித் + தான் = படித்தான்
(நிரை) + (நேர்) = (புளிமா) என்றும்
உழைக் + கவே = உழைக்கவே
(நிரை) + (நிரை) = (கருவிளம்) என்றும்
என் + றவன் = என்றவன்
(நேர்) + (நிரை) = (கூவிளம்) என்றும்
அசை பிரித்தல் நன்றென்பேன்!
எடுத்துக்காட்டாக
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக." என்னும்
வள்ளுவரின் குறள் வெண்பாவை
அசை பிரித்து ஆய்வு செய்தால்
கற்(நேர்) + க(நேர்) = கற்க(தேமா)
கச(நிரை) + டறக்(நிரை) = கசடறக்(கருவிளம்)
கற்(நேர்) + பவை(நிரை) = கற்பவை(கூவிளம்)
கற்(நேர்) + றபின்(நிரை) = கற்றபின்(கூவிளம்)
நிற்(நேர்) + க(நேர்) = நிற்க(தேமா)
அதற்(நிரை) + குத்(நேர்) = அதற்குத்(புளிமா)
தக(நிரை) = தக(மலர் - அசைச்சீர் வாய்ப்பாடு)
என்றவாறு அமைவதைக் காண்பீரே!
எழுத்துத் தெரிந்து, அசை அறிந்து,
சீர் அமைத்துப் பா புனைய
அசை பிரித்துப் பழகுதலே
நல்ல பயிற்சி என்பேன்!
இயற் சீர்களாகிய
மாச்சீர், விளச் சீர்களுடன்
நேரசை, நிரையசை இணைய
மூவசைச் சீர்கள் தோன்றக் காண்பீரே!
நேர் + நேர் + நேர் என்றிணைய
தே + மாங் + காய் = தேமாங்காய் எனவும்
நிரை + நேர் + நேர் என்றிணைய
புளி + மாங் + காய் = புளிமாங்காய் எனவும்
நிரை + நிரை + நேர் என்றிணைய
கரு + விளங் + காய் = கருவிளங்காய் எனவும்
நேர் + நிரை + நேர் என்றிணைய
கூ + விளங் + காய் = கூவிளங்காய் எனவும்
நேர் + நேர் + நிரை என்றிணைய
தே + மாங் + கனி = தேமாங்கனி எனவும்
நிரை + நேர் + நிரை என்றிணைய
புளி + மாங் + கனி = புளிமாங்கனி எனவும்
நிரை + நிரை + நிரை என்றிணைய
கரு + விளங் + கனி = கருவிளங்கனி எனவும்
நேர் + நிரை + நிரை என்றிணைய
கூ + விளங் + கனி = கூவிளங்கனி எனவும்
காய்ச்சீர், கனிச்சீர் என
மூவசைச் சீர்கள் அமைவதைப் பார்த்தீரே!
காய்ச்சீர் நான்கினையும்
இடைச்சீர் எனினும்
வெண்பா உரிச்சீர் என்றும்
(வெண்பாவுக்கு உரிய சீர்)
கனிச்சீர் நான்கினையும்
கடைச்சீர் எனினும்
வஞ்சி உரிச்சீர் என்றும்
(வஞ்சிப் பாவுக்கு உரிய சீர்)
யாப்பில் கையாளப்படுகிறதே!
தொல்காப்பியர் காலத்தில் இல்லாத போதும்
பின் தோன்றிய நான்கசைச் சீர்கள்
பெறுமதியிழந்து
பின் நாளில் மறைந்தாலும்
அசை, சீர் பயிற்சிக்காக
விரித்துக் காட்டுகிறேன் பாரும்!
காய்ச்சீர், கனிச்சீர் உடன்
நேரசை, நிரையசை இணைய
'காய்' வரின் 'தண்' எனவும்
'கனி' வரின் 'நறும்' எனவும்
பூச்சீர், நிழற் சீராக
நாலசைச் சீர் அமைகிறதே!
நேர் + நேர் + நேர் + நேர் எனின்
தேமாந்தண்பூ எனவும்
நிரை + நேர் + நேர் + நேர் எனின்
புளிமாந்தண்பூ எனவும்
நிரை + நிரை + நேர் + நேர் எனின்
கருவிளந்தண்பூ எனவும்
நேர் + நிரை + நேர் + நேர் எனின்
கூவிளந்தண்பூ எனவும்
நேர் + நேர் + நிரை + நேர் எனின்
தேமாநறும்பூ எனவும்
நிரை + நேர் + நிரை + நேர் எனின்
புளிமாநறும்பூ எனவும்
நிரை + நிரை + நிரை + நேர் எனின்
கருவிளநறும்பூ எனவும்
நேர் + நிரை + நிரை + நேர் எனின்
கூவிளநறும்பூ எனவும்
நேர் + நேர் + நேர் + நிரை எனின்
தேமாந்தண்ணிழல் எனவும்
நிரை + நேர் + நேர் + நிரை எனின்
புளிமாந்தண்ணிழல் எனவும்
நிரை + நிரை + நேர் + நிரை எனின்
கருவிளந்தண்ணிழல் எனவும்
நேர் + நிரை + நேர் + நிரை எனின்
கூவிளந்தண்ணிழல் எனவும்
நேர் + நேர் + நிரை + நிரை எனின்
தேமாநறுநிழல் எனவும்
நிரை + நேர் + நிரை + நிரை எனின்
புளிமாநறுநிழல் எனவும்
நிரை + நிரை + நிரை + நிரை எனின்
கருவிளநறுநிழல் எனவும்
நேர் + நிரை + நிரை + நிரை எனின்
கூவிளநறுநிழல் எனவும்
நாலசைச் சீர் அமைவதைக் காணும்!
நான்கு அசைச் சீர்கள்
நீண்டிருப்பதால்
பா புனையப் பாவித்தால்
வரிப்பா(வசன கவிதை) போலவோ
உரை நடை போலவோ
அமைந்திட வாய்ப்பிருக்கே!
புலவர் வெற்றியழகனின் கருத்துப்படி
வஞ்சிப்பாவில் மட்டும் தானாம்
நாலசைச் சீர் வந்துள்ளதாம்!
அசை, சீர், அலகிடல் பற்றி
மீளவும் மீட்டுப் பார்ப்போமே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/07/011.html

Sunday, July 14, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-011

எழுதப்படுவது எழுத்துப் போல
பாடப்படுவது பாட்டுப் போல
இசைக்கப்படுவது இசையைப் போல
அசைக்கப்படுவது 'அசை' என்போம்!
யாப்பிலக்கணத்திலே
எழுத்துகளால் அசைத்து
இசை கொள்ளுதலே அசையாம்!
உயிர், குறில், நெடில், ஆயுதம்,
மெய், வல்லினம், மெல்லினம்,
இடையினம், உயிர்மெய்,
குற்றியலுகரம், குற்றியலிகரம்,
ஐகாரக்குறுக்கும், அளபெடை
எல்லாமே அசைக்கும் உறுப்புகளே!
(இதுவரை இவைபற்றி எழுதிவிட்டேன்.)
இயலசை, உரியசை என
அசை இரண்டாகுமே!
நேரசை, நிரையசை என
இயலசை இரண்டாகுமே!
நேர்பு அசை, நிரைபு அசை என
உரியசை இரண்டாகுமே!
அசை பற்றி
நன்கு தெளிவு பெற்றால்
நாள், மலர், காசு, பிறப்பு என
நான்கு வகை வாய்ப்பாடு
அறிய வரும் - அதனை
வெண்பாவின் ஈற்றுச் சீராக
பாவிக்க வேண்டி வருமே!
குறில்(எ.கா.: க, ங), நெடில்(எ.கா.: கா, ஙா), ஒற்று(எ.கா.: க், ங்) என்னும்
மூவை எழுத்துகளால் ஆக்குவோம்
பாவின் முதுகெலும்பான "அசை"ஐ!
குற்றெழுத்துத் தனித்தோ (எ.கா.: க)
குற்றெழுத்து ஒற்றடுத்தோ (எ.கா.: கல்)
நெட்டெழுத்துத் தனித்தோ (எ.கா.: கா)
நெட்டெழுத்து ஒற்றடுத்தோ (எ.கா.: கால்)
எழுத்தமைதல் நேரசையாம்!
இருகுறில் இணைந்தோ (எ.கா.: கட)
இருகுறில் இணைந்து ஒற்றடுத்தோ (எ.கா.: கடல்)
குறில் நெடில் இணைந்தோ (எ.கா.: கடா)
குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தோ (எ.கா.: கடாண்)
எழுத்தமைதல் நிரையசையாம்!
தனிக்குறில் ஒழிந்த(தவிர்ந்த)
எஞ்சிய மூன்று நேரசைகளோடு
கு, சு, டு, து, பு, று என்னும்
வல்லின உகரம் இணைதலே
நேர்பு அசையாகும்!
எடுத்துக்காட்டாக
"பந் + து = பந்து" என்றும்
"கா + டு = காடு" என்றும்
"காப் + பு = காப்பு" என்றும்
அமைந்து வருவதைக் காண்பீரே!
எண்ணிப் பாருங்களேன்
தனிக்குறில் நேரசையோடு
வல்லின உகரம் இணைந்தால்
வருவது நிரையசை அன்றோ!
(எ.கா.: ககு, கசு, கடு, கது, கபு, கறு)
நான்கு நிரையசைகளோடு
கு, சு, டு, து, பு, று என்னும்
வல்லின உகரம் இணைதலே
நிரைபு அசையாகும்!
எடுத்துக்காட்டாக
"விற + கு = விறகு" என்றும்
"வடக் + கு = வடக்கு" என்றும்
"தகா + து = தகாது" என்றும்
"நடாத் + து = நடாத்து" என்றும்
அமைந்து வருவதைக் காண்பீரே!
இரண்டு அசைகள் இணைந்து வருதலே
சீர்(சொல்) என்று
யாப்பில் கையாளப்படுகிறதே!
வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீர்
தனியசையில் தான் முடியணுமாம்
அதற்கமைய
வாய்ப்பாடு ஒன்றும் வகுத்தனரே!
எடுத்துக்காட்டாக
வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீரில்
நேர் அசை வரின் "நாள்" என்றும்
நிரை அசை வரின் "மலர்" என்றும்
நேர்பு அசை வரின் "காசு" என்றும்
நிரைபு அசை வரின் "பிறப்பு" என்றும்
யாப்பில் அழைக்கப்படுகிறதே!
பா புனையும் போது
அசை எப்போதும்
சீர், தளை போன்ற
எஞ்சிய பா உறுப்புகளோடு
இணைந்தே வரும் ஆகையால்
'சீர்' பற்றியே - அடுத்து
நாம் தொடர்வோமே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/06/010.html

