Saturday, July 18, 2015

பாப்புனைய முன் இதைப் படியும் காணும்!


பாப் புனையும் வேளை - அதாவது
கவிதை எழுதும் வேளை - நாம்
எழுதுவது எல்லாம் பா/கவிதை என
எந்த அளவுகோலை வைத்து - நாம்
எடை போடுகிறோம் என்றறியாத
பா/கவிதை புனையும் உள்ளங்களே
"கவிதை என்பது உணர்வு கடத்தி..." என்ற
பதிவைக் கொஞ்சம் படித்தால்
தெளிவாகப் பா/கவிதை புனையலாமே!

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும்" என்கிறான்

இதனைப் படித்ததும் - தாங்கள்
எழுதிய/ புனைந்த பா/கவிதை இல்
எதுகை, மோனை, படிமம் - அத்தோடு
அழகான செய்தியும் இருப்பதை
உறுதிப்படுத்தினால் மட்டும் போதாதே!
மேலும்,
என்ன தான் இருக்க வேண்டுமென
அடுத்துவரும் அடிகளைப் படியுங்க...

கவிதை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை செய்தித் தாளும் இல்லை
கவிதை விளம்பரச் சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை
பிறர் உணரச் செய்பவை
கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில்
கவிதை ஒரு உணர்வு கடத்தி!
இவ்வாறு
அடுத்துவரும் அடிகளில் - அறிஞர்
உணர்த்த வருவது என்ன?

இலக்கண அறிவிற்குள் இறுக்காமல்
சொல்களை அடுக்கி அழகாக்காமல்
செய்தி மணம் வீசாமல்
விளம்பர முகம் வெளிப்படாமல்
நாம் உள்வாங்கிய உணர்வை
பிறர் உணரும் வண்ணம்
வெளிப்படுத்தும் ஊடகமே கவிதையென
அறிஞர் உணர்த்துவதைக் காணும்!

கவிதை வழியே நல்ல கோட்பாடுகளை (தத்துவங்களை)
எளிமையாகப் புகுத்தும் வல்லமை கொண்ட
அறிஞர் ரமணி அவர்களின் கவிதையை
ஒன்றுக்கு நான்கு தடவை படிக்க
பா/கவிதை புனையும் ஆற்றலும் திறனும்
தங்களுக்கு வந்து சேருமென்ற நம்பிக்கை
என் உள்ளத்தில் நிறைந்தமையால் பகிருகிறேன்!
பா/கவிதை புனைய விரும்பும் ஒவ்வொருவரும்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படித்து
பயனீட்ட முன்வாருங்களென அழைக்கின்றேன்!
http://yaathoramani.blogspot.com/2015/07/blog-post_16.html

7 comments:

  1. வாசித்தேன்... மகிழ்ந்தேன் ஐயா...

    ReplyDelete
  2. ஏற்கனவே வாசித்து விட்டாலும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. வழி மொழிந்ததற்கு நன்றி. கவிதைக்கு கவிதையிலேயே விளக்கம் அளித்திருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. நன்றி நன்றி ! சகோ !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.