Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Thursday, August 27, 2015

புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03

http://www.ypvnpubs.com/

எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.
தூய தமிழ் பேணும் பணி
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்
உளநலப் பேணுகைப் பணி
யாழ்பாவாணனின் எழுத்துகள்
யாழ்பாவாணன் வெளியீட்டகம்
நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
இவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.

http://www.ypvnpubs.com/

இப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.
இப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.
எனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.

http://www.ypvnpubs.com/

Tuesday, April 14, 2015

எல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

(படம்: கூகிள் தேடலில்...)
எனது ஏழு வலைத் தளங்களின்
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
வாசகர் எல்லோருக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
என் இனிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Monday, November 17, 2014

பாப்புனைந்து வென்றவர்களை வாழ்த்துங்கள்!

பாவலராவது என்பது
பிறக்கும் போதே வந்ததல்ல
எமது முயற்சியின் விளைவாய் மலர்ந்ததே!
அன்று பத்திரிகை, மூ.மேத்தாவின் நூல்கள்
இன்று வலைப்பூக்கள் என்றெல்லாம் படித்தே
எவராச்சும் எழுதிய பா/ கவிதை போல
பாப்புனைய முயற்சி செய்கிறேன் - எனக்கும்
பாவலராக விருப்பம் (ஆசை) இருப்பதால் தான்!
பிறப்பிலேயே பாவலர்/ கவிஞர் உருவானாரா
பிறந்த பின் வாழும் வேளை
பாவலர்/ கவிஞர் உருவாக்கப்பட்டாரா
என்றெல்லாம் அரங்குகள் தோறும்
பட்டிமன்றங்கள் நிகழ்ந்தாலும்
பாவலர்/ கவிஞர் பிறக்கவில்லை
சூழலால் உருவாக்கப்படுகின்றார் என்றே
என் உள்ளத்தில் மலர்ந்த முடிவு!

பாப்புனைய விரும்பும் உறவுகளே
எனது எண்ணங்களைப் பார்த்து
பாப்புனையும் திறனைப் பெருக்கியிருந்தாலும்
தீபாவளி (2014) நாளை முன்னிட்டு நடாத்திய
பாப்புனையும் திறன்காண் போட்டியில்
பங்கெடுத்த எல்லோருக்கும் வாழ்த்துகள்!
எண்ணங்களை வெளிப்படுத்தும் பா/ கவிதை
கண்ணால் படம் பார்த்ததும் - உங்கள்
உள்ளத்தில் தோன்றிய பா/ கவிதை என
இரண்டு பா/ கவிதை புனைந்த - உங்களுக்கு
பாப்புனைதலில் பட்டறிவு கிட்டியிருக்குமே!
போட்டிகளில் வெற்றி பெறமுன்
போட்டிகளில் பங்கெடுத்த முயற்சியே
பாவலராகக் கிடைத்த வெற்றி என்பேன்!

போட்டிகளில் பங்கெடுத்தவருக்குக் கொண்டாட்டம்
வெற்றியாளரைத் தெரிவு செய்வதில்
நடுவர்களுக்குத் தான் திண்டாட்டம் என்பேன்!
நண்பர் ரூபன் சுட்டிக் காட்டியது போல
ஐம்பத்திநான்கு பாப்புனையும் ஆற்றலாளர்களிடையே
பத்துப் பாப்புனையும் திறனாளர்களை
பாப்புனையும் நுட்பங்களை வைத்தே
நடுவர்களும் தெரிவு செய்திருப்பர் என்பேன்!
ஏனெனில்
போட்டியில் பங்கெடுத்த எல்லோருமே
பாப்புனைதலில் வென்றவர்களே என்பேன்!!
எப்படியிருப்பினும்
பாப்புனைந்து போட்டியில் வென்ற
பத்துப் பேரையும் வாழ்த்துங்கள் - அந்த
பத்துப் பேரினது பாக்கள் - நாம்
கற்றுக்கொள்ள வழிகாட்டும் என்பேன்!
பத்துப் பேரினது இருபது பாக்களைப் படிக்க
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்,,,
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/2014/11/2014.html
பாப்புனைந்து வென்றவர்களை வாழ்த்துங்கள்!


Thursday, May 1, 2014

புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?


இனிய உறவுகளே!
நான் புதன், சித்திரை 30, 2014 அன்று "கவிதை" என்பது வடமொழியா? எனும் பதிவைப் பதிவு செய்திருந்தேன். அப்பதிவைப் புலவர் வெற்றியழகன் அவர்களின் நூலில் (பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.) இருந்து பெற்ற தகவலை வைத்தே எழுதினேன். அதாவது, கபி என்றால் குரங்கு என்றும் கவி என்றால் குரங்கில்லை என்றும் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்களெனப் படித்தேன். அதன் வெளிப்பாடே "கவிதை" என்பது வடமொழியா? (http://paapunaya.blogspot.com/2014/04/blog-post_30.html) என்ற பதிவு. எனது பதிவைப் படித்த அறிஞர்களின் பதில் கருத்து, "புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?" என்ற ஐயத்தை ஏற்படுத்திவிட்டது.