Saturday, June 8, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-010

பா புனையப் போகுமுன்
அசைக்கு முன் எழுத்தெனப் பார்க்கையில்
எழுத்துகளாலான
சொல்கள் புணருவதைப் பார்க்கையில்
இயல்புப் புணர்ச்சி,
தோன்றல், திரிதல், கெடுதல் என
விகாரப் புணர்ச்சி (பொது)
படித்த பின் பார்ப்பது
செய்யுள் விகாரம் ஆயிற்றே!
செய்யுளுக்கே உரித்தான
செய்யுள் விகாரத்தில்
வலித்தல், மெலித்தல், நீட்டல்,
குறுக்கல், விரித்தல், தொகுத்தல்,
முதற்குறை, இடைக்குறை,
கடைக்குறை என வரும்
ஒன்பது கூறுகள் இருப்பதைப் பாரும்!
ஒரு செய்யுளுக்கு
ஒன்பது விகாரமா என்று
சற்றுத் தளர வேண்டாம்
இவை தான்
பாவலர்க்கு வழிகாட்டும்
யாப்பில் தவறின்றியே
பாபுனைய உதவும் வழிகாட்டிகளே!
பாவலர்க்கு உதவ
யாப்பு இலக்கணமா என்று
கலங்க வேண்டாம் உறவுகளே
மரபுக் கவிதை/ பாப்புப் பா என்றால்
வாசிக்க விளங்காமை
பொருளறிய முடியாமை
போன்ற நிலைகளைப் போக்க
வாசகருக்கும் பக்கத்துணை
நான் கூறும்
செய்யுள் விகாரம் ஒன்பதுமே!
மெல்லினத்தை வல்லினமாக்கும்
வலித்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
கம்பரின் பா வரிகளைப் பாரும்...
"அரக்கரோர் அழிவு செய்து
     கழிவரேல் அதற்கு வேறோர்
குரக்கினத் தரசைக் கொல்ல
     மனுநெறி கூறிற் றுண்டோ?"
இவ்வீர் அடிகளிலே
முதலடியில் வரும் எதுகைக்கு
('அரக்கர்' என்றமைந்த)
அடுத்தடியில் வரும் எதுகையை
சரி செய்யும் நோக்கிலே
மெல்லின மெய்யை
வல்லின மெய்யாக மாற்றியே
(இயல்பில் 'குரங்கு' என்பதை
எதுகைக்காக 'குரக்கு' என மாற்றியே)
வலித்தல் விகாரம் அமையவே
பாபுனையப்பட்டு உள்ளதே!
வலித்தலின் மறுதலையே
மெலித்தலாம் என்க...
வல்லினத்தை மெல்லினமாக்கும்
மெலித்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
கீழ்வரும் அடிகளைப் பாரும்...
"தண்டையின் இனக்கிளி கடிவோள்
பண்டையள் அல்லள் மானோக்கினளே!"
இவ்வீர் அடிகளிலே
இரண்டாம் அடி எதுகை
'பண்டையள்' என்னும் சீருக்காக
முதலடியில் வரும் எதுகை
'தட்டையின்' என்னும் சீரை
'தண்டையின்' என மாற்றியே
('ட்', 'ண்' ஆக
வல்லின மெய்யை
மெல்லின மெய்யாக மாற்றியே)
மெலித்தல் விகாரம் அமையவே
பாபுனையப்பட்டு உள்ளதே!
குறிலை நெடிலாக்கும்
நீட்டல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்" எனும்
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"வெண்பாவின் இறுதிச் சீராக
ஓரசைச் சீர் வரலாமே தவிர
இடையில் வரக் கூடாது"
என்பதற்கிணங்கவே
வள்ளுவனார் தன் குறளில்
'நிழல்' என்ற ஓரசைச் சீரை
'நீழல்' என்ற ஓரசைச் சீராக
மாற்றிவிட்டார் போலும்...
யாப்பிலக்கணத் தவறு நிகழாமலே
ஒரு சீரின் முதல் எழுத்தாகவுள்ள
குறில் எழுத்தை நெடில் எழுத்தாக
மாற்றி அமைத்துப் பா புனைதலை
நீட்டல் விகாரம் எனலாமே!
நெடிலைக் குறிலாக்கும்
குறுக்கல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"ஒருநாள் எழுநாள்போற் செல்லுஞ்சேன் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு" எனும்
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"வெண்பாவிற்கான தளையில்
மா முன் நிரை அமைதல் வேண்டும்"
அதற்கேற்பப் பாரும்
'ஒருநாள்' முன் 'ஏழுநாள்போற்' வரின்
மா முன் நேர் அமையுமென அஞ்சி
'எழுநாள்போற்' எனவாக்கி
நெடில் 'ஏ' ஐக் குறில் 'எ' ஆக்கி
வள்ளுவனார்
யாப்பைச் சரி செய்தார் போலும்...
யாப்பிலக்கணத் தவறு நிகழாமலே
நெடில் எழுத்தைக் குறில் எழுத்தாக்குவதே
குறுக்கல் விகாரம் எனலாமே!
குறும் சொல்லை நீட்டும்
விரித்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு?"
இங்கே
முதலடி மூன்றாம் சீர்
'கொல்' என அமைந்ததால்
வெண்பாவின் ஈற்றுச் சீராக வரவேண்டிய
தனி அசைச் சொல்லை
யாப்பைக் கருத்திற் கொண்டே
'கொல்லோ' என வள்ளவர் மாற்றினாரோ...
'குடும்பத்தைக்' என்ற சீரின் முன்னே
மாச் சீரை வரவழைத்து
மா முன் நிரை அமையுமாறு
'கொல்' ஐ 'கொல்லோ' எனவாக்கி
சொல் ஒன்றை விரித்து எழுதுவதே
விரித்தல் விகாரம் என்போம்!
நெடும் சொல்லைக் குறுக்கும்
தொகுத்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியார் தோள்தோயா தார்."
இங்கே
முதலாம் அடி முதற் சீர்
'நலத்துக்குரியார்' என்றமைய
இருந்திருக்க வேண்டுமே...
அப்படி அமையாமைக்கு
வெண்பாச்சீர் ஆக அமையாது
பூச் சீராக இருந்தமையே...
இலக்கணப் பிழை நிகழாமல்
'நலக்குரியார்' எனக் காய்ச்சீர் அமைய
(நலம்+அத்து+கு+உரியார்)
வள்ளுவனார் முதற் சீரமைத்து
'காய் முன் நேர்' என்றமைய
பா புனைந்திருக்கும் ஒழுங்கே
(நீண்ட சொல்லைச் சுருக்கித் தொகுத்தல்)
தொகுத்தல் விகாரம் என்போம்!
சொல்லின் முதலெழுத்தைக் குறைக்கும்
முதற் குறை விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி" எனும்
செய்யுளடியைப் பாரும்...
இலக்கணத் தவறு நிகழாமலே
முதற் சீராக வர வேண்டிய
"தாமரையிதழ்" இலே
முதலெழுத்தை நீக்கியமையே
சொல்லின் முதல் எழுத்தை
குறைத்து அமைத்துக் கொள்ளும்
முதற்குறை விகாரம் என்போமே!
சொல்லின் இடையெழுத்தைக் குறைக்கும்
இடைக் குறை விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"என்னனைக் கிலங்கு மார்பம்" எனும்
செய்யுளடியைப் பாரும்...
முதற் சீராக வர வேண்டிய
"என்னன்னைக்கு" இலே
இடையிலே 'ன்' ஐ நீக்கியமையே
சொல்லின் இடை எழுத்தை
குறைத்து அமைத்துக் கொள்ளும்
இடைக்குறை விகாரம் என்போமே!
சொல்லின் கடையெழுத்தைக் குறைக்கும்
கடைக் குறை விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"கள்ளுக்கில் காமத்திற் குண்டு" எனும்
செய்யுளடியைப் பாரும்...
முதற் சீராக வர வேண்டிய
"கள்ளுக்கில்லை" இலே
கடைசியிலே 'லை' ஐ நீக்கியமையே
சொல்லின் கடை எழுத்தை
குறைத்து அமைத்துக் கொள்ளும்
கடைக்குறை விகாரம் என்போமே!
யாப்பிலக்கணத்தின் முதற் பகுதியான
எழுத்தைப் பார்த்தோம்...
எழுத்தோடு தொடர்புடைய
இலக்கணத்தைச் சற்றுப் பார்த்தோம்...
சொல்களைப் பார்த்தோம்...
சொல்கள் புணருவதைப் பார்த்தோம்...
இலக்கண(மரபு)ப் பா புனைய
துணைக்கு வந்து நிற்கும்
செய்யுள் விகாரத்துடன்
எழுத்தை முடித்துக் கொண்டு
யாப்பில் அடுத்து வரும்
"அசை" என்ற பகுதியை
அடுத்த பகுதியில் பார்ப்போம்!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/05/009.html