"கவி - கவிஞன் என்ற இரண்டு சொற்களும் வடமொழியே
கவிஞன் கவிதை இரண்டும் அயற்சொல்
புவியும் அதுவெனப் போ!" என்ற
கவிஞா் கி.பாரதிதாசன் (தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு) அவர்களின் கருத்து, எனக்கு ஐயம் ஏற்படக் காரணம் ஆயிற்று.

உடனடியாக வலைகளில் பொருள் தேடி அலைந்த போது கிடைத்த பெறுபேறுகள் புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துக்கு முரணாகச் சில இருந்தன.

http://www.tamilvu.org/slet/servlet/srchlxpg?editor=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF&key_sel=Tamil&GO.x=44&GO.y=13 என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். ஆங்கொரு வரியில் "குரங்கு. கவிக்குல மவற்றுக்கெல்லாம் நாயகன் சுக்கிரீவன் (கம்பரா. உருக்காட்:29)." என்றிருந்தது. ஆயினும், புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவித்த கருத்தும் இருந்தது.

http://ta.wiktionary.org/s/gy6 என்ற  இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அதிலும் கவி என்றால் குரங்கு என்றும் இருந்தது.

என் உள்ளம் நிறைவடையவில்ல; மீண்டும் தேடினேன்.

http://ta.wiktionary.org/s/4jt6 என்ற  இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அங்கே கபி என்றால் குரங்கு என்று நேரடியாகச் சுட்டப்பட்டிருந்து.

இவற்றைக் கருத்திற் கொண்டு கபி என்றால் குரங்கு என்பதை கவி என்றால் குரங்கு என்றும் புழக்கத்தில் வந்திருக்கலாம் தானே! தொல்காப்பியக் காலத்தில் இல்லையாம், நன்னூல் காலத்திலேயே தமிழ்-வடமொழிக் கலப்பு இடம் பெற்றிருக்கலாம் எனத் தனது நூலில் புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவிக்கின்றார். எனவே, புலவர் வெற்றியழகன் அவர்கள் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் எனச் சான்றின்றித் தெரிவித்திருக்க மாட்டார்.

எனவே புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துப்படி கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் இல்லை என்று கூற முடியாதுள்ளது. இந்நான்கு சொல்களும் தமிழ் சொல்கள் இல்லை என்பதற்கு உங்களால் சான்று பகிர முடியுமா? இல்லையேல், தமிழ் சொல்கள் என முற்றுப்புள்ளி வைக்கலாமா? அறிஞர்களே! உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

Sunday, February 2, 2014

பாவலர்களே! பாடலாசிரியர்களே!


என் உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே!

நாம் வலைப்பூக்கள், வலைத்தளங்கள் போன்ற மின் ஊடகங்களில் தமிழைப் பரப்புவோர், இலக்கியங்களை வெளியிடுவோர் தள முகவரிகளைத் திரட்டி http://thamizha.2ya.com/ தளத்தில் களஞ்சியப்படுத்துகிறோம்.

இச்செயலால் பல அறிஞர்களை, பல வலைப்பூக்களை, பல வலைத்தளங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் பலரது பல கோணத் தமிழ் ஆய்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, இச்செயற் திட்டத்தின் மூலமாக உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வழி பிறக்கும் என நம்புகிறோம்.

நீங்களும் உங்கள் வலைப்பூ, வலைத்தள முகவரிகளை எமது http://thamizha.2ya.com/ தளத்தில் இணைத்து உலகெங்கும் உங்கள் அறிவைப் பரப்ப முன்வாருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

Saturday, January 11, 2014

பொங்கல் பாட்டு


இன்றைக்குத் தைப்பொங்கல் என்றாச்சு!
என்றைக்கும் இனிக்கும் பொங்கலாச்சு!
                                                        (இன்றைக்கு)

மழை தந்தவனுக்குப் பொங்கலாச்சு!
நெல் விளைந்ததுமே பொங்கலாச்சு!
                                                        (மழை)
                                                        (இன்றைக்கு)

பொங்கல் நாளே எங்கள் நாளாச்சு
பொங்கல் நாளே உழவர் நாளாச்சு
பொங்கல் நாளே புத்தாண்டு ஆச்சு
பொங்கல் நாளே தமிழர் நன்நாளாச்சு
                                                         (இன்றைக்கு)
                        
எங்க தையே பிறந்த நாளாச்சு
நம்ம தமிழுக்கு முதல் நாளாச்சு
புத்தரிசி போட்டுப் பொங்கும் நாளாச்சு
ஞாயிற்றுக்கு நன்றி கூறும் நாளாச்சு
                                                          (இன்றைக்கு)
                        
முற்றம் மெழுகுவது அப்பா ஆச்சு
கோலம் போடுவது அம்மா ஆச்சு
பொங்கிப் படைப்பதும் இருவரும் ஆச்சு
ஞாயிற்று வரவோடு நிறைவும் ஆச்சு
                                                          (இன்றைக்கு)
                        
படைத்த பொங்கலை உண்பதும் நாமாச்சு
நன்நாளில் நல்லது செய்வதும் நாமாச்சு
உறவோடு அன்பைப் பகிருவதும் நாமாச்சு
நண்பரோடு சேர்ந்து மகிழ்வதும் நாமாச்சு
                                                           (இன்றைக்கு)

Tuesday, December 31, 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Sunday, September 8, 2013

சாதனையை நோக்கி 75 மணி நேரத் தொடர் கவியரங்கம்


சாதனையை நோக்கி 75 மணி நேரத் தொடர் கவியரங்கம் ஒன்றை,
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் 03/01/2014 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் நடாத்தவுள்ளது, உலகெங்கும் தமிழ் பரவ, உங்கள் பாவண்ணத்தையும் வெளிப்படுத்த முன் வாருங்கள். இந்நிகழ்வு பற்றிய எல்லாத் தகவல்களையும் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.
http://tamilkavinjarsangam.yolasite.com/75hours-kaviarankam.php

"தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்" யார் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவர்கள் "திருக்குறளே தேசிய நூல்" என்பதை
மையப்படுத்தி மாநாடு ஒன்றினை 2013 ஜுன் 16-ம் திகதி அம்பத்தூர், ஜி.கே மாளிகை, சென்னையில் சிறப்பாக நடாத்தி இருந்தைமை யாவரும் அறிந்ததே! அன்றைய நாள் "திருக்குறளே தேசிய நூல்" என்ற கவிதைத் தொகுப்பு நூலினையும் வெளியிட்டுள்ளனரே! அந்நூலில் இடம் பெற்ற எனது கவிதையினைக் கீழே பார்வையிடலாம்.

திருக்குறளே தேசிய நூல்

நாற்சீரும் முற்சீருமாய் ஈற்றில் தனிச்சீருமாய்
ஏற்றதொரு அறிவை ஊட்டிவிடவே
ஒன்றே முக்காலடி வெண்பாப் பாடிய
இன்றே நினைப்பாய் வள்ளுவரை!

வள்ளுவர் பாடிய 1330 குறளில்
கிள்ளிக் கிள்ளிப் படித்துச் சுவைக்க
அள்ள அள்ள வற்றாத அறிவுக்கடல்
மெள்ள முப்பாலில் ஊற்று எடுக்குமே!

எடுத்த எடுப்பிலே அகரந் தொட்டு
கொடுத்த அறம் (தர்மம்), பொருள், இன்பம் (காமம்) என
நம்மாளுகளின் வாழ்வை விளக்கும் வழிகாட்டல்
எந்நாளும் நமக்குத் திருக்குறளே நன்நூல்!

நன்நூலாம் திருக்குறள் சுட்டும் முப்பாலில்
நன்றே பாயிரம், இல்லறம், துறவறமாக
அறத்துப்பாலில் ஊழியலும் இணைத்து நான்காக
சிறப்பாகத் திருக்குறளின் முதற்பால் இனிக்குமே!

இனிக்கும் திருக்குறளில் பொருட்பாலைப் பாரும்
தனித்தனியே அரசியல், அமைச்சியல், அங்கவியல்
அடுத்துவரும் காமத்துப்பாலைக் கற்றுக் கொண்டால்
தொடுத்தார் களவியல், கற்பியலென வள்ளுவர்!

வள்ளுவர் பாடிய 133 பத்தில் (அதிகாரத்தில்)
கிள்ளியெடுக்க எல்லாத்துறை அறிவும் இருக்கே
எண்ணிப்பாரும் குறள்வெண்பா கூறிடும் முழுவறிவை
எண்ணிக்கொள்ளும் திருக்குறளே நம்தேசிய நூலென்று!

மேலும், தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியது. அதில் என் கவிதையும் இடம்பெற்றது. (சான்று: http://paapunaya.blogspot.com/2013/02/blog-post_22.html) "திருக்குறளே தேசிய நூல்" என்ற மாநாட்டில் மேலே குறிப்பிட்ட 'கவி விசை' ஆசிரியர்களுக்கு "கவி முரசு" பட்டயம் வழங்கி மதிப்பளித்துள்ளனர். அம்மதிப்பு உங்கள் யாழ்பாவாணனுக்கும் கிடைத்தது என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Monday, August 19, 2013

பாபுனையத் தெரிந்து கொள்வோமா?

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என யாப்பிலக்கணத் தொடரை எழுதி வருகிறேன். அதேவேளை பிற அறிஞர்களின் குறிப்புகளையும் இணைத்து வருகிறேன்.