Tuesday, May 21, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-009


சொல்கள் புணரும் வேளை
நின்ற சொல்லுடன் இணைய வரும் வேளை
வந்த சொல்லின் முதலெழுத்து
வல்லினமாக இருந்தால் மிகுவதும்
நின்ற சொல்லின் ஈற்றெழுத்தில்
வல்லினம் மெய்யெழுத்தாக இருந்தால்
வல்லின ஈற்றெழுத்துத் திரிவதும்
பார்த்து முடித்தாச்சு!
வல்லினம் மிகா இடங்களை
வரும் பகுதியில் காண்போமே!
அஃறிணைப் பன்மை விகுதியாம்
'கள்' என்பது நின்ற சொல்லானால்
குடிக்கின்ற மதுவாகப் பொருள் கொள்ளும்
அப்பதான் தெரியும்
"கள் + கள் = கள்கள்"
என்றமையாது என்பதை!
நானொரு முட்டாளுங்க
நாற்பத்திரண்டு அகவை வரை
"சொல் + கள் = சொற்கள்" என்று
பாவித்த முட்டாள் என்றால்
நினைத்துப் பாருங்களேன்!
"சொல் + கள்" என்ற புணர்வில்
வல்லினம் மிகாது என்பதையே
நினைவூட்ட விரும்புகிறேன்!
(சான்று: பக்கம்-54; யாப்பரங்கம்;
புலவர் வெற்றியழகன்; சீதை பதிப்பகம்;
சென்னை-600004; இந்தியா)
பல சொல் இணைந்த கூட்டம்
"சொற்கள்" அல்ல
"சொல்கள்" என்பதே சரியாம்!
"சொற்கள்" என்பதை
"சொல்லாகிய கள்(மது)" என்றே
பொருள் கொள்ள முடிகிறதாம்!
இப்படித்தான் பாருங்கோ
கல்கள், பல்கள், வில்கள்,
ஆள்கள், நாள்கள், கோள்கள்,
பொருள்கள் ஆகியவற்றிலே
வல்லினம் மிகாது என்றறிவோம்!
எடுத்துக்காட்டாகப் பாரும்
சிறிய + காற்றாடி = சிறிய காற்றாடி
நல்ல + பிள்ளை = நல்ல பிள்ளை
தீய + செய்கை = தீய செய்கை
என்பவற்றிலே வரும்
குறிப்புப் பெயரெச்சம் அல்லது
பண்புச் சொல்களை அடுத்து வரும்
வல்லினம் மிகாது என்றறிவோம்!
எடுத்துக்காட்டாகப் பாரும்
காளையின் + பேரில் = காளையின் பேரில்
சிங்கத்தின் + பின் = சிங்கத்தின் பின்
ஆலின் + கீழ் = ஆலின் கீழ்
என்பவற்றிலே காண்பீர்
அஃறிணைப் பெயர்ச் சொல்களை
அடுத்து வரும் பின்னொட்டுகளில்
பேரில், பின், கீழ் என்பன வரின்
வல்லினம் மிகாது என்றறிவோம்!
எடுத்துக்காட்டுக்களாக
ஆசிரியர் + சார்பாக = ஆசிரியர் சார்பாக
மாணவர் + தொடர்பாக = மாணவர் தொடர்பாக
ஆகியவற்றிலே பாரும்
நின்ற பெயர்ச் சொல்லுடன்
"சார்பாக, தொடர்பாக" என்ற ஒட்டுகள்
வந்ததாலும் வல்லினம் மிகாது...
நொந்து + கொள் = நொந்து கொள்
நடந்து + கொண்டிரு = நடந்து கொண்டிரு
செய்து + பார் = செய்து பார்
கொய்து + காட்டு = கொய்து காட்டு
கொண்டு + போ = கொண்டு போ
ஒழிந்து + தொலை = ஒழிந்து தொலை
ஆகியவற்றிலே பாரும்
'செய்து' என்னும் வினையெச்சச் சொல்லை
அடுத்து வரும் துணை வினைகளான
கொள், கொண்டிரு, பார், காட்டு, போ, தொலை என்பன
வந்ததாலும் வல்லினம் மிகாது...
சென்ற + போது = சென்றபோது
செய்த + படி = செய்தபடி
சொன்ன + படியால் = சொன்னபடியால்
ஆகியவற்றிலே பாரும்
பெயரெச்சத் தொடரின் ஒட்டுகளான
போது, படி, படியால் என்பன
வந்ததாலும் வல்லினம் மிகாது...
ஊர் + தோறும் = ஊர் தோறும்
என்ற வகையில் பாரும்
பெயர்ச் சொல்லை அடுத்து
'தோறும்' என்னும் ஒட்டு
வந்ததாலும் வல்லினம் மிகாது...
என்றறிந்தால் தவறு நிகழாதே!
எடுத்துக்காட்டின்றியும்
வல்லினம் மிகா இடங்களை
எடுத்துச் சொல்கிறேன் பாரும்...
எழுவாயாக நிற்கும்
பெயர்ச் சொல்களுடன் பாரும்
கூட, பற்றி, பொருட்டு, பால், குறித்து, தவிர ஆகிய
ஒட்டுகள் வரினும் வல்லினம் மிகாதாம்...
விடவும், காட்டிலும் ஆகிய
பின்னொட்டுகளை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
ஆ, ஆவது, ஏ, ஓ, என்று, போன்று ஆகிய
இடைச் சொல்களை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
அடா, அடி ஆகிய சொல்களை
அடுத்து வரும் வல்லினமும் மிகாதாம்...
உள்ள, உரிய, தகுந்த ஆகிய
பின்னொட்டுகளை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
அகர உயிர் இறுதியில் உள்ள
அத்தகைய, இத்தகைய, எத்தகைய;
அன்றைய, இன்றைய, என்றைய;
அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட;
அப்போதைய, இப்போதைய, எப்போதைய;
மேற்கத்திய, கிழக்கத்திய, வடக்கத்திய, தெற்கத்திய;
நேற்றைய, இன்றைய, நாளைய என்னும்
பெயரெச்சங்களை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
வந்து, சென்று, கண்டு, அழுது, வென்று
என்னும் வினையெச்சங்களில்
வரும் வல்லினம் மிகாதாம்...
செயின், செய்தால் என்னும்
வாய்ப்பாட்டு வினையெச்சங்களில்
வரும் வல்லினம் மிகாதாம்...
அம்மை, அப்பர், மாமன், மாமி,
அண்ணன், அண்ணி, தந்தை, தம்பி,
தங்கை, அக்காள் என்னும்
முறைப் பெயர்களை அடுத்து
வரும் வல்லினம் மிகாதாம்...
அம்மா, அப்பா, மாமா, மாமி,
அண்ணா, அண்ணி, தம்பி, தங்காய்,
அக்கா ஆகிய முறை விழிப் பெயர்களை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
நட, படி, பாடு, ஓடு ஆகிய
முன்னிலை ஏவல் ஒருமை வினைகளை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
அடேயப்பா, அய்யோ, அம்ம ஆகிய
வியப்புச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
எடுத்துக்காட்டாக
அவள் + பெரியவள் = அவள் பெரியவள்
ஆடு + சிறியது = ஆடு சிறியது
கூழ் + போதாது = கூழ் போதாது
என்றமையும் முதல் வேற்றுமையாகிய
எழுவாய்த் தொடரில் சில இடங்களில்
வல்லினம் மிகாதாம்...
ஒடு, ஓடு என்னும்
மூன்றாம் வேற்றுமை உருபுகள்
விரிந்து வரும் பொழுது
வல்லினம் மிகாதாம்...
ஐந்தாம் வேற்றுமையாகிய
இருந்து, நின்று என்னும் சொல்லுருபுகளை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
ஆறாம் வேற்றுமை விரியில்
எழுவாய் உயர்திணையாயின்
வல்லினம் மிகாதாம்...
'உடைய' என்னும்
ஆறாம் வேற்றுமை உருபை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
"நா + காக்க = நா காக்க
(நாவைக் காக்க)" என்றவாறு
இரண்டாம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகாதாம்...
"கை + தட்டினான் = கை தட்டினான்
(கையால் தட்டினான்) என்றவாறு
மூன்றாம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகாதாம்...
எழுவாய் உயர்திணையாக இருந்தாலும்
அஃறிணைப் பெயருடன்
வினைச்சொல் வந்தாலும்
நான்காம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகாதாம்...
ஐந்தாம் வேற்றுமைத் தொகையில்
இருந்து, நின்று என்னும் சொல்லுருபுகளை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
ஆறாம் வேற்றுமைத் தொகையில்
எழுவாய் உயர்திணையாயின்
வல்லினம் மிகாதாம்...
ஏழாம் வேற்றுமைத் தொகையிலும்
"அரசர் + கண் = அரசர் கண்" என்றவாறு
வல்லினம் மிகாதாம்...
"ஆடு + கோழி = ஆடு + கோழி
(ஆடும் கோழியும்) என்றவாறு
உம் என்னும் சொல் மறைந்து வரும்
உம்மைத் தொகையில் வல்லினம் மிகாதாம்...
"ஊறு + காய் = ஊறுகாய்" என்றவாறு
(ஊறிய/ ஊறுகின்ற/ ஊறும் காய்)
மூன்று காலங்களையும் உணர்த்தும்
வினைத் தொகையில் வல்லினம் மிகாதாம்...
"கார் + காலம் = கார் காலம்" என்றவாறு
பண்புத் தொகையில் வல்லினம் மிகாதாம்...
இப்படியே பார்த்தால்
இவை தான்
வல்லினம் மிகா இடங்கள்!
அடுத்து செய்யுளுக்கே உரிய
செய்யுள் விகாரம் பற்றியே
தொடரும் வரை காத்திரும்!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/04/008.html

Sunday, April 28, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-008


வேற்றுமையும்
சொற்புணர்ச்சியும்
மிகும் இடமும்
சந்திப்தைப் பாரும்!
எடுத்துக்காட்டாக
உறிக்கண் + தயிர் = உறிக்கட்டயிர்
என்றவாறே
நின்ற சொல் 'ண்'; 'ட்' ஆகவும்
வந்த சொல் 'த'; 'ட' ஆகவும்
திரிந்தே
ஏழாம் வேற்றுமை விரியில்
சில இடங்களில் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பனை + தோள் = பனைத்தோள்
(பனையைப் போன்ற தோள்)
என்றவாறு பார்த்தால்
உவமைத் தொகையிலும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாகப் பாரும்
நாய் + கால் = நாய்க்கால்(நாயினது கால்)
காவிரி + கரை = காவிரிக்கரை(காவிரியினது கரை)
என்றமைவதனால்
ஆறாம் வேற்றுமைத் தொகையில்
நின்ற சொல் அஃறிணையாயின்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பழம் + கடை = பழக்கடை
(பழத்தை உடைய கடை)
(நின்ற ஈற்று மகரம் கெட
'பழ' என்பதில் அகரம் தோன்ற
வந்த வல்லினம் மிகுந்ததே!)
கஞ்சி + தொட்டி = கஞ்சித்தொட்டி
(கஞ்சியை ஊற்றி வைத்திருக்கும் தொட்டி)
ஆகிய இரண்டிலுமே
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
மரம் + பிடி = மரப் பிடி(மரத்தாலான பிடி)
காகிதம் + புத்தகம் = காகிதப்புத்தகம்(காகிதத்தாலான புத்தகம்)
இரும்பு + பெட்டி = இரும்புப்பெட்டி
(இரும்பாற் செய்த பெட்டி)
ஆகிய மூன்றிலுமே
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
ஆடு + தழை = ஆட்டுத்தழை
(ஆட்டுக்குத் தேவையான தழை)
மாடு + தண்ணீர் = மாட்டுத்தண்ணீர்
(மாட்டுக்குத் தேவையான தண்ணீர்)
ஆகிய இரண்டிலும் பாரும்
(நெடிற்றொடர் குற்றியலுகரச் சொல்லோடு
நான்காம் வேற்றுமை 'கு' உருபு
புணரும் வேளையே 'உ'கரம் இரட்டித்தது)
நான்காம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
தொழில் + கூட்டு = தொழிற்கூட்டு
கால் + கட்டு = காற்கட்டு
ஆகிய இரண்டிலுமே
(லகரம் றகரமாகத் திரிந்ததே)
தொழிலில் கூட்டு, காலில் கட்டு என
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வீட்டில் + கற்கண்டு = வீட்டிற்கற்கண்டு
தலைநகர் + தமிழ்ச்சங்கம் = தலைநகர்த் தமிழ்ச்சங்கம்
ஆகிய இரண்டிலும்
வீட்டின் கண், தலைநகரின் கண் என
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
முருங்கை + காய் = முருங்கைக்காய்
என்பதில் பாரும்
சிறப்புப் பெயரை அடுத்து
பொதுப் பெயர் வந்து நிற்க
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
தீ + பிடித்தது = தீப்பிடித்தது
கா + குயில் = காக்குயில்(சோலைக்குயில்)
நா + குளறியது = நாக்குளறியது
பா + போட்டி = பாப்போட்டி
என்றாறு பார்த்தால்
ஓரெழுத்தொரு மொழியாகிய
நெடிலெழுத்தை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
தீரா + துன்பம் = தீராத்துன்பம்(தீராத துன்பம்)
அறியா + காளை = அறியாக்காளை(அறியாத காளை)
என்று வந்து சேரும்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தினை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
விள + குறிது = விளக் குறிது(அ)
பலா + காய் = பலாக் காய்(ஆ)
கிளி + சிறை = கிளிச் சிறை(இ)
என்றவாறு அமைய
உயிரெழுத்துக்களை அடுத்து வரும்
வல்லினம் மிகும் ஆயினும்
ஈற்றெழுத்தாக எகரம் வராமையால்
அளபெடையாக(சேஎ) ஈற்றில் வர
'எ' உடனும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
தர + சொன்னான் = தரச் சொன்னான்(அ)
ஓடி + போனான் = ஓடிப் போனான்(இ)
என்று அகர, இகர ஈற்று
வினையெச்சத்தினை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
இருப்பதாய் + சொன்னான் = இருப்பதாய்ச் சொன்னான்(ஆய்)
போய் + கொண்டுவந்தான் =போய்க் கொண்டுவந்தான்(போய்)
கொடுப்பதாக + கூறினான் = கொடுப்பதாகக் கூறினான்(ஆக)
என்பதில் பாரும்
ஆய், போய், ஆக என்னும்
வினையெச்சச் சொல்களை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
அன்றி + சொல்லமாட்டேன் = அன்றிச் சொல்லமாட்டேன்
இன்றி + கொடுக்கமாட்டேன் = இன்றிக் கொடுக்கமாட்டேன்
என்றவாறு
அன்றி, இன்றி என்னும்
இகர ஈற்று வினைக்குறிப்புச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
குரங்கு + கூட்டம் = குரங்குக் கூட்டம்
மருந்து + கடை = மருந்துக் கடை
என்றவாறு
மென்றொடர்க் குற்றியலுகரச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பேச்சு + பேசினான் = பேச்சுப் பேசினான்
விற்று + பெருக்கினான் = விற்றுப் பெருக்கினான்
என்றவாறு
வன்றொடர்க் குற்றியலுகரச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பொது + கூட்டம் = பொதுக் கூட்டம்
முழு + பக்கம் = முழுப் பக்கம்
என்றவாறு
முற்றியலுகரச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வேலி + கம்பி = வேலிக்கம்பி(வேலிக்குக் கம்பி)
நாக்கு + சுவை = நாக்குச்சுவை(நாக்குக்குச் சுவை)
என்றவாறு
நான்காம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
ஆட்டு + கால் =ஆட்டுக்கால்(ஆட்டினது + கால்)
வண்டி + சக்கரம் = வண்டிச் சக்கரம்(வண்டியினது சக்கரம்)
என்றவாறு
ஆறாம் வேற்றுமைத் தொகையில்
நிலைமொழி அஃறிணையாயின்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வீடு + கதவு = வீட்டிற் கதவு(வீட்டின் கண் கதவு)
நாடு + கலகம் = நாட்டிற் கலகம்(நாட்டின் கண் கலகம்)
என்றவாறு
ஏழாம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வினா + தாள் = வினாத் தாள்
பலா + சுளை = பலாச் சுளை
என்றவாறு
தனிக்குற்றெழுத்தை அடுத்துள்ள
ஆகாரத்தை
அடுத்து வரும் வல்லினம் மிகுமே!
தனிச் சொல்லில் கூட
'ய்', 'ர்', 'ழ்' ஆகிய
மும்மெய்களைத் தொடர்ந்து வரும்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
பொய்த்தது, பார்க்கிறது, வாழ்க்கை
என்பவற்றைக் கூறலாமே!
நின்ற சொல்லின் ஈற்றில் 'ன்' இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினமாக இருந்தால் பாரும்
"பொன் + செல்வி = பொற்செல்வி" என
புணரும் வேளை 'ன்' ஆனது 'ற்' ஆக மாறுமே!
நின்ற சொல்லின் ஈற்றில் 'ல்' இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினமாக இருந்தால் பாரும்
"பல் + பொடி = பற்பொடி" என
புணரும் வேளை 'ல்' ஆனது 'ற்' ஆக மாறுமே!
நின்ற சொல்லின் ஈற்றில்
'ன்'-னும் 'ல்'-லும் இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினம் 'த'-வாக இருந்தால்
"பொன் + தகடு = பொற்றகடு
கல் + தட்டை = கற்றட்டை" என
'ன்'-னும் 'ல்'-லும் 'ற்' ஆக மாறியும்
வந்த தகரம்(த) றகரமாக(ற)த் திரியுமே!
நின்ற சொல்லின் ஈற்றில் 'ண்' இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினமாகவும் இருந்தால்
"மண் + பானை = மட்பானை" என
ணகரம்(ண) டகரமாக(ட)த் திரியுமே!
நின்ற சொல்லின் ஈற்றில் 'ள்' இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினமாகவும் இருந்தால்
"உள் + சிறந்தது = உட்சிறந்தது" என
ளகரம்(ள) டகரமாக(ட)த் திரியுமே!
நின்ற சொல்லின் ஈற்றில்
'ண்'-ணும் 'ள்'-ளும் இருந்து
வரும் சொல்லின் முதலெழுத்து
வல்லினம் 'த'-வாக இருந்தால்
"கண் + திறந்தது = கட்டிறந்தது
வாள் + தடித்தது = வாட்டடித்தது" என
'ண்'-ணும் 'ள்'-ளும் 'ட்' ஆக மாறியும்
வந்த தகரம்(த) டகரமாக(ட)த் திரியுமே!
இரு குறில் இணைந்து வரும்
அஃறிணைப் பன்மைச் சொல்லிலும்
தனி எழுத்திலான நெடிற் சொல்லிலும்
பன்மை விகுதியாகிய 'கள்' சேரும் வேளை
வல்லினம் மிகுவதைப் பாரும்!
எடுத்துக்காட்டாக
புளு + கள் = புளுக்கள்
கொசு + கள் = கொசுக்கள்
புறா + கள் = புறாக்கள்
சுறா + கள் = சுறாக்கள்
ஆ + கள் = ஆக்கள்(பசுக்கள்)
நா + கள் = நாக்கள்(நாக்குஏகள்)
சே + கள் = சேக்கள்(எருதுகள்)
ஏ + கள் = ஏக்கள்(அம்புகள்)
என்பவற்றைக் கூறினாலும் கூட
ஒரு பிழை இருக்கக் கண்டியளே!
"இரு குறில் இணைந்து வரும்
அஃறிணைப் பன்மைச் சொல்கள்"
என்பதற்குப் பதிலாக
"குறிலில் தொடங்கும் ஈரெழுத்து
அஃறிணைப் பன்மைச் சொல்கள்" என்றால்
எடுத்துக்காட்டு எடுப்பாக இருக்குமே!
வல்லினம் மிகும்
இடங்களைப் பார்த்தாச்சு - ஆயினும்
வல்லினம் மிகா இடங்களை
வரும் முறை பார்க்கலாம் தானே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க