ஆயினும் பிற அறிஞர்களின் சில யாப்பிலக்கண அடிப்படைக் குறிப்புகளை noolaham.org, projectmadurai.org ஆகிய தளங்களில் இருந்து பதிவிறக்கி "பாபுனையத் தெரிந்து கொள்வோம்" என்ற நூலைத் தொகுத்துள்ளேன். அதேவேளை எல்லாப் புகழும் நூலாசிரியர்களுக்கே சேரும்.

பல அறிஞர்களின் சிறு பதிவுகளைத் தந்த / தரும் யாழ்பாவாணன் ஆகிய நான், இந்நூற் தொகுப்பை எனது வலைப்பூப் பக்கத்தில் விரித்துப் பார்க்கவும் எனது மின்னூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கவும் இடமளித்திருத்திருக்கிறேன்.

யாப்பறிந்து பாபுனைய விரும்பும் எல்லோரும் இந்நூலைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://paapunaya.blogspot.com/p/blog-page_18.html
அல்லது பட்டியில் (Menu இல்) "பாபுனையப் படிப்போம்" என்ற பக்கத்தைச் சொடுக்குக.

முதலில் இந்நூற் தொகுப்பைப் படியுங்கள். இரண்டாவதாக இதன் நன்மை, தீமைகளைக் கூறி உங்கள் நண்பர்களையும் பார்வையிடச் செய்யுங்கள்.

இவ்வண்ணம்
தொடர்ந்தும் தங்கள் ஆதரவை நாடும்
உங்கள் யாழ்பாவாணன்





Saturday, August 10, 2013

முதன்மைப் பதிவராக...

நான்
எழுத்துலகில் எண்பத்தேழில்
கால் பதித்தாலும்
தொண்ணூறிலேயே
என் முதற் கவிதை
பத்திரிகையிலே வெளியானது!
எழுதுங்கள்
என்றோ ஒரு நாள்
எழுத்துகள் சிறக்கும் என
அறிஞர்கள் எனக்கு வழிகாட்டினர்!
எழுதினேன் பத்திரிகையிலே
அன்று
ஆனால், இன்று
இணையவழியில்
வலைத்தளங்களில், வலைப்பூக்களில்
பதிவராகப் பதிகின்றேன்
நல்ல பல பதிவுகளை!
எனக்கு ஒரு துயரம்
என் பதிவுகளுக்கு
ஒருவரும் கருத்துக் கூறுவதில்லை...
என் துயரைப் போக்க
அறிஞர்கள் பலரின் தளங்களைப் படித்தேன்...
"ஒரு பதிவைப் பதிந்த பின்
ஒரு கருத்துக் கூற
ஒருவரும் இல்லையா?
பொய்... பொய்... பொய்...
நீ
எத்தனை பதிவரின் பதிவுக்கு
கருத்துக் கூறினாய்
உன் பதிவுக்கு
எவராச்சும் கருத்துக் கூற" என்று
அறிஞர்கள் சிலர் கேட்டனர்!
நேரம்
பலருக்கு இறுக்கம் தான்
எனக்கும் தான்
என்றாலும்
சில நேரங்களில்
சிலரின் பதிவுகளுக்கு
கருத்துக் கூறுவதால் தான்
ஒரு பதிவைப் பதிந்த பின்
ஒரு கருத்துக் கூட
எனக்கு எட்டுகிறதே!

குறிப்பு: புதிய பதிவர்களே! எனது நண்பர்கள் முதன்மைப் பதிவராக மின்னுவதற்குக் காரணமே, நேரம் உள்ள போதெல்லாம் பிறரது பதிவுக்குக் கருத்துக் கூறுவதால் தான். நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டியள்... என்றாலும் சொல்கிறேன். கூகிள் வலைப்பூவில் நண்பர் ஒருவர் ஒரு பதிவைப் பதிந்தால் கிட்டத்தட்ட நூறு பதில் கருத்துகளைப் பெறுகிறரே! அப்படியாயின், அவர் நூற்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளுக்குக் கருத்துக் கூறுகிறார் போலும்! அப்படித்தான் நானும் எண்ணுகிறேன்.

Sunday, May 12, 2013

பாபுனையப் பொத்தகங்கள் சில...


உவன் யாழ்பாவாணன்
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என
தொடங்கியவர் தான்
உருப்படியாய்
இன்னும் முடித்தபாடில்லைக் காணும்...
போதாக்குறைக்கு
"பாபுனையப் பொத்தகங்கள் சில..." என
வந்திட்டாரென்று - நீங்கள்
உங்களுக்குள்ளே எண்ணிக்கொள்ளலாம்!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற
தொடரைத் தொடர்ந்து கரை சேர்க்க
"பாபுனையப் பொத்தகங்கள் சில..." என
பொறுக்கித் தர முனைந்தது
பயிலுவோருக்கு இலகுபடுத்தவே!
மரபுப் பா(கவிதை) தொட்டு
புதுப் பா(கவிதை) வரையான
இலக்கண, இலக்கிய விளக்க நூல்கள்
அஆ, பாட்டு, உரைநடை இலக்கணங்கள்
சிறுவர் தமிழ் இலக்கியம்
நாட்டார் பாடல் இலக்கியம் என
அறுபதிற்கு மேற்பட்ட
தலைப்புகளின் கீழ்
ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்களை
தொகுத்துத் திரட்டியுள்ளேன் என்றாலும்
"படைப்பாளியாக முயல்வோருக்கு" என
யாப்பறிந்து பாபுனைய வந்தோருக்கும்
வழிகாட்டல் நூல்கள் இருக்குப் பாரும்!
தமிழ் நலம், தமிழர்(உள, உடல்) நலம் பேண
வழிகாட்டல் நூல்கள் பலவும் இருக்கு
உலகின் எட்டுத் திக்கிலும் வாழும்
நம்மாளுகள் அறிந்திட உதவுங்களேன்!
தமிழை மறந்தவர் தமிழ் பயில
ஆங்கில வழியில்
தமிழ் பயிலும் நூல்களும் இருக்கு
உண்ணான
வெள்ளைக்காரனும்
தமிழ் படிக்க உதவும் என்றே
யாழ்பாவாணனின்
மின்நூல் களஞ்சியத்தை
உலகிற்கு அறிமுகம் செய்ய
முன்வாருங்கள் உறவுகளே!

மின்நூல் களஞ்சியத்தைப் பார்வையிட கீழ் வரும் இணைப்பைச் சொடுக்குக:
http://yarlpavanan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

நீங்களும் மின்நூல் களஞ்சியம் அமைக்கலாம். முதலில "யாழ்பாவாணன் என்ன தான் பண்ணிட்டாரு!" என்ற பக்கத்தைப் பாருங்கள்.
http://yarlpavanan.wordpress.com/2013/05/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/

Sunday, April 28, 2013

கலைஞர்கள் மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி



நம்மாளுகள்(மனிதர்கள்)
வாழ்க்கையின் கண்ணாடி!
காலங்கள்
வரலாற்றின் கண்ணாடி!
கலைஞர்கள்
மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி!
நிகழ்வுகள்
சான்றுகளின் கண்ணாடி!

"சான்றுகள்" என்ற தலைப்பில் நான் எழுதிய பாவிது. ஈழப்போரில் எரிந்துபோன பல நூறு படைப்புகளில் இதுவும் ஒன்று. இப் பா(கவிதை) பற்றிய எனது எண்ணங்களை உங்களுடன் பகிர முனைகிறேன்.

நம்மாளுகள்(மனிதர்கள்)
வாழ்க்கையின் கண்ணாடி!

இவ்வரிகள் சொல்லுவதாவது; ஆணும் பெண்ணும் மணமுடித்து வாழ்ந்த வாழ்க்கையின் சான்றாகப் பிள்ளைகள்.

காலங்கள்
வரலாற்றின் கண்ணாடி!

இவ்வரிகள் சொல்லுவதாவது; நேற்று, இன்று, நாளை என்பது காலங்கள். ஆயினும், காலங்களை மீட்டால் கண்முன்னே வருவது கடந்தகால வரலாறு.

கலைஞர்கள்
மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி!

இவ்வரிகள் சொல்லுவதாவது;  எழுத்தாளர்கள், பாவலர்கள்(கவிஞர்கள்), நகைச்சுவையாளர்கள், நடிகர்கள் எனக் கலைகளை வெளிப்படுத்துவோர் கலைஞர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். கலைஞர்களின் வெளிப்பாடு புலம் சார்ந்து இருக்கும். அந்தப் புலம் தான் அவர்கள் வாழ்ந்த, வாழும் சூழல் அதாவது மக்களாய(சமூக)ம் என்று கூறலாம்.

நிகழ்வுகள்
சான்றுகளின் கண்ணாடி!

இவ்வரிகள் சொல்லுவதாவது; இயற்கை நிகழ்வுகள், நம்மவர் நடாத்தும் செயற்கை நிகழ்வுகள் யாவும் நிகழ்வுகளே! ஒவ்வொரு  நிகழ்விலும் நம்மாளுகள்(மனிதர்கள்), காலங்கள், கலைஞர்கள் இடம்பெறுவர். எனவே, எல்லாவற்றின் சான்றுகளும் இங்கே தான் பகிரப்படுகிறது.

எடுத்துக்காட்டாக பாவ(கவிய)ரங்க நிகழ்வில் நான் பா(கவிதை) பாடினேன். அந்நிகழ்விலே காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களின் மூத்தமகன் ஜீவலிங்கம். வடமொழியில ஜீவலிங்கம் தமிழில உயிரழகன், புனைபெயராக யாழ்பாவாணன் அவர்கள் பா(கவிதை) பாடுவாரென நிகழ்வின் தலைவர் அறிவித்தார்.