Saturday, March 30, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-007


நின்ற சொல்லொடு வந்த சொல்
புணரும் வேளை பாரும்
தோன்றல் விகாரப் புணர்ச்சியில்
வரும் சொல்லின் முதல் எழுத்து
வல்லினமாயின் - அவ்வல்லினம்
இரட்டிக்கப் பார்க்குதே!
இப்படி வல்லினம்
இரட்டித்தலை 'மிகும் இடம்' என்றும்
இயல்பாகப் புணருமாயின்
'மிகா இடம்' என்றும்
பார்க்கப் போகுமுன்
நின்ற சொல்லின் பொருள்
கணக்கிலெடுத்தே
மிகும் இடம், மிகா இடம்
வரையறுக்க வேண்டுமே!
எடுத்துக்காட்டாக
இட்டிலி, சாம்பார் ஆகியன
புணரும் நிலையை வைத்தே
"இட்டிலி சாம்பார்" என்பதில்
"இட்டிலியும் சாம்பாரும்" என்று பொருள்...
"இட்டிலிச் சாம்பார்" என்பதில்
(வல்லினம் மிகுத்து இருக்கிறது)
"இட்டிலியாகிய சாம்பார்" என்றும்
அப்படியாயின்
"இட்டிலியே சாம்பார்" என்றும்
பொருள் கொள்ளலாம் எனில்
மிகும் இடம், மிகா இடம்
பொல்லாத இலக்கணமே!
நின்ற சொல்லின்
சொல்கள் புணர வரும் தொடரின்
பொருளை அறிந்தே
மிகும் இடம், மிகா இடம்
கையாள வேண்டுமென்பதை
நினைவிற் கொள்வீரே!
தனிக்குற்றொடு
நின்ற மெய்யீற்றை அடுத்து
உயிர் வந்து இருந்தால்
நின்ற மெய்யீறு மிகுமாமே!
எடுத்துக்காட்டாக
கல்+எறிந்தான்=கல்லெறிந்தான்
என்பதில் பாரும்
மிகுத்த 'ல்' ஒடு எகரம் ஏறி
லெகரம் ஆனதை அறவீரே!
ங, ஞ, ந, ம ஆகிய
மெல்லினம் நான்கும்
சொல்கள் புணரும் வேளை மிகுமே!
வல்லினம் மட்டுமல்ல
மெல்லினமும் மிகுமே...
எடுத்துக்காட்டாக
இ+ஙனம்=இங்ஙனம்
அ+ஙனம்=அங்ஙனம்
எ+ஙனம்=எங்ஙனம்
மெய்+ஞானம்=மெய்ஞ்ஞானம்
மு+நீர்=முந்நீர்
கை+மாறு=கைம்மாறு
ஆகியவற்றில் மெல்லினம் மிகுத்ததே!
க, ச, த, ப ஆகிய
வல்லினம் நான்கும்
சொல்கள் புணரும் வேளை மிகுமே!
மெல்லினத்தில் ணகர, னகர
வல்லினத்தில் டகர, றகர
எழுத்துக்கள்
சொல்லுக்கு முதலில் வராமையால்
மிகும் இடங்களில்
தலை காட்டாமல் போயிற்றே!
மெல்லினமும் மிகும் என்றாலும்
வல்லினம் அதிகம்
பயன்பாட்டில் இருப்பதால் பாரும்
பல ஒழுங்கு முறையின் கீழே
வல்லினம் மிகும் இடங்களைப் பாரும்!
ணகர, னகர ஈற்றின் பின்னே
வல்லினம் வந்தால் பாரும்
மண்+குடம்=மட்குடம் என்றும்
பொன்+குடம்=பொற்குடம் என்றும்
'ண்' என்பது 'ட்' ஆயும்
'ன்' என்பது 'ற்' ஆயும்
புணர்ந்து வரக் காண்பீரே!
நின்ற சொல்லின் ஈறு
உயிர் மெய்யாக இருந்து
வரும் சொல் முதலெழுத்து
வல்லினமாக இருந்தால்
நின்ற சொல்லீற்று மெய் திரியுமாமே!
(வேற்றெழுத்தாக மாறும்)
நின்ற சொல்லின் ஈற்றில்
'ன்', 'ல்', 'ண்', 'ள்' என்பன வந்தாலும்
ஒவ்வோர் எழுத்துக்கும் - அதன்
தன்மைக்கு ஏற்ப திரிபடையும்
எழுத்து வெவ்வேறாமே!
அ+காளை=அக் காளை
அந்த+காளை=அந்தக் காளை
இ+செய்தி=இச் செய்தி
இந்த+செய்தி=இந்தச் செய்தி
என்றவாறு பார்த்தால்
சுட்டுச் சொல்லை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
எ+பக்கம்=எப் பக்கம்?
எந்த+சேனை=எந்தச் சேனை?
எப்படி+பேசினான்=எப்படிப் பேசினான்?
என்றவாறு பார்த்தால்
வினாச் சொல்லை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
பெயர்ச் சொல்லினது பொருளை
வேறுபடுத்திக் காட்டுவதே
வேற்றுமையின் வேலையாகும்!
முதல் வேற்றுமையாக
எழுவாய்/பெயர் வேற்றுமை
எடுத்துக்காட்டாக : அழகன்,
இரண்டாம் வேற்றுமையாக
'ஐ' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகனை,
மூன்றாம் வேற்றுமையாக
'ஆல்' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகனால்,
நான்காம் வேற்றுமையாக
'கு' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகற்கு,
ஐந்தாம் வேற்றுமையாக
'இன்' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகனின்,
ஆறாம் வேற்றுமையாக
'அது' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகனது,
ஏழாம் வேற்றுமையாக
'கண்' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகன்கண்,
எட்டாம் வேற்றுமையாக
விழி வேற்றுமை
எடுத்துக்காட்டாக : அழகா!,
என்றவாறு தான்
முதல் எட்டு வேற்றுமைகளும்
தமிழில் அமைகிறதே!
எப்படித் தான் இருப்பினும்
மூன்றாம் வேற்றுமைக்கு
ஆன், ஆல், ஓடு, ஒடு ஆகிய
நான்கு உருபுகள் இருப்பதை
இலக்கியங்கள் சாற்றுமே!
ஆகப் பிந்திய தகவலாக
உடன், கொண்டு ஆகிய உருபுகளும்
மூன்றாம் வேற்றுமையாமே!
வரும் சொல் முதல் எழுத்து
உயிராய் இருப்பின்
ஆன், ஓடு உருபுகளும்
உயிர்மெய்யாய் இருப்பின்
ஆல், ஒடு உருபுகளும்
வந்தமையக் காண்பீரே!
நான்காம் வேற்றுமையிலும்
கு, ஆ, பொருட்டு, நிமித்தம் என
நான்கு உருபுகள் உண்டாமே!
ஐந்தாம் வேற்றுமையிலும் பாரும்
இன், இல், இருந்து, நின்று,
காட்டிலும், பார்க்கிலும் என
உருபுகள் ஆறாமே!
ஆறாம் வேற்றுமையில்
அது, ஆது, ஆ, உடைய என
நான்கு உருபுகளும் உண்டாமே!
ஏழாம் வேற்றுமையில்
கண், கால், உள், இல், தலை,
உழி, புறம், அகம், பால், இடை என
உருபுகள் பத்தாமே!
எட்டாம் வேற்றுமையிலும்
அப்ப!, அம்ம! என விளிப்பது
அண்மை விளி என்றும்
அப்பா!, அம்மா! என விளிப்பது
சேய்மை விளி என்றும்
சொல்லிக் கொள்கிறார்களே!
சரி! சரி!
வேற்றுமை தெரிந்தால்
வேற்றுமையிலும்
சொற்புணர்ச்சியைப் பார்ப்போமே!
எடுத்துக்காட்டாக
ஆட்டை+கட்டினான்=ஆட்டைக் கட்டினான்
நாயை+துரத்தினான்=நாயைத் துரத்தினான்
இவ்வாறே
இரண்டாம் வேற்றுமை விரியில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
நம்பியால்+பெற்றான்=நம்பியாற் பெற்றான்
வாளால்+குறைத்தான்=வாளாற் குறைத்தான்
என்றவாறே
'ல்' என்பது 'ற்' ஆகத் திரிந்தும்
மூன்றாம் வேற்றுமை விரியில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வேலிக்கு+கம்பி=வேலிக்குக் கம்பி
பாம்புக்கு+பகை=பாம்புக்குப் பகை
என்றவாறே
நான்காம் வேற்றுமை விரியில்
வல்லினம் மிகுமே!
எஞ்சியிருக்கும்
மிகும் இடம், மிகா இடம்
வரும் முறை தொடரலாம் என
எண்ணியிருக்கிறேன்!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/03/006.html

Wednesday, March 20, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் - 006



நின்ற சொல்லொடு
வந்த சொல் இணைவதே
சொற்புணற்சியாம்!
சொற்புணற்சியின் போது
சொற்களில் மாற்றம் நிகழாமல்
இணையும் செயலே
இயல்புப் புணற்சியாம்!
எடுத்துக்காட்டாக
"தமிழ் + வளம்=தமிழ் வளம்" என்று
புணருவது இயல்பே!
நின்ற சொல்லுடன்
வரும் சொல் சேரும் பொழுது
சொற்களில் மாற்றம் நிகழுமாயின்
விகாரப் புணற்சியாம்!
தோன்றல், திரிதல், கெடுதல் என
மூவகை விகாரமுண்டாம்!
"ஏழை + குடும்பம்= ஏழைக்குடும்பம்" என்பதில்
'க்' எனும் மெய் தோன்றியமையே
தோன்றல் விகாரப் புணற்சியாம்!
"வில் + பொறி=விற்பொறி" என்பதில்
'ல்' ஆனது 'ற்' ஆகத் திரிந்தமையே
திரிதல் விகாரப் புணற்சியாம்!
"மரம் + வேர்=மரவேர்" என்பதில்
'ம்' எனும் மெய் கெட்டுப் போவதே
கெடுதல் விகாரப் புணற்சியாம்!
இயல்புப் புணற்சியும்
விகாரப் புணற்சியும்
உரைநடைக்கும்
செய்யுளுக்கும் உதவும் வேளை
செய்யுளுக்கு உரித்தானதாய்
செய்யுள் விகாரமும் உண்டே!
இயல்பிலும் விகரத்திலும்
சொற்கள் புணரும் போது
நெறிமுறைகள் சிலவற்றை
பின்பற்றவும் வேண்டுமே!
உயிர்க்கு முன்னும்
உயிர்மெய்க்கு முன்னும்
ஒரு, ஓர், அது, அஃது என்பன
வேறுபட்டே புணருமாம்!
வந்த சொல்லின் முதலெழுத்து
உயிராக இருப்பின்
நின்ற சொல்
ஓர், அஃது என்றே புணருமாம்!
வந்த சொல்லின் முதலெழுத்து
உயிர்மெய்யாக இருப்பின்
நின்ற சொல்
ஒரு, அது என்றே புணருமாம்!
வந்த சொல் ஆயிரமாயிருக்க
நின்ற சொற்களான
ஒரு, இரு என்பன
ஓர், ஈர் என்று மாறி
ஓராயிரம், ஈராயிரம் என்றே புணருமாம்!
'யா' வினது ஒலி
அகர ஒலி போல ஒலித்தலால்
விதிவிலக்காக
'யா' வின் முன் வரும்
ஒரு, அது என்பன
ஓர், அஃது என்றே புணருமாம்!
உயிருக்கு முன் 'ஓடு' என்றும்
உயிர்மெய்க்கு முன்னே 'ஒடு' என்றும்
உயிருக்கு முன் 'ஆன்' என்றும்
உயிர்மெய்க்கு முன்னே 'ஆல்' என்றும்
உயிருக்கு முன் 'தோறும்' என்றும்
உயிர்மெய்க்கு முன்னே 'தொறும்' என்றும்
சொற்கள் புணரும் வகையில்
தொடர் அமையுங்களேன்!
எடுத்துக்காட்டாக
உயிருக்கு முன்னே
பெருமை(பெரிய) + ஆசிரியர்=பேராசிரியர்;
சிறுமை(சிறிய) + அன்னை=சிற்றன்னை;
என்றும்
உயிர்மெய்க்கு முன்னே
பெருமை(பெரிய) + கதை=பெருங்கதை;
சிறுமை(சிறிய) + கதை=சிறுகதை;
என்றவாறும்
புணருவதைப் பாருங்களேன்!
இன்னும் சொல்லப் போனால்
ஓர் அறிவிப்பு (ஓர்)
ஒரு நற்செய்தி (ஒரு)
ஈர் ஆயிரம் / ஈராயிரம் (ஈர்)
இரு நன்மைகள் (இரு)
அஃது ஒரு நாய் (அஃது)
அது கருங்குரங்கு (அது)
கற்றாரோடு ஏனையவர் (ஓடு)
விலங்கொடு மக்கள் (ஒடு)
நீரான் அமையும் (ஆன்)
வாய்மையால் வெல்லலாம் (ஆல்)
வெளிப்படுந்தோறும் இனிது (தோறும்)
களித்தொறும் கள்ளுண்டல் (தொறும்)
என்றெல்லோ புணருமாம்!
'உடன்படு மெய்' என்ற
எழுத்து ஒன்று இருப்பதை
நினைவிற் கொள்வீர்களா?
நின்ற சொல்லின் ஈறு உயிராயும்
அதாகப்பட்டது
உயிரெழுத்து ஒலியாயும்
வரும் சொல்லின் முன்னும்
வருவது உயிராயும் இருப்பின்
உயிரும் உயிரும்
ஒன்று சேராது என்பதால்
புணர்ச்சிக்கு இடமில்லையாம்!
சொற்கள் புணர வேண்டுமாகையால்
ஈருயிர்களுக்கிடையே
மெய்யொன்று தோன்றி
ஓருயிரைத் தான் பெற்ற உடம்பே
உடம்படு மெய்யாம்!
உடம்பை அடுத்து வரும்
மெய் என்பதை விட
சொற்கள் புணர உடன்படும்
மெய் என்றே கருதி
ஈருயிர்களுக்கிடையே
தோன்றும் மெய்யை
உடன்படு மெய் என்போமே!
நின்ற சொல்லின் ஈற்றில்
இ, ஈ, ஐ ஆகியவற்றில்
ஏதுமொன்று வரின்
இடையில் யகர(ய) மெய்யும்
'ஏ' இன்றி ஏனைய எட்டுக்கும்
இடையில் வகர(வ) மெய்யும்
ஏகாரம்(ஏ) தோன்றின்
யகர(ய), வகர(வ) மெய்யிரண்டும்
உடன்படு மெய்யாகத் தோன்றுமே!
ஏகாரத்தில்(ஏ) முடியும் நின்ற சொல்
பெயர்ச்சொல்லாயின் வகரமும்(வ்)
இடைச்சொல் - அதாவது
அசைநிலையாயின் யகரமும்(ய்)
பண்புச் சொல்லுக்குத் தான் இரண்டும்
உடன்படு மெய்யாகுமே!
யகர(ய்) உடன்படு மெய்யிற்கு
கிளி(இ) + அழகு = கிளியழகு
தீ(ஈ) + அழல் = தீயழல்
மை(ஐ) + அழகு = மையழகு
எடுத்துக்காட்டாகுமே!
வகர(வ்) உடன்படு மெய்யிற்கு
பல(அ) + இடங்கள் = பலவிடங்கள்
பலா(ஆ) + அடியில் = பலாவடியில்
நடு(உ) + இடம் = நடுவிடம்
பூ(ஊ) + அழகு = பூவழகு
எ(எ) + அழகு = எவ்வழகு
(இங்கு 'எ' - வினாச்சுட்டு)
நொ(ஒ) + அகலும் = நொவ்வகலும்
இங்கு 'நொ' - துன்பம்)
கோ(ஓ) + இல் = கோவில்
கௌ(ஔ) + அழுக்கு = கௌவழுக்கு
(இங்கு கௌவுதல் - திருடுதல்; அழுக்கு - குற்றம்)
எடுத்துக்காட்டாகுமே!
நின்ற சொல் ஈறு ஏகாரத்திற்கு
அவனே(ஏ) + அழகன் = அவனேயழகன்
(இங்கு அசைநிலை - இடைநிலை ஏகாரம்)
ஏ + எலாம் = ஏவெலாம்
(இங்கு ஏ-அம்பு பெயர்ச்சொல்)
சே(ஏ) + அடி = சேயடி
(இங்கு சே-செம்மை பண்புச்சொல்)
சே(ஏ) + அடி = சேவடி
(இங்கு சே-செம்மை பண்புச்சொல்)
எடுத்துக்காட்டாகுமே!
நன்னூலர் காலத்தில்
ஏகாரத்திற்கு எப்படியோ
தொல்காப்பியர் காலத்தில்
ஆகாரத்திற்கும் அப்படியாமே!
நின்ற சொல் ஈறு ஆகாரம்(ஆ)
பெயர்ச்சொல் ஈறாயின் வகரமும்
அகரம் நீண்டு நின்ற
சுட்டுச்சொல் ஈறாயின் யகரமும்
உரிச்சொல் ஈறாயின் யகரமும்
உடன்படு மெய்யாகுமாமே!
இதோ
ஆ + ஈன = ஆவீன
(இங்கு ஆ-பசு பெயர்ச்சொல்)
ஆ + இடை = ஆயிடை
(இங்கு அகரச்சுட்டு நீண்டு நின்றது)
மா + இருஞாலம் = மாயிருஞாலம் (பேருலகம்)
(இங்கு மா-உரிச்சொல்)
என்பன எடுத்துக்காட்டாம்!
நின்ற மெய்யீற்றுக்கு
அடுத்து உயிர் வந்தால்
வந்த உயிர்
நின்ற மெய்யின் மேல் ஏறுமே!
எடுத்துக்காட்டாக
ஆண் + அழகு = ஆணழகு ஆகுமே!
"உயிர்வரின் உக்குறள்
மெய்விட்டோடும்" என்பது
நின்ற சொல்
குற்றியலுகர ஈறாயின்
வந்த சொல்லின் முதல் எழுத்தான
உயிர் அதன் மீது ஏறுதலேயாம்!
"கொக்கு + அழகு = கொக்கழகு" என்பதில்
'கு' இலிருந்த 'உ'
'க்' ஐ விட்டோட
'க்' கோடு அகரம் இணைந்தமை
எடுத்துக்காட்டு ஆகுமே!
எண்ணிப்பாரும்
காசு + அகலும் = காசகலும்
நாடு + என்னுயிர் = நாடென்னுயிர்
காது + இரண்டு = காதிரண்டு
மார்பு + அகன்றது = மார்பகன்றது
ஆறு + அழகு = ஆறழகு
எல்லாம் எடுத்துக்காட்டே!
சொற்கள் புணரும் வேளை
மிகும், மிகா இடங்கள்
வரும் முறை காண்போமே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க