நானோ,
பாவ(கவிய)ரங்கச் சுவைஞர்களே!
சின்னப் பொடியன் - நான்
படிக்கும் பாவினைச் சுவைக்க முன்
2004 கடற்கோள்(Tsunami) என்பதே
என் தலைப்பென்று தொடங்கினேன்...
கடற்கோள்(Tsunami) வந்தது
மடக்கெனத் தன்வேலை முடித்துச் சென்றதே!
கடற்கோள்(Tsunami) என்னவென்று
சுடச்சுடச் சொல்வதற்காய்
ஆச்சியின் ஆச்சி படித்த
பூச்சிகள் அரித்துண்ட நூலில் இருப்பதாய்
உலகை ஆண்ட தமிழன்
கடைசியாக ஆண்ட மண்
பாண்டியன் ஆண்ட மண்
குமரிக்கண்ட(லெமூரியா-Lemuria Continent)த்தில்
ஒரே நிலப்பரப்பாயிருந்த
இந்தியாவையும் இலங்கையையும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
இரண்டு நிலப்பரப்பாக்கியதும் - இந்த
கடற்கோள்(Tsunami) தான் என்றறிவீரா?

இப்படிப் படித்து முடித்ததும் இத்தனை தலைவர்கள் இருந்தும் சொல்லாத செய்தியாக இந்திய-இலங்கைத் தமிழர் ஒரு தாய் பிள்ளைத் தொப்புள் கொடி உறவென்பதை சின்னக் கலைஞன் சொன்னதாக நிகழ்வின் தலைவர் கூறிமுடிக்கிறார்.

மேற்படி நிகழ்வின் சுருக்கப்படி "ஒரு கலைஞன் காலத்தின் கண்ணாடி" என்றும் கூறலாம். சிலர் கலைஞன் காலத்தின் கண்ணாடி என்றும் அழைக்கிறார்கள். வேறு சிலர் பாவலன்(கவிஞன்) காலத்தின் கண்ணாடி என்றும் அழைக்கிறார்கள்.

"கவிஞர்கள் காலத்தின் கண்ணாடி. அதனால் அவர்கள் நற்கருத்தைத் தான் கூறவேண்டும் என்பது என் இனிய வேண்டுகொள்." என்று நண்பர் ஒருவர் தெரிவித்தார். நானும் அவருக்கு "தங்கள் கருத்தை வரவேற்கிறேன். அதற்கு மாற்றுக் கருத்துக் கிடையாது." என்றும் பதிலளித்தேன். இந்தக் கருத்தாடலே இத்தனையும் என்னை எழுதத் தூண்டியது. நானோ 1987 இலிருந்து எழுதுகிறேன். நல்ல வழிகாட்டலை வெளிப்படுத்தவே நானும் எழுத்தைப் பாவிக்கிறேன்.

பாவலன்(கவிஞன்) காலத்தின் கண்ணாடி என்றால் நற்கருத்தைத் தான் கூறவேண்டும் என்றால் மேலே நான் பத்திரிகையில் பொறுக்கிப் பாவ(கவிய)ரங்க நிகழ்வில் பாடியது போன்று எழுதுவதா? இல்லவே இல்லை!

படைப்பு; படைப்பாக்கச் சூழலையும் அதற்கான தீர்வையோ வழிகாட்டுதலையோ கொண்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக:

ஒரு மணி நேரம்
மகிழ்வாய் இருக்கலாம்
ஒரு நூறு போதுமென்று
உரசினாள் ஒருவள்!
உனக்கு
ஒரு நூறல்ல
பல நூறு தரலாம்
என் வீட்டு
வேலைக்காரியாகிவிடு!
எனக்கு
ஆறு பெட்டை ஆறு பொடியன்
மொத்தம் பன்னிரண்டையும்
நீ தான்
ஒழுக்கமாக வளர்த்துப் பேணி
பள்ளிக்கும் அனுப்ப வேண்டும்!
இன்றுடன்
தெருப் பொடியளுக்குப் பல்லைக் காட்டாமல்
என் வீட்டில்
வேலைக்குச் சேர்ந்து விடு
முப்பதாயிரம் கூலி தாறேனென்றதும்
வந்தவள் தான்
இன்று
எதிர் வீட்டில்
மருத்துவர் மனைவியாகி
இரண்டு பிள்ளைக்குத் தாயுமானாளே!

"விலைப்பெண்ணும் மருத்துவர் மனைவியானாள்" என்ற தலைப்பில் ஆக்கப்பட்ட பாவிது. விலைப்பெண்ணும் வேலை பெற்று, வீட்டாரின் பிள்ளைகளுடன் இணைந்து வீட்டில் படித்தாளோ, வருவாயைப் பெற்று வெளியில் படித்தாளோ மருத்துவர் மனைவியாகத் தகுதி பெற்றுவிட்டாளே! என எழுதியதின் படி நற்கருத்தைப் பாவலன் கூறுகிறார் எனலாம்.

ஆளுக்கொரு கொடி
ஆளுக்கொரு கட்சி
ஆளுக்கொரு இனமாகப் பிரிந்து வாழும்
தமிழா
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
என்றறிந்தால்
இன்றே தமிழனென்று ஒன்றுபடு!