Sunday, March 3, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-005


யாப்பில் அலகிடுதல் என்பது
சீரை அசைகளாக
உடைத்துப் பார்ப்பதேயாகும்!
அலகிடாமலும்
பா புனைய இயலாது...
அலகிட்டாலும் கூட
குற்றியலுகரம், குற்றியலிகரம்,
மெய்யெழுத்து என்பன
செய்யுளில் அலகு பெறாது என்போம்!
தனிக்குற்றெழுத்தை
கொண்டிராத சொல்லில்
மாற்றெழுத்தின் பின்னே
வல்லின மெய்யின் மேல்
ஏறிவரும் உகரம் குற்றியலுகரமாம்!
க, ச, ட, த, ப, ற எனும்
வல்லினம் மேல் உகரம் ஏற
கு, சு, டு, து, பு, று என வருவது
குற்றியலுகர எழுத்தாம்!
ஆறு, காசு, நாடு என்பதில்
நெட்டெழுத்தின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
நெடிற்றொடர்க் குற்றியலுகரமாம்!
அஃது, எஃகு, கஃசு என்பதில்
ஆயுத எழுத்தின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
ஆயுதத் தொடர்க் குற்றியலுகரமாம்!
மதகு, பழுது, வயிறு என்பதில்
த, ழு, யி என்பன
த்+அ, ழ்+உ, ய்+இ என அமைந்த
உயிர் மெய்களின் பின்னே
(அ, உ, இ ஆகியவற்றின் பின்னே)
குற்றியலுகர எழுத்து வரின்
உயிர்த் தொடர்க் குற்றியலுகரமாம்!
நாக்கு, பாட்டு, கூற்று என்பதில்
வல்லின மெய்யின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
வன்றொடர்க் குற்றியலுகரமாம்!
சங்கு, நண்டு, நன்று என்பதில்
மெல்லின மெய்யின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
மென்றொடர்க் குற்றியலுகரமாம்!
பல்கு, ஆய்சு, மார்பு என்பதில்
இடையின மெய்யின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
இடைத் தொடர்க் குற்றியலுகரமாம்!
நின்ற சொல்லின் ஈற்றில்
குற்றியலுகர எழுத்து நிற்க
வரும் சொல்லின் முன்னே
'யா' இருக்கும் வேளை பாரும்
குற்றியலுகரம்
குற்றியலிகரமாகத் திரியுமாம்!
'ம்' என்னும் மெய்யின் மீது
ஏறிவரும் இகரமும்
குற்றியலிகரமாம்!
எடுத்துக்காட்டாக
"காசு + யாது = காசியாது?"
"காது + யாது = காதியாது?"
என்பன முதல் வகையிலும்
"கேள் + மியா = கேண்மியா?"
"சென் + மியா = சென்மியா?"
என்பன இரண்டாம் வகையிலும்
சி, தி, மி என்பன
குற்றியலிகர எழுத்துக்களாம்!
"குடதிசை" இல் 'கு' போன்று
சொல்லின் முதலில் வரும் உகரம்
உ, கு, சு, ணு என
தனிக் குற்றெழுத்தாக உள்ள உகரம்
நகு, பசு, மறு என
தனிக் குற்றெழுத்தைத் தொடரும் உகரம்
புறவு, அலமு, புழுவு என
இரு குறிலைத் தொடரும் உகரம்
"தள்ளியிருமு" இல் 'மு' போன்று
இரு எழுத்துக்களுக்கு மேல் வரும்
சொல்லின் ஈற்றில்
கு, சு, டு, து, பு, று தவிர்ந்த உகரம்
எல்லாமே முற்றியலுகரம் தான்!
குறிலுக்கு ஒரு மாத்திரையாயினும்
குற்றியலுகரத்தில் வரும்
உகரத்திற்கும்
குற்றியலிகரத்தில் வரும்
இகரத்திற்கும்
குறுகி ஒலிப்பதால் அரை மாத்திரையாம்!
குறுகி ஒலிக்கும் எழுத்துக்கள்
மாத்திரையின் அளவை மாற்றும்
அவற்றைக் குறுக்கங்கள் என்போம்!
'ஐ' என்னும் உயிருக்கு
மாத்திரை இரண்டு - அது
ஒரு மாத்திரையாகக் குறைந்து
தன் வடிவம் மாறாமலோ
தன் வடிவம் திரிந்தோ
சொல்லுக்கு இடையிலும்
முதலிலும் ஈற்றிலும்
வருகின்ற வேள குறுகி ஒலிப்பதால்
ஐகாரக் குறுக்கமாம்!
"ஐந்தவித்தா னாற்ற " என்று (25 ஆம் குறள்)
தொடரும் குறளடியிலே
'ஐ' தன் வடிவம் மாறாது
குறுகி ஒலித்திடினும்
செய்யுள் நிலையில் 'நேர்' என்றே
அலகிடப்படுகிறதே!
"வையத்துள் வாழ்வாங்கு " என்று (50 ஆம் குறள்)
தொடரும் குறளடியிலே
'ஐ' தன் வடிவம் திரிந்து
'வை' என்று வந்தே
குறுகி ஒலித்திடினும்
'நேர்' என்றே அலகிடப்படுகிறதாம்!
"மனத்துக்கண் மாசில னாத லனைத்தற" என்ற
அடியின் ஈற்றுச் சீரான
"லனைத்தற" இல் 'ஐ' தன் வடிவம் திரிந்து
சொல்லுக்கு (அ)சீர்க்கு இடையே
குறுகி ஒலிப்பதால்
நெடில் 'ஐ' குறிலாகிறதே!
"வீழ்நாட் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்" என்ற
அடியின் இரண்டாம் சீரான
"படாஅமை" இல் ஈற்றில்
ஐகாரம் தனது வடிவம் திரிந்து
குறுகி ஒலிப்பதால்
நெடில் 'ஐ' குறிலாகிறதே!
'ஔ' என்னும் உயிருக்கு
மாத்திரை இரண்டு - அது
ஒரு மாத்திரையாகக் குறைந்து
மொழிக்கு முதலில் வந்து குறுகுவதால்
ஔகாரக் குறுக்கமாம்!
"உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப்" என்ற
அடியின் மூன்றாம் சீரான
"கௌவை" இல் முதலில் வரும்
'ஔ' தன் வடிவம் திரிந்து
குறைந்து ஒலித்திடினும்
செய்யுள் நிலையில் 'நேர்' என்றே
அலகிடப்படுகிறதே!
ணகர, னகர மெய்களுக்குப் பின்னும்
வகர மெய்க்கு முன்னும்
அரை மாத்திரையான மகரம்
கால் மாத்திரையாகக் குறுகி ஒலிப்பதே
மகரக் குறுக்கமாம்!
ஈரசைச் சீர்களான
மருளும், போலும் என்பவற்றை
ஓரசைச் சீர்களாக்கினால்
மருண்ம், போன்ம் எனக் குறுகும் வேளை
தோன்றும் 'ம்' உம்
"தரும் வளவன்" என்பதில்
'வ' இற்கு முன்னுள்ள 'ம்' உம்
மகரக் குறுக்கங்களே!
தனிக் குறிலை அடுத்து வரும்
லகர, ளகர மெய்கள்
ஈற்றெழுத்தாகவுள்ள சொல்லுக்கு
பின்னொட்டாக வரும்
சொல்லின் முதலில் வரும் தகரம்
சொற்புணற்சியின் போது
ல், ள் ஆகியன ஆயுதமாகத் திரிந்து
இணையுமாம் - அதுவே
ஆயுதக் குறுக்கமாம்!
எடுத்துக்காட்டாக
கல் + தீது = கஃறீது எனவும்
அல் + திணை = அஃறிணை எனவும்
முள் + தீது = முஃடீது எனவும்
ஆயுதக் குறுக்கம் அமையுமே!
இங்கு
அரை மாத்திரை ஆயுதம்
கால் மாத்திரையாகக் குறுகி ஒலிக்கிறதே!
சொற்களை ஆக்கும்
எழுத்துக்களைப் படித்தோம்...
எழுத்துக்களான சொற்கள் தான்
பாக்களில் வரும் சீருமல்ல...
அசைகளால் ஆகும் சீர்கள்
தளைக்கேற்ப அமைவதால்
சொற்கள் கூட உடையலாம்!
உடையும் சொல்லை ஒட்டவோ
பிரியும் சொல்லைச் சேர்க்கவோ
பொருள் தரும் வகையில்
அசை, சீர், தளைக்கு இசைவாக
பாக்களைப் புனைவதற்கு
சொற்புணர்ச்சியும் தேவை தானே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க

Saturday, February 9, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-004


எழுத்தின்றிச் சொல் அமையாது
சொல்லமைந்தாலும்
எழுத்துக்கள் இணையாத நிலை
இருப்பதை இடமறிந்து
பாவிக்க வேண்டுமே!
பன்னிரு உயிரோடு
'ச' வரிசை எழுத்துகளில்
'சௌ' ஒழிந்த (தவிர்ந்த)
பதினொன்றும்
'ஞ' வரிசை எழுத்துகளில்
ஞ; ஞா; ஞி; ஞெ; ஞே; ஞொ ஆகிய ஆறும்
'ய' வரிசை எழுத்துகளில்
தொல்காப்பியர் காலத்தில்
'யா' மட்டுமிருக்க
நன்னூலார் காலத்தில்
ய; யா; யு; யூ; யோ; யௌ ஆகிய ஆறும்
'வ' வரிசை எழுத்துகளில்
வ; வா; வி; வீ; வெ; வே;
வை; வௌ ஆகிய எட்டும்
மேலும்,
க; த; ந; ப; ம ஆகிய ஐந்தின்
பன்னிரு எழுத்துகளும்
மொழி முதல் எழுத்தாக
(சொல்லின் முதலெழுத்தாக)
வருவதைக் காணலாம்!
'ச' வரிசை எழுத்துகளில்
சௌ மட்டும்
'ஞ' வரிசை எழுத்துகளில்
ஞீ; ஞு; ஞூ; ஞை; ஞோ; ஞௌ ஆகிய ஆறும்
'ய' வரிசை எழுத்துகளில்
தொல்காப்பியரின் படிக்கு
'யா' ஒழிந்த (தவிர்ந்த)
ஏனைய பதினொன்றும்
நன்னூலாரின் படிக்கு
இது வேறுபடக் காரணம்
வடமொழிச் சொற்களாகச் சில
நன்னூலர் சேர்த்திருக்கலாம் என
அறிஞர்கள் ஐயுறுகின்றனர்...
'வ' வரிசை எழுத்துகளில்
வு; வூ; வொ; வோ ஆகிய நான்கும்
மேலும்,
ங; ட; ண; ர; ல; ழ;
ள; ற; ன ஆகிய ஒன்பதின்
பன்னிரு எழுத்துகளும்
மொழி முதல் எழுத்தாக
(சொல்லின் முதலெழுத்தாக)
வரமாட்டாதென அறிக!
ஞ்; ண்; ந்; ம்; ன்; ய்; ர்; ல்; வ்; ழ்; ள் ஆகிய
பதினொன்றும்
மெய் எழுத்துகளுடன் சேர்ந்தே
பன்னிரு உயிரும்
'எ' என்ற உயிர்
'சேஎ' என்று அளபெடையாகவும்
(சே, சேஎ - எருது)
(சொல்லின் இறுதி எழுத்தாக)
மொழியீற்று எழுத்தாக வருமே!
தனித்துப் பன்னிரு உயிரும்
க்; ச்; ட்; த்; ப்; ற் ஆகிய
வல்லின எழுத்துகளும்
'ங்' என்னும்
மெல்லின எழுத்தும்
(சொல்லின் இறுதி எழுத்தாக)
மொழியீறாக வராது என்க!
க்; ச்; ட்; த்; ப்; ற்; ங் என்பன
மொழியீற்றில் வருமாயின்
அச்சொற்கள்
தமிழ்ச் சொற்கள் ஆகாது என்க!
ட்; ற் ஆகிய இரண்டும்
மொழிக்கு (சொல்லுக்கு)
முன்னும் பின்னும் வராதென
அறிந்தும் கூடப் பாருங்கோ
'ஃ' என்ற எழுத்தை
இதுவரை எங்கும்
இணைக்க முடியவில்லையே!
ஆயுத எழுத்தல்லவா...
உயிரோடும் மெய்யோடும்
இணைவதெப்படி?
'ஃ' என்ற எழுத்தை
மொழியின் (சொல்லின்)
இடைச் செருகலாகவே
பாவித்தாலும் கூட
அருமையாகத் தான்
தனிநிலை எனப் பெயர் பெற்றே
காண முடிகிறதே!
அது, இது, உது என்பன
சுட்டுச் சொற்களாயினும்
அஃது, இஃது, உஃது என்பன
சுட்டுச் சொற்களாயினும்
நம்மாளுகள்
எப்பனும் பாவிக்கிறதாகத் தெரியேல்லையே!
சொற்கள் புணரும் வேளை
பின்னொட்டு முதலெழுத்து
உயிராக அமைந்தால்
அது, இது, உது என வராது
அஃது, இஃது, உஃது என்றே
புணர்ந்து கொள்ளுமே!
எடுத்துக்காட்டாக
'அது அப்படியா?' என வராது
'அஃது அப்படியா?' என அமையுமே!
மேலும்
'இது உண்மையானது!' என வராது
'இஃது உண்மையானது!' என்றமையும்
'உது ஒழுங்கில்லை' என வராது
'உஃது ஒழுங்கில்லை' என்றமையும்
என்றறிந்து பாவிக்க!
ஒன்றைக் குறிக்க
'ஒரு' என்றே பாவித்தாலும்
'ஓர்' என்று ஒன்று
இருப்பதை அறிவீரா!
பின்னொட்டு முதலெழுத்து
உயிராக அமைந்தால்
'ஒரு' ஆனது 'ஓர்' ஆக மாறுமே!
எடுத்துக்காட்டாக
'ஒரு அப்பம்' என வராது
'ஓர் அப்பம்' என்றே அமையும்!
மேலும்
'ஒரு ஆயிரம்' என வராது
'ஓர் ஆயிரம்' ஆகி
ஓராயிரம் எனப் புணர்ந்து வருமே!
ஆயினும்
இந்நடைமுறைக்கு மாறாக
பின்னொட்டு 'யா' ஐ
முதலெழுத்தாகக் கொண்டிருப்பினும்
'ஒரு யானை' ஆக வரினும்
'ஓர் யானை' என்றும் வருமே!
குழப்பம் அடையாதீர்கள்
'யா' இனது ஒலியும்
'அ' இனது ஒலி போல
ஒலிப்பதனால் அமைந்த
சிறப்பு நிலை இதுவாகும்!
எண்ணும் போது பாரும்
ஒரு; இரு ஆகிய இரண்டும்
பின்னொட்டு முதலெழுத்து
உயிராக அமையும் வேளை
ஓர்; ஈர் என மாறுமே!
எடுத்துக்காட்டாக
ஒரு+ஆயிரம்=ஓராயிரம் எனவும்
இரு+ஆயிரம்=ஈராயிரம் எனவும்
அமைவதைக் காண்போமே!
ஒலியன்களான எழுத்துக்களின்
ஒலி (ஓசை) எழும் நிலையை வத்தே
வெவ்வேறாகவே
சொற்கள் புணருவதைப் பார்த்தோமே!
இவ்வண்ணம்
பாக்களில் ஒலி (ஓசை) குறையும் போதோ
சீரும் தளையும் சிதையும் போதோ
யாப்பிலக்கணம் உடையவே
யாப்பைச் சீர் செய்யும் முகமாய்
ஒலி (ஓசை) இனிமையாக அமையவே
நெடிலுடன் குறில் சேரவே
குறில் நெடிலாக மாறி அமையவோ
புணரும் செயலே அளபெடையாம்!
நெடில் குறிலைத் துணைக்கு இழுத்தோ
குறில் நெடிலாக மாறி நின்றோ
தன்னினத்தை அளபெடுத்தல்
இசை நிறை அளபெடை,
இன்னிசை அளபெடை,
சொல்லிசை அளபெடை என
மூன்று வகையில் பார்க்கலாமே!
பாவோசை (செய்யுள் ஓசை) குறையும் போதும்
சீரும் தளையும் சிதையும் போதும்
அசையை நிறைப்பதற்காகவே
கையாளப்படுவது
இசை நிறை அளபெடையாம்!
செய்யுள் இசை அளபெடையும்
இதுவன்றோ!
எடுத்துக்காட்டாக
"ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னும் அவர்" என்ற
திருக்குறள் அடிகளில்
"விளமுன் நேர்" என்ற
வெண்பா இலக்கணத்தைச் சரிசெய்யவே
ஓதல், ஆதும் ஆகிய சீர்கள்
ஓஒதல், ஆஅதும் என்றவாறு
ஓ, ஆ என்பன - தமது
இனங்களான ஒ, அ என்பவற்றை
தம்மோடு இணைத்தே
அளபெடுத்துள்ளது என்போம்!
பாவில் (செய்யுளில்)
ஓசையோ அசையோ குறையாத போதும்
ஓசையை இனிமைப்படுத்தவே
கையாளப்படுவது
இன்னிசை அளபெடையாம்!
எடுத்துக்காட்டாக
"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை" என்ற
திருக்குறள் அடிகளில்
விளமுன் நேர் அமைந்து
வெண்பா இலக்கணம் சரியாயினும்
காய்முன் நேர் அமையும் வண்ணம்
கெடுப்பதும், எடுப்பதும் என்பன
கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் ஆக
இனிமையான ஓசைக்காக
அளபெடுத்துள்ளது என்போம்!
பாவில் (செய்யுளில்)
ஓசை குறையாது இருப்பினும்
பெயர்ச்சொல் ஒன்றை
வினையெச்சச் சொல்லாக
மாற்றும் நோக்கிலேயே
கையாளப்படுவது
சொல்லிசை அளபெடையாம்!
எடுத்துக்காட்டாக
"உரனசைஇ உள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும் உளேன்" என்ற
திருக்குறள் அடிகளில்
நசை(விருப்பம்) எனும் பெயர்ச்சொல்லை
நசைஇ(விருப்பி) எனும்
வினையெச்சச் சொல்லாக மாற்றவே
விளமுன் நேர் சரியாக இருந்தும்
வெண்பா இலக்கணம் பிழைக்காமல்
காய்முன் நேர் சரியாக அமைய
உரனசை, வரனசை என்பன
'ஐ' இற்கு 'இ' இனம் என்ற வழியில்
உரனசைஇ, வரனசைஇ என்றவாறு
அளபெடுத்துள்ளது என்போம்!
மூவகை அளபெடைகள்
அறிந்தாலும் கூட
"ஒற்றளபெடை" என்ற
ஒன்றுமிருக்கிறதே!
பாவில் (செய்யுளில்)
ஓசை குறையும் போது
தனிக்குறிலை அடுத்துவரும் ஒற்றோ
குறிலிணையை அடுத்துவரும் ஒற்றோ
மீள ஒன்றைச் சேர்த்து (இரட்டிப்பாகி)
ஓசையை நிரப்பக் கையாளப்படுவது
ஒற்றளபெடையாம்!
எடுத்துக்காட்டாக
"எங்ங் கிறைவனுளன் என்பாய் மனனேயான்
எங்ங் கெனத்திரிவா ரில்" என்பதில்
"எங்ங்கு இறைவன்" என்பது
"எங்ங் கிறைவன்" எனவும்
"எங்ங்கு எனத்" என்பது
"எங்ங் கெனத்" எனவும்
ஒற்று, தனிக்குறிலை அடுத்து
ஓசையை நிரப்பக் கொள்ள
அளபெடுத்துள்ளது என்போம்!
ஈற்றுச் சீர் ஓரசைச் சீராக
அமைகின்ற வெண்பாவில்
"எங்ங்" எனும் ஓரசைச் சீர்
அடியின் முதலாய் நிற்பதைப் பாரும்!
பிறிதோர் எடுத்துக்காட்டாக
"இலங்ங்கு வெண்பிறைசூ டீசனடி யார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமிலை காண்" என்பதில்
இலங்கு, கலங்கு என்பன
இலங்ங்கு, கலங்ங்கு என்றவாறு
குறிலிணைக்கு அடுத்துவரும் ஒற்று
ஓசையை நிரப்பிக் கொள்ள
அளபெடுத்துள்ளது என்போம்!
"மாமுன் நேர்" என அமைந்தமையால்
வெண்பா இலக்கணம்
மீறப்படுவதை இங்குப் பாரும்!
எடுத்துக்காட்டாகக் காட்டிய
குறள் வெண்பாக்கள்
திருக்குறள் இல்லைப் பாரும்...
திருக்குறள் காலத்திலும்
பின்னரும் கூட
ஒற்றளபெடை
வழக்கு ஒழிந்து விட்டதாக
புலவர் வெற்றியழகனின்
யாப்பரங்கம் நூலில்
சுட்டிக் காட்டப்பட்டுள்ளதே!
யாப்பிலக்கணப் பாக்கள்
அளபெடையை அறிந்ததும்
நன்றாகப் புரியும் என்றாலும்
குற்றியலுகரம், முற்றியலுகரம்,
குற்றியலிகரம் என்றும்
சற்றுப் பார்க்க வேண்டுமே!
(தொடரும்)


முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/01/003.html

Wednesday, January 16, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-003


எண்ணி எண்ணி
எத்தனையோ
எழுத்துக்கள் இருப்பினும்
சுட்டெழுத்துக்கள் இல்லாத
பேச்சு மொழியும் உண்டோ!
பொருளையோ ஆளையோ
சுட்டிக்கூற உதவும்
அ, இ, உ ஆகிய மூன்றும்
சுட்டெழுத்துக்களாம்!
அவன், இவள், உது என
சொல்லொடு சேர்ந்து நின்று
பிரிக்க முடியாத நிலையில் நிற்பது
அகச் சுட்டு ஆகுமே!
அம் மனிதன், இவ் வீடு, உப் பையன் என
சொல்லிலிருந்து
பிரிந்து நின்று சுட்டுவது
புறச் சுட்டு ஆகுமே!
இவன், இவள், இது என
அண்மையில் இருப்பதைச் சுட்டுவது
அண்மைச் சுட்டு ஆகுமே!
உவன், உவள், உது என
அண்மைக்கும் சேய்மைக்கும்
இடையில் உள்ளதைச் சுட்டுவது
இடைமைச் சுட்டு ஆகுமே!
அவன், அவள், அது என
சேய்மையில் இருப்பதைச் சுட்டுவது
சேய்மைச் சுட்டு ஆகுமே!
சுட்டெழுத்தால்
சுட்டிச் சொன்னாலும்
கேட்பதற்கு உதவும்
எ, யா, ஆ, ஓ, ஏ என்பன
வினா (கேள்வி) எழுத்துக்களாம்!
'எ' எனும் உயிரும்
'யா' எனும் உயிர்மெய்யும்
சொல்லின் முதலெழுத்தாய் வர
'ஆ', 'ஓ' ஆகிய உயிர்கள்
சொல்லின் ஈற்றெழுத்தாய் வர
'ஏ' எனும் உயிர்
ஏது? இவனே? என
சொல்லின் முன்னும் ஈற்றாகவும் வருமே!
எவன்?, எவள்? என்றவாறு
சொல்லுடன் சேர்ந்து நிற்பது
அகவினா ஆகுமே!
எப் பொருள்?, எம் மனிதன் என்றவாறு
சொல்லுக்கு வெளியே நிற்பது
புறவினா ஆகுமே!
மொழியின் முதல் பேச்சே
பேச்சின் முதல் சொல்லே
சொல்லின் முதல் வருவதே
மொழிமுதல் எழுத்தாம்!
பன்னிரு உயிரும்
க், ச், த், ந், ப், ம், வ், ய், ஞ் எனும்
உயிரேறிய ஒன்பது மெய்யும்
மொழிமுதல் வரும் எழுத்தாம்!
ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல் என
ஞகரம் நான்கு உயிரோடும்
யகரம் ஆறு உயிரோடும்
வகரம் எட்டு உயிரோடும்
எஞ்சிய
ககரம், சகரம், தகரம், நகரம், பகரம், மகரம் ஆகிய
ஆறும் பன்னிரு உயிரோடும்
மொழிக்கு முதல் வருமாம்!
மொழிமுதல் எழுத்தைப் போல
சொல்லின் ஈற்றெழுத்தே
மொழியீற்று எழுத்தாகும்!
மொழி விளங்காமைக்கு
சொல்லின் இறுதி எழுத்து
உறுத்தப்படாமையோ
விழுங்கப்படுதலோ
அதாவது
உச்சரிக்கப்படாமையோ
காரணம் ஆகுமே!
எகரம் ஒழிந்த (சேராது)
பதினொருயிர்களும்
க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய
ஏழு மெய்களும் ஒழிந்த (சேராது)
எஞ்சிய மெய் எழுத்துக்களுமாக
இருபத்திரண்டு
மொழியீற்று எழுத்துக்கள் உண்டாம்!
தமிழில், யாப்பில்
எழுத்துக்களைக் கணக்கிடுதல்
தமிழ் நெடுங்கணக்கு என்பர்!
இந்தக் கணக்கையும் உச்சி
முந்திக் கொள்கிறது
மூன்று போலி எழுத்துக்களாம்!
மஞ்சு என்றால் மேகம்
'மஞ்சு' என்பதற்குப் பதிலாக
'மைஞ்சு' என எழுதியதால்
'ம' இற்குப் பதிலாக 'மை' வந்தமை
அதுவும்
சொல்லின் முதலில் வந்தமை
என்பதாலே
'மை' என்பது முதற்போலியாம்!
இவ்வாறே பார்த்தால்
'அமச்சு' என்பதற்குப் பதிலாக
'அமைச்சு' என எழுதினால்
'ம' இற்குப் பதிலாக 'மை' வரலாம்
அதுவும்
மொழி முதலாகவோ
மொழியீறாகவோ வராமல்
இடையெழுத்தாக
'மை' வந்தமை இடைப்போலியாம்!
'சுடுகலன்' என்பதை
'சுடுகலம்' என எழுதுகையில்
'ன்' இற்குப் பதிலாக 'ம்' வருதலும்
அதுவும்
மொழியீறாக வருதலும் கடைப்போலியாம்!
போலி எழுத்துக்கள்
ஒரு போதும்
சொல்லின் பொருளை மாற்றாதே!
பா புனைந்தாலும்
பா வரிகளை இனிக்கச் சுவைக்க
எதுகை, மோனை துணைக்கு வருமே!
எதுகை, மோனைக்கு
இசைவான எழுத்து அமையாத போது
எழுத்துக்களின் இன எழுத்தையே
நாடவேண்டி வருகிறதே
உயிர்க்குறிலுக்கு
முறையாக அமையும்
உயிர் நெடில் இனமாகுமென
முன்னர் பார்த்தோம்!
உண்மையில்
எழுத்துக்களை உச்சரிக்கையில்
ஒலியின் பிறப்பிடம்
ஒலிக்கும் முயற்சி
ஒலிக்கும் கால அளவு
எழுத்தின் வடிவம் எல்லாம்
இனவெழுத்துக்களை
அடையாளப் படுத்துகின்றனவே!
உயிர் எழுத்துக்களில்
'அ' இற்கு
அ, ஆ, ஐ, ஓள இனமாக
'இ' இற்கு
இ, ஈ, எ, ஏ இனமாக
'உ' இற்கு
உ, ஊ, ஒ, ஓ இனமாக
'எ' இற்கு
எ, ஏ, இ, ஈ இனமாக
'ஐ' இற்கு
ஐ, அ, ஆ, ஓள இனமாக
'ஒ' இற்கு
ஒ, ஓ, உ, ஊ இனமாக
'ஓள' இற்கு
ஓள, அ, ஆ, ஐ இனமாக
அமையுமெனப் பார்க்கலாம்!
உயிர்மெய் எழுத்துகளில்
உயிருக்கு அமைவது போல
'க' இற்கு
க, கா, கை, கௌ இனமாக
'கி' இற்கு
கி, கீ, கெ, கே இனமாக
'கு' இற்கு
கு, கூ, கொ, கோ இனமாக
'கெ' இற்கு
கெ, கே, கி, கீ இனமாக
'கை' இற்கு
கை, க, கா, கௌ இனமாக
'கொ' இற்கு
கொ, கோ, கு, கூ இனமாக
'கௌ' இற்கு
கௌ, க, கா, கை இனமாக
அமையுமெனப் பார்க்கலாம்!
எழுத்துக்கள் தமக்குள்ளே
சுற்றிச் சுற்றி வந்தாலும்
குறிலுக்கு முறையாக அமையும்
நெடிலை இனமாக ஏற்று
பா புனையலாம் தானே!
பா புனையப் போகையிலே
அது, அஃது, ஒரு, ஓர் என
வேறுபடும் எழுத்துகளோடு
பாவோசையில் மாற்றம் தரும்
எழுத்துக்களாக அளபெடையும்
பார்த்துத் தானே போகவேணும்!
(தொடரும்)


முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/01/002.html

Friday, January 11, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-002

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது
புலவர் ஓளவை அம்மா கூற்று!
எழுத்து உறுப்பிலே வரும்
எழுத்துக்களை வைத்துத் தான்
அசை உறுப்பைப் பார்க்கலாம்!
பாவினம் உறுப்பு ஒன்றிலே
எழுத்தெண்ணிப் பாவடிகளை
அமைக்கும் நிலையும் உண்டு!
யாப்பறிந்து பாபுனைகையிலே
எண்ணும் எழுத்தும்
கண்ணெனக் கருதுக...
பேச்சுக்கு முதல் வரும் ஒலியே
எழுத்து!
ஒலிக்கும் எழுத்தின்
ஒலியளவை வைத்தே
குறிலும் நெடிலும் வந்தாயிற்று!
எழுத்தொலியை அளக்க
"மாத்திரை" என்ற அலகுண்டு!
கண்ணிமைப் பொழுதோ
கைநொடிப் பொழுதோ
ஒரு மாத்திரையாம்!
குறுகிய ஒலியினை உடைய
, , , , ஒ என்பனவாம்
குறில் எழுத்துக்கள்!
நீண்ட ஒலியினை உடைய
, , , , , , ஔ என்பனவாம்
நெடில் எழுத்துக்கள்!
குறிலும் நெடிலும் இணைந்து முறையே
, , , , , , , , , , , ஔ ஆகிய
பன்னிரண்டும் உயிரெழுத்தாம்!
உயிரெழுத்துடனும்
மெய்யெழுத்துடனும்
இணையும் தனியெழுத்தே
உயிருக்கு அடுத்து வரும்
"" தான் ஆயுத (கருவி) எழுத்து!
"அய்யோ" என்பது சரியா
"ஐயோ" என்பது சரியா
"அவ்வை" என்பது சரியா
"ஓளவை" என்பது சரியா
தலையைப் பிய்க்கிற கேள்வி தான்!
தலையை உடைச்சுப் போடாதையும்...
இன உயிர் எழுத்துக்களை
- இனம் -
- இனம் -
- இனம் -
- இனம் -
- இனம் -
என்றவாறே
ஒரு நெட்டுக்கு ஒரு குறில்
இனமெனப் பார்த்தாலும்
'' இற்கும் '' இற்கும் இனமாக்க
குறில் ஒன்றுமில்லையே!
எப்படியோ
- இனம் -
- இனம் -
என்றும் ஏற்கப்பட்டாலும்
, உ ஆகிய குறில்கள்
இரண்டு நெட்டுக்கு இனமாவது எப்படி?
குறில் இன்றி
நெட்டெழுத்துத் தோன்ற
வாய்ப்பில்லையே!
கணப்பொழுது சிந்திக்கையில்
சுணக்கமின்றி
மூளை வேலை செய்தது...
+=அய் எனலாம்
+=அவ் எனலாம்
அடேங்கப்பா
இந்த 'அய்' தான் அந்த ''
இந்த 'அவ்' தான் அந்த ''
இப்ப ஒன்று மட்டும் புரியுது
'அய்' - கூட்டெழுத்து - ''
'அவ்' - கூட்டெழுத்து - ''
என்று தான் அமைந்திருக்கும்!
எழுத்துக்கு "ஐயோ"
யாப்பிற்கு "அய்யோ"
எழுத்துக்கு "ஓளவை"
யாப்பிற்கு "அவ்வை"
என்று தான்
யாப்பிலக்கணத்தில் பார்க்கமுடிகிறது!
நெட்டெழுத்தாக ஐ, ஔ ஆகிய
இரண்டையும் பாவிக்கலாம்...
இல்லாட்டிப் பாரும்
'அய்', 'அவ்' ஆகிய இரண்டையும்
கூட்டெழுத்தாகவும் பாவிக்கலாம்!
மனிதரின்
ஒலியுணர்வே
உயிரெழுத்தாயின்
உயிரின்றி இயங்காத
மனித உடலைப் போன்றதே
மெய் எழுத்துக்கள்!
மெய்யை உச்சரிக்கக்கூட
உயிரை இணைக்க வேண்டியிருக்கே...
'இக்', 'இங்', 'இச்', 'இஞ்',... என
உயிரைச் சேர்த்தே
மெய்யை வாயால் சொல்ல முடிகிறதே!
வல்லின ஒலியன்களான
க், ச், ட், த், ப், ற் என்பன
வல்லின மெய் எழுத்தாம்...
மெல்லின ஒலியன்களான
ங், ஞ், ண், ந், ம், ன் என்பன
மெல்லின மெய் எழுத்தாம்...
வல்லின ஒலிக்கும்
மெல்லின ஒலிக்கும்
இடைப்பட்ட ஒலியன்களான
ய், ர், ல், வ், ழ், ள் என்பன
இடையின மெய் எழுத்தாம்...
எழுத்தொழுங்கில்
எடுத்துச் சொல்லும் போது
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்,
ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்பன
மெய்யெழுத்து ஒழுங்காம்!
இன்னும் கொஞ்சம் போனால்
மெய்யோடு உயிரைச் செர்க்கையிலே
க் + = ; க் + = கா; க் + = கி; க் + = கீ;
க் + = கு; க் + = கூ; க் + = கெ ; க் + = கே;
க் + = கை; க் + = கொ; க் + = கோ; க் + = கௌ என
உயர், மெய் எழுத்துக்கள் ஆகலாம்!
கொஞ்சம் நில்லுங்கோ - இங்கு
மெய்யோடு;
உயர்க் குறில் இணையும் வேளை
உயர் மெய் குறிலும்
உயர் நெடில் இணையும் வேளை
உயர் மெய் நெடிலும்
தோன்றுவதைக் காண்பீரே!
அட! இங்கேயும் தான்...
"கய்யோ" என்பது சரியா
"கையோ" என்பது சரியா
"கவ்வை" என்பது சரியா
"கௌவை" என்பது சரியா
உயிரெழுத்தைப் படித்ததும்
இந்த 'கய்' தான் அந்த 'கை'
இந்த 'கவ்' தான் அந்த 'கௌ'
என்றவாறே
கூட்டெழுத்து, தனியெழுத்து
சிக்கல் தீர்ந்தததே!
மெய்  எழுத்துக்களில்
வல்லின மெய்களுக்கு முறையே
மெல்லின மெய்கள் இனமாயினும்
இடையின மெய்களுக்கு
இன எழுத்துக்கள் இல்லையே!
பேச்சுக்கு முதல் வரும்
ஒலியன்களான
உயர், ஆயுதம், மெய், உயர் மெய்,
குறில், நெடில், இன எழுத்து, கூட்டெழுத்து
என்றெல்லாம் அடுக்கி வர
சுட்டெழுத்து, வினா எழுத்து,
மொழி முதல் எழுத்து, மொழியீற்று எழுத்து
என்றெல்லாம் நீளுகிறதே!
(தொடரும்)

 முன்னையதைப் பார்க்க