இப் பாவிலும் "பிரிந்து தமக்குள்ளே மோதிக்கொள்ளும் தமிழரை ஒன்றுபடு" என அழைப்பதும் பாவலன் கூறும் நற்கருத்தே!

நண்பர்களே! "பாவலன்(கவிஞன்) காலத்தின் கண்ணாடி" என்பதை நான் ஏற்கமாட்டேன். என் அறிவிற்கெட்டியவரை "கலைஞர்கள் காலத்தின் கண்ணாடி" எனலாம். "கலைஞர்கள் மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி" என்றும் அழைக்கலாம். ஏனென்றால், பாவலன்(கவிஞன்) மட்டும் கலைத்திறனை வெளிப்படுத்துவதில்லையே! கலைத்திறனை வெளிப்படுத்தும் எல்லாத்துறைக் கலைஞர்களுக்கும்  நற்கருத்தை வெளிப்படுத்த வேண்டிய கடமையுள்ளதால்; "கலைஞர்கள் மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி" என உணர்ந்து நற்கருத்தும் நல்வழிகாட்டலும் உள்ள படைப்புகளை ஆக்கி வெளியிடுவீர்களென நம்புகிறேன்.

Wednesday, March 20, 2013

கரித்துண்டு


நாட்டில
அரசு கவிழும் என்றால்
மக்களிடையே
வேலையில்லாச் சிக்கல் தான்!
வீட்டில
உறவுகளிடையே முறிவு என்றால்
தலைவர்மாருக்கு
வேலையில்லாச் சிக்கல் தான்!
தெருவெளியில
காதல், மோதல் என்றால்
காளைக்கும் வாலைக்கும்
வேலையில்லாச் சிக்கல் தான்!
நடுவழியில
பிணவாடை வீசும் என்றால்
ஆளுக்காள்
வேலையில்லாச் சிக்கல் தான்!
செய்தி ஏட்டில
எத்தனையோ
இழவுச் செய்தி வந்தாலும்
அரசின் காதுக்கு எட்டல...
என் பாட்டில
எழுதக்கூட
எழுதுகோல் வேண்டக் காசில்லை...
நானும்
பாரதியைப் போல
கரிதுண்டு பிடித்து
தெருவெளியில எழுதப் போறேனுங்க...!

செய்தி:-
இந்தியாவில்
வெள்ளையனுக்கு எதிராக
பாரதி எழுப்பிய போர் முரசெல்லாம்
கரிதுண்டால் எழுதி
தெருச்சுவரெல்லாம்
நிரம்பி வழியக் கிடந்ததாமே!
சான்றுக்கு
பாவலர் வைரமுத்துவின்
"கவிராஜன் கதை" என்னும்
புதுக்கவிதைக் காவியத்தை
படித்துப் பாருங்களேன்!


Friday, February 22, 2013

உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு


தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியுள்ளது. இந்நூலில் எனது கவிதை உட்பட 402 கவிஞர்களின் கவிதைகள் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இதில் அரசியல், சமயம் சாராத 25 அடிகளுக்குட்பட்ட பல துறை சார்ந்த பதிவுகள் உள்ளடங்கி உள்ளன.

முதலில் இவ்வுலக சாதனைத் கவிதைத் தொகுப்பு 5005 கவிஞர்களை ஆசிரியர்களாக இணைத்து உருவாக்கப்பட இருந்தது. என்ன காரணமோ ஏதுமறியேன்; ஈற்றில் 402 கவிஞர்கள் இணைந்துவிட்டனர். இந்நூலை தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் அழகுற வடிவமைத்துள்ளதோடு தரமான கவிதைகளையே தெரிவுசெய்துமுள்ளனர்.

எப்படியிருப்பினும் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் முயற்சிக்குத் தமிழ்ப் பற்றுள்ள ஒவ்வொரு தமிழரும் நன்றி கூற வேண்டும். உலகத் தமிழ்க் கவிஞர்களை இணைத்து இன்னும் பல நூல்களை ஆக்கி வெளியிடக் கூடியவர்கள் என நிரூபித்தமையைப் பாராட்ட வேண்டும். இவர்கள் பணி உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவுமென நம்புகிறேன்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் 402 கவிஞர்களின் கவிதைகள் உள்ளடங்கிய "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பைப் பதிவிறக்கிக்கொள்ள கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://tamilkavinjarsangam.yolasite.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.php

இந்நூலைப் பதிவிறக்கிப் பார்வையிட்ட பின்னர், உங்கள் கருத்தைப் பகிருங்கள். இந்நூலில் எனது கவிதை 128 ஆம் பக்கத்தில் உள்ளது. இந்நூலில் வெளியான எனது கவிதையைக் கீழே தருகின்றேன்.

கடற்கோள்(2004) காட்டிக்கொடுத்த நற்றமிழ்!

கடற்கோளென தொடுவானொடுவந்த அலைதான்
நத்தார் பெருநாள் வழிபாட்டையும் விழுங்கினான்
இந்து, இஸ்லாம், கத்தோலிக்கமெனத் தான்
எல்லா இன, மத, ஊர், நாட்டு உறவுகளைத் தான்
கூட்டியள்ளிக் கொண்டுபோன துயரைத் தான்
எவர் தான், மறப்பது எப்படித் தான்?
ஆற்றுப்படுத்த அறிஞர்கள் நூல்களை அலசத்தான்
குமரிக்கண்டம் தமிழர் நிலமென்று தான்
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி" என்று தான்
புறப்பொருள் வெண்பா மாலையிலே தான்
புலவர் ஐயனாரிதனார் கூறிய தமிழர் தான்
வாழ்ந்த குமரியுமுடையத் தமிழருமழியத் தான்
முன்னொருகால் விழுங்கியதும் கடற்கோள் தான்!
முன்தோன்றிய உலகின் மூத்த தமிழ்க்குடி தான்
எழுதிப் பேசிய உலகின் மூத்த மொழியைத் தான்
ஊடுருவி, துருவிப் பார்த்தால் தான்
வடமொழி, ஆங்கிலமெனப் பல மொழிகள் தான்
நுழைந்துவிட இன்றது தமிழில்லைத் தான்!
வேர்ச் சொல்லறிந்து நற்றமிழ் பேசேல் தான்
நாளை நாம் தமிழரில்லைக் காண்!


அன்புள்ள உறவுகளே!
இலவசத் தமிழ் நூல்களைப் பார்க்க
http://yarlpavanan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ 
என்ற பக்கத்தை நாடுக.

Sunday, February 17, 2013

ஒன்றே முக்கால் அடி தந்த அடி!


மரபுக் கவிதையில் நான்கு சீர்களை(சொல்களை)க் கொண்ட அடியை முழு அடி அல்லது நிறை அடி என்பர். திருக்குறளில் முதலாம் அடி நான்கு சீரையும் இரண்டாம் அடி மூன்று சீரையும் கொண்டிருக்கிறது. அப்படியாயின் திருக்குறள் ஒன்றே முக்கால் அடி என்பதில் தவறில்லையே!

திருக்குறளை ஆக்கித் தந்த திருவள்ளுவர் அவர்களின் இல்லாள் வாசுகி அம்மையார் ஆவார். வாசுகி அம்மையாரின் இழப்பைத் தாங்க முடியாத திருவள்ளுவரோ நான்கடியில் தன்துயரை இவ்வாறு விவரிக்கிறார்.

"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- இனிதா(அ)ய்
என் தூங்கும் என்கண் இரவு''

அதாவது, "அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!'' என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இவ்வாறு இணையத் தினமலர் ஆன்மீகப் பக்கத்தில் (http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=1766) படித்ததும் திருவள்ளுவர் திருக்குறளைத் தவிர எத்தனையோ நூல்கள் எழுதியிருப்பார் என எண்ணினேன். உடனே கூகிள் தேடுபொறியில் "திருவள்ளுவரின் நூல்கள்" என்று தட்டச்சுச் செய்து தேடினேன். "தமிழின் குரல்" என்ற பக்கத்தில் (http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_08.html) திருவள்ளுவர் எழுதிய நூல்களின் விரிப்பைக் கண்டேன்.

திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)

மேலும்,
16. சிற்ப சிந்தாமணி (ஜோதிட நூல்)
என்ற நூலையும் வள்ளுவர் தானாம் எழுதினார்.
சான்று: http://vidhai2virutcham.wordpress.com/2012/12/18/திருவள்ளுவர்-அருளிய-நூல்/
ஆக மொத்தத்தில் பதினாறு நூல்களை திருவள்ளுவர் எழுதியதாக மேற்படி தளங்களில் பொறுக்கினேன். இன்னும் எத்தனை நூல்களை எழுதியிருப்பாரோ எனக்குத் தெரியாது.

மேற்படி தளங்களில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்ததும் திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடியில் ஆக்கிய திருக்குறளைத் தவிர பல அடிகளில் பல நூல்கள் எழுதியிருக்கிறார் என்பது தெரியவருகிறது.

இந்தத் தகவலை எத்தனை ஆள்கள் நம்புவர்? ஒன்றே முக்கால் அடித் திருக்குறளைத் தானே நூற்று முப்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் உலகெங்கும் மொழி பெயர்த்துள்ளனர். ஏனையவை அவ்வாறு மொழி பெயர்க்கப்படாமையால் எம்மால் படிக்க முடியவில்லையா? எம்மால் படிக்க முடியாமையால் ஏனையவை அவ்வாறு மொழி பெயர்க்கப்படவில்லையா?

ஒன்றே முக்கால் அடித் திருக்குறளைப் படித்த எங்களுக்கு ஏன் ஏனைய அடிகளில் இருந்த திருவள்ளுவரின் ஏனைய நூல்களைப் படிக்க முடியாமற் போனது. இதுவே, நான் சொல்ல வந்த செய்தி ஆகும்